Followers

Tuesday, July 14, 2015

மகர ராசியினர்க்கு


ணக்கம்!
          ஒவ்வொருவரும் சொந்த வீடு கட்டி வாழவேண்டும் என்று கடந்த பூஜையில் ஒரு வேண்டுதலை அம்மனிடம் வைத்தேன். கண்டிப்பாக அதற்கு முயற்சி செய்யும் நபர்களுக்கு அது அம்மன் அருளால் நடக்கும்.

கோச்சாரப்படி குரு பகவான் எட்டாம் வீட்டில் இருக்கும் மகரராசி நண்பர்கள் தற்பொழுது எட்டாம் வீட்டில் இருக்கும் குருவால் வீடு கட்டும் முயற்சியில் இறங்கினால் உடனடியாக அதற்கு வாய்ப்பு அமைந்துவிடும்.

குரு எட்டாவது வீட்டில் அமர்ந்தால் பிரச்சினை என்று மட்டும் நினைக்கவேண்டாம். குரு பகவான் உங்களின் ராசிக்கு மூன்றாவது வீடு மற்றும் பனிரெண்டாவது வீட்டிற்க்கு அதிபதி. அவர் மறைவு ஸ்தானத்தில் அமர்வது நல்ல யோகம் தான். அதனால் நீங்கள் தாராளமாக எல்லா விதமான நல்ல முயற்சிகளையும் மேற்க்கொள்வது நல்லது.

குறிப்பாக வீடு கட்ட தொடங்கினால் எளிதில் வீடு கட்டிவிடலாம். கையில் காசு இல்லை எப்படி கட்டுவது என்று நினைக்கவேண்டாம். கடவுள் அருளால் உங்களுக்கு நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: