Followers

Wednesday, November 4, 2015

விளக்கம்


வணக்கம்!
          நேற்று பதிவை பார்த்துவிட்டு பல நண்பர்கள் தகவலை அனுப்பிருந்தார்கள். இதில் என்ன உண்மையான பாக்கியம் என்று தலைப்பை போட்டுள்ளீர்கள் என்றார்கள்.

பெண்ணை பெற்றவர்கள் உண்மையான பாக்கியசாலிகள் என்று சொல்லிருந்தேன். பெண்ணை பெற்றால் அவன் பாவம் செய்தவன் என்று தானே சொல்லிக்கொண்டு இருந்தனர் ஆனால் இன்று நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது அல்லவா. அதனால் பெண்ணை பெற்றவர்கள் உண்மையான பாக்கியசாலிகள் என்று சொன்னேன்.

பொதுவாக நான் சூரியன் சந்திரன் என்று பதிவை எழுதி வைத்தால் படிக்கின்ற உங்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்பதால் கொஞ்சம் மாற்றி இப்படி பதிவை தருகிறேன். 

எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் அவரின் தந்தைக்கு சாப்பாடு சாப்பிட வழி இல்லாமல் வைத்திருந்தான் அந்த பையன். அந்த பையனின் மாமனார் தினமும் பீர் குடித்துக்கொண்டு இருப்பார். பணம் எல்லாம் இந்த பையனின் பணம். பையனின் தந்தை சாப்பாடு இல்லாமல் இறந்துவிட்டார். உலகம் அப்படி மாறிவிட்டது.

நம்ம ஆளுங்க பணம் சம்பாதிக்கிறத்தில் காட்டுகிற திறமையை பையனை வளர்க்கிறதில் காட்டுவதில்லை. ஆண் குழந்தையை பெண் குழந்தையை வளர்ப்பது போலவே வளர்கிறார்கள். அவன் என்ன செய்வான்.

இன்றைய தேதியில் ஒரு ஆண் ஆண் தன்மையோடு இருந்தால் கூட அவனால் வாழமுடிவதில்லை. அவனுக்கும் அவனின் மனைவிக்கும் ஒத்துக்கொள்ளவதில்லை. பெண் தன் வீட்டு பக்கம் இழுக்கும் விதத்தில் தான் நடந்துக்கொள்கிறார்கள். என்ன செய்வது எல்லாம் கலியுகம் என்று சொல்லவேண்டியது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: