Followers

Thursday, November 26, 2015

பொறுமை என்னும் பாக்கியம்


வணக்கம்!
          மனிதனுக்கு பணம் வந்துவிட்டால் அவனுக்கு கண் தெரியாது என்பார்கள். தலை கால் புரியாமல் ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவார்கள். பணம் வந்தால் பொறுமையாக இருப்பதில்லை.

என்னை நாடி வரும் நண்பர்களிடம் நான் சொல்லுவது எல்லாம் நீங்கள் வறுமையாக இருக்கும்பொழுது பொறுமையாக இருப்பது போல் பணம் வந்தபிறகு பொறுமையை கடைபிடியுங்கள் என்று சொல்லுவேன். 

பணம் வந்துவிட்டாலே அவனோடு சேர்ந்து பல பிரச்சினைகளும் வந்துவிடும். இன்றைய நிலையில் இதனை நான் எழுதுவது படித்த நண்பர்களுக்கு கிடையாது. பல கிராமத்து இளைஞர்கள் இப்படி இருப்பதால் இதை எழுதுகிறேன்.

பல இடங்களில் நான் கிராமத்தில் உள்ள இளைஞர்களிடம் இதனை காண்பது உண்டு. அதனால் நமது பதிவில் அடிக்கடி இந்த பொறுமையை வலியுறுத்துகிறேன். ஒருவனுக்கு பணம் வந்துவிட்டால் அந்த பணத்தை அவன் கடைசிவரை பயன்படுத்தவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

ஒரு சில ஜாதகங்களில் பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சனி சேர்ந்து இருக்கும் ஜாதகர்கள் பொறுமையை இழந்து சண்டை போடுபவர்களாக இருக்கின்றார்கள். உங்களுக்கு இப்படி அமைந்து இருந்தால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. 

எந்த ஒரு அடையாளத்தையும் விரும்பாதீர்கள் அதாவது ஒரு சில ஜாதி பெயரை சொல்லி சண்டை போட சொல்லுவார்கள். அதற்குள் கூட நீங்கள் சென்றுவிடாதீர்கள். உங்களுக்கு வம்பு தேடிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு