Followers

Tuesday, November 3, 2015

உண்மையான பாக்கியம் செய்தவர்கள்


ணக்கம்!
          ஒவ்வொருவரும் செய்த பாக்கியம் என்பதற்க்கு ஒரு சில ஊர்களில் ஏன் தற்பொழுது தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு விசயத்தைப்பற்றி பார்க்கலாம். ஆண்களை பெற்றால் வாரிசு உரிமை வந்துவிட்டது என்ற நிலை இருந்தது. நமக்கு வாரிசு வந்துவிட்டது என்று பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

இன்றைய காலத்தில் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றவர் கதி தெருவில் தான் நிற்கவேண்டும். இரண்டு பெண் குழந்தைகளை பெற்றால் அவன் மிகப்பெரிய புண்ணியம் செய்தவன் ஆகிவிடுகிறான்.

திருமணம் ஒரு பெண்ணிற்க்கு செய்துவிட்டால் பையனை பெண்ணின் அப்பா அவரின் கைக்கு கொண்டு வருவதற்க்கு முயற்சி செய்கிறார்கள். பெற்ற அப்பா அம்மா எப்படி இருந்தாலும் பரவாயில்லை நீ நான் சொல்லுவது போல் தான் இருக்கவேண்டும் என்று பெண்ணின் தந்தை முடிவு செய்துவிடுகிறார். 

பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் இன்று பெரிய பாக்கியம் செய்து இருக்கிறார்கள். ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் பெரிய பாவத்தை செய்து இருக்கிறார்கள். ஒரு சில இடத்தில் நான் பார்த்து இருக்கிறேன் சொத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு நீ நாங்கள் சொல்வது போல் செய்யவில்லை என்றால் பெண்ணின் வீட்டாரே இருவரையும் பிரித்துவைக்கிறார்கள். உலகம் அப்படி போய்க்கொண்டு இருக்கின்றது.

நீங்களே பல இடங்களில் பரவலாக பார்க்கமுடியும். பெண்ணை பெற்றவர்கள் காரில் சென்றுக்கொண்டு இருப்பார்கள். பையனை பெற்றவர்கள் சாப்பாட்டிற்க்கு வழி இல்லாமல் இருப்பார்கள். கஷ்டப்பட்டு சொத்தை சேர்த்து அடுத்தவர்கள் வாழுவதற்க்கு வழி செய்துக்கொடுத்துவிடுவார்கள். பெண்ணை பெற்றவர்களுக்கு தற்பொழுது நல்ல பாக்கியம் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

Unknown said...

Do you think sir, this is a good sign? you are saying this is a backiam.

nallur parames said...

Naattu nadappu ithu than.

Unknown said...

My partner has 3 girl child and i having a boy