Followers

Thursday, July 9, 2015

சொந்த வீடு


ணக்கம்!
          நமது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்பொழுது அவர்களின் வீடுகளை நான் பார்ப்பது உண்டு. பெரும்பாலும் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். 

ஒவ்வொருவரின் வாழ்க்கை லட்சியமாக சொந்த வீடு அமைய வேண்டும் என்று நமது அம்மனிடமும் உங்களின் குலதெய்வத்திடமும் வேண்டிக்கொள்ளுங்கள். சொந்த வீடாக இருந்தால் மட்டுமே பல வசதிகளை நீங்கள் செய்துக்கொள்ளமுடியும்.

எனக்கு என்ன பிரச்சினை என்றால் உங்களுக்கு சொந்த வீடு அமைந்தால் என்னால் நிறைய விசயங்களை உங்களுக்கு செய்து தரமுடியும்.வாடகை வீடு என்றால் அதில் பூஜை கூட செய்ய வீட்டின் உரிமையாளர் அனுமதி தரமாட்டேன்கிறார்.

வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று செய்வதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. எப்படியாவது உங்களுக்கு ஒரு சொந்த வீட்டை அமைத்துக் கொண்டுவிட்டால் உங்களின் வாழ்க்கை மிக உயர்ந்த இடத்திற்க்கு இட்டு செல்ல முடியும்.

இந்த மாதம் அம்மன் பூஜை செய்யும்பொழுது நமது நண்பர்களுக்கு ஒரு வீடு அமைய வேண்டும் என்று நான் பிராத்தனை வைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: