Followers

Saturday, November 7, 2015

பண்டிகையில் தான தர்மம்


வணக்கம்!
          தற்பொழுது தீபாவளி பண்டிகை வருகிறது. எங்கு பார்த்தாலும் கூட்டமாக இருக்கும். கூட்டமாக இருக்கும்பட்சத்தில் ஏதாவது கூட்டம் நெரிசல் உள்ள பகுதிக்கு சென்று மாட்டிக்கொள்ளாதீர்கள்.

தீபாவளிக்கு ஏழை மக்களுக்கு ஆடை தானம் செய்ய சொல்லிருந்தேன். எத்தனைபேர் செய்தீர்கள் என்று தெரியவில்லை. சொந்தகாரர்களுக்கு செய்வதை தவிர்த்து பிறர்க்கு செய்யுங்கள். குறிப்பாக பெண்கள் குழந்தைகள் போன்றவர்களுக்கு தானம் செய்யுங்கள்.

பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் மளிகைப்பொருட்கள் வாங்குவதற்க்கு கூட பணம் இல்லாமல் இருப்பார்கள். அந்த மாதிரி நபர்களுக்கு மளிகைப்பொருட்களை கூட நீங்கள் வாங்கிக்கொடுக்கலாம். அவர்களின் மனம் மகிழ்ச்சியாகும்.

இந்து மதத்தில் அதிக பண்டிக்கையை வைத்த காரணமே ஏழை மக்களுக்கு தான தர்மம் செய்யவேண்டும் என்பதற்க்காக தான் அதிக பண்டிக்கையை வைத்திருப்பார்கள். அதனை கடைபிடித்து பண்டிகையின்பொழுது தானம் செய்யுங்கள்.

தற்பொழுது நாம் பார்த்துக்கொண்டு இருப்பது கூட பாக்கியஸ்தானம் தான். பாக்கியஸ்தானத்தின் பொது கருத்தே தான தர்மம் செய்வது தானே. பண்டிக்கையின்பொழுது தான தர்மம் செய்வதும் பாக்கியஸ்தானத்திற்க்கு நாம் செய்யும் ஒரு பரிகாரம்போல் இருக்கும். தாராளமாக செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: