Followers

Thursday, November 5, 2015

அம்மன் பூஜை


ணக்கம் !
          நமது அம்மன் பூஜை அடுத்த வாரத்தில் நடைபெறும். தீபாவளி முடிந்த பிறகு அம்மன் பூஜையை வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை அளிப்பவர்கள் அனுப்பி வைக்கலாம்.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையை நடைபெறவேண்டும் என்று வேண்டுதல் வைப்பார்கள். எந்த ஒரு வேலையும் தொடங்குவதற்க்கு முன்பு ஒரு பூஜை செய்த பிறகு அந்த வேலையை தொடங்கினால் நல்லதாக அது அமையும்.

உங்களின் புதிய ஒரு வேலை நன்றாக நடைபெறவேண்டும் என்பதற்க்காகவும் பூஜைக்கு காணிக்கை அனுப்பிவைக்கலாம். உங்களின் வேலை நன்றாக நடைபெற அம்மன் உங்களுக்கு உதவும்.

பெரிய வேலையை தொடங்கும்பொழுது எந்த ஒரு பூஜையும் இல்லாமல் செய்யும்பொழுது அந்த வேலையின் பாதிப்பு உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களை பாதிக்கும். குடும்ப நபர்களை பாதிக்காமல் இருக்க இப்படிப்பட்ட பூஜைகளில் கலந்துக்கொள்வதும் உங்களுக்கு நல்லதாக அமையும்.

அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றிக்கொடுத்தவர்கள் காணிக்கையை அனுப்பிவைக்கலாம். புதிய வேண்டுதலை அம்மன் பூஜையின் பொழுது வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: