Followers

Tuesday, November 17, 2015

அறிவு இல்லாத பணக்காரர்கள்


ணக்கம் !
          மிகப்பெரிய அறிவாளி எல்லாம் சம்பாதிப்பது கிடையாது. ஏனோ தானோ என்று இருப்பவர்கள் சம்பாதிப்பார்கள். நான் நிறைய பேர்களை பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு பொதுவான சின்ன விசயம் கூட தெரியாமல் இருப்பார்கள் ஆனால் கோடி கோடி சம்பாதிப்பார்கள்.

பெரிய அறிவாளியாக இருப்பார்கள் அவர்களிடம் ஐந்து நிமிடத்தில் ஐந்து கோடி சம்பாதிக்கும் அறிவை பெறலாம் ஆனால் அவர்களால் ஒரு ரூபாய்க்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஜாதககதம்பத்தில் இருந்து கூட நிறைய நண்பர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் நிறைய அறிவாளியாக இருப்பார்கள் ஆனால் அவர்களால் சம்பாதிக்கமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

இதனை எல்லாம் நான் கண்காணிக்கும்பொழுது அவர்களின் பாக்கியஸ்தானம் மிக நன்றாக அமைந்தவர்களுக்கு நன்றாக கடவுள் கொடுத்துக்கொண்டிருக்கிறான். பாக்கியஸ்தானம் கெட்டவர்கள் அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அறிவு இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்தும் வழிகளை நாம் மேற்க்கொண்டு நல்ல வாழ்க்கையை வாழ்வோம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: