Followers

Wednesday, November 25, 2015

கார்த்திகை தீபம்


வணக்கம்!
          தவிர்க்கமுடியாத காரணத்தால் இன்று கார்த்திகை தீபத்திற்க்கு திருவண்ணாமலை செல்லமுடியவில்லை. திருவண்ணாமலை தீபம் ஏற்றும்பொழுது அனைத்து தெய்வங்களும் அங்கு இருக்கும் என்பார்கள். அதாவது அனைத்து தேவதைகளும் அந்த இடத்திற்க்கு வரும் என்பார்கள்.

தீபம் ஏற்றும் நாளில் அங்கு தெய்வசக்தி இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இன்று சென்று தீபத்தை தரிசனம் செய்பவர்கள் தரிசனம் செய்யலாம். தெய்வசக்தி உங்களுக்குள் நன்றாக வரும்.

திருவண்ணாமலைக்கு செல்லமுடியாதவர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அனைத்து கோவில்களிலும் சொக்கபானை என்ற ஒரு தீபம் ஏற்றுவார்கள் அதனையும் தரிசனம் செய்யலாம்.

மாலை ஆறுமணிக்கு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அதிகமாக அகல் தீபம் ஏற்றி வீடு முழுவதும் ஒளிவீச செய்யுங்கள். வாழ்வில் என்றும் ஆனந்த ஒளிவீசம்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: