Followers

Tuesday, November 17, 2015

கார்த்திகை முதல் நாள்


வணக்கம்!
          இன்று கார்த்திகை 1 ஆம் தேதி என்பதால் ஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா. நமது நண்பர்களில் ஐயப்ப பக்தர்கள் இருக்கலாம். அவர்கள் மாலை அணிந்து இருக்கும் நாளிலில் நல்ல பக்தியோடு இருங்கள். 

விரதம் இருக்கும் நாள் மிகவும் முக்கியமான நாளாக கருதுங்கள். உங்களின் பாவத்தை போக்கும் நாளாக இது இருக்கும். பாவத்தை போக்கும் நாளில் பாவத்தை சேர்க்கும் நாளாக மாற்றிவிடுமால் பார்த்துக்கொள்ளுங்கள்.

காட்டுபகுதிக்கு செல்லும்பொழுது காட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணம் இருக்கவேண்டும். காடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலும் செய்யாமல் இருக்கவேண்டும்.

சபரிமலைக்கு செல்லும்பொழுது கவனத்தோடு சென்று வாருங்கள். வாகனங்களில் செல்லும்பொழுது பகலில் செல்லுங்கள். இரவு பயணத்தை தவிர்த்துவிடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: