Followers

Thursday, November 12, 2015

கட்டாய கல்வி


ணக்கம்!
          இன்றைய காலத்தில் அனைவரும் படித்தவர்களாக இருக்கின்றனர். பாக்கியஸ்தானம் அனைவருக்கும் படிப்பை தரவில்லை. காலத்தின் கட்டாயம் அனைவருக்கும் படிப்பை தந்துள்ளது.

இன்றைய காலத்தில் ஒருவர் இரண்டு அல்லது மூன்று டிகிரியை முடித்திருப்பார். மூன்று டிகிரியை முடித்திருந்தால் கூட அவர்களுக்கு நல்ல குணம் என்பது இருக்காது. 

பாக்கியஸ்தானம் நல்ல குணத்தை கொடுப்பதில்லை. படிப்பை முடித்திருந்தால் கூட குணத்தை கொடுப்பதில்லை. எத்தனையோ நன்றாக படித்தவர்களை நீங்கள் பார்த்திருக்ககூடும் அவர்கள் சல்லிதனமாக நடந்துக்கொள்வதை நீங்கள் பார்க்கலாம். ஏன் இப்படி என்றால் நல்ல குணத்தை பாக்கியஸ்தானம் கொடுப்பதில்லை. பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் நல்ல படிப்பையும் நல்ல குணம் கொடுத்திருக்கும்.

இன்றைய காலத்தில் படித்த அனைவர்களுக்கும் நல்ல குணத்தை பாக்கியஸ்தானத்தை கொடுத்திருந்தால் இந்த நாடு என்றே முன்னேற்றம் அடைந்திருக்கும். காலத்தின் கட்டாயத்தில் தான் படிப்பு வருகிறதோ தவிர பாக்கியஸ்தானம் படிப்பை கொடுப்பதில்லை.

நாளை அம்மன் பூஜை நடைபெறுகிறது

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: