Followers

Wednesday, July 1, 2015

காயத்ரி மந்திரம்


ணக்கம்!
          இன்றைய தேதியில் யார் காயத்ரி மந்திரம் செய்கிறார்கள் என்று ஒரு கேள்வியை கேட்டால் நமது பதிவில் உள்ளவர்கள் அப்படி என்றால் என்ன என்று கேட்பார்கள். ஒரு சில காலத்தில் காயத்ரி மந்திரத்தைப்பற்றி நமது பதிவில் ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது வரும். காலத்தின் கோலம் மற்றும் தனிப்பட்ட வேலை பளு அதிகம் என்பதால் அதனை நிறுத்திவிட்டேன். அதாவது எப்படி செய்யவேண்டும் என்பதை சொல்லுவதை நிறுத்திவிட்டேன்.

குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்ய சொல்லிருந்தேன். இதனையாவது ஒரு சிலர் செய்துக்கொண்டிருப்பது தெரியவருகிறது. ஒரு சிலரை சந்திக்கும்பொழுது பச்சைப்பரப்புதலை செய்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியுள்ளனர்.

எந்த ஒரு பூஜை முறையும் என்னால் கண்டுபிடித்தது கிடையாது. முன்னோர்கள் சொன்னதை நான் எடுத்து சொல்லுகிறேன். அதனை கூட தொடர்ச்சியாக செய்யமுடியவில்லை என்றால் ஒரு குருவை பின் தொடர்ந்து ஆன்மீகத்தை எப்படி நம்மால் கற்றுக்கொள்ளமுடியும்.

நான் முதன் முதலில் இந்த பூஜையை எல்லாம் செய்ய சொன்னவர்கள் எல்லாம் இன்று வரை தொடர்ந்து செய்து வந்திருந்தால் அவர்களின் நிலை இன்று எந்தளவுக்கு உயர்ந்திருக்கும்.

ஆன்மீக வாழ்வு என்பது இது தான் ஆன்மீகம் உங்களை வரவேற்க எந்த நேரமும் தயாராக இருக்கும். நாம் அதனை பின்தொடர்ந்து செல்வதில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியும் அல்லது ஆன்மீகத்தை கற்கமுடியும் நாம் அதனை விடாமல் தொடர்ந்து செல்லவேண்டும். 

இனிமேலாவது ஆன்மீகத்தில் ஈடுபட்டு உங்களின் வாழ்வை ஆன்மீகத்தோடு இணைந்து கொண்டாடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

Unknown said...

ஐயா,எனது ஜாதகத்தில் 9ல்ராகு,மாந்தி சேர்கை இந்த அமைப்பு பித்ரு தோசமா?அப்படியானால் பரிகாரம் கூறவும்.பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது?

Kalairajan said...

அய்யா
அம்மனின் அருளால் தொடர்ந்து நான் காயத்திரிமந்திரம் செய்துவருகிறேன்

Unknown said...

ஐயா,உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி!