Followers

Sunday, November 22, 2015

மழை


வணக்கம்!
         இன்று தான் எங்கள் பகுதியில் விடியற்காலையில் இருந்து மழை பெய்துக்கொண்டு இருக்கின்றது. உலகம் முழுவதும் பெய்த மழை தஞ்சாவூரில் இல்லை. இன்று பரவாயில்லை காலையில் இருந்து நல்ல மழை.

மழைப்பற்றி நிறைய கருத்துக்களை மீடியாக்கள் பரவவிட்டாலும் ஒரு சாஸ்திரகருத்து என்று ஒன்று உள்ளது. அது மழை பல வருடங்கள் பேயாமல் இருந்தாலும் கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் அறுபது வருடத்திற்க்கு ஒரு முறையாவது கடுமையான வெள்ளபெருக்கு ஏற்படும் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆற்றை அல்லது குளத்தை தூற்று நாம் வீடு கட்டினால் அறுபது வருடத்திற்க்கு ஒரு முறையாவது ஆறு இருந்த இடத்தில் தண்ணீர் வந்துவிடும். இயற்கையை எதிர்த்து நாம் வாழாமல் இயற்கையோடு இணைந்து வாழவேண்டும்.

இயற்கையை எதிர்த்து வெல்லமுடியாது இயற்கையோடு செல்லும்பொழுது நம்மை அது அரவணைத்துசெல்லும். நீங்கள் எங்கு வீடு கட்டினாலும் வீடு வாங்கினாலும் நீர் வழிதடங்களை பார்த்துவிட்டு அந்த இடத்தில் ஆறு அல்லது குளம் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: