Followers

Tuesday, December 1, 2015

இனிய தொடக்கம்


வணக்கம்!
           தற்பொழுது பாக்கியஸ்தானத்தைப்பற்றி தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஸ்தானம் நன்றாக வேலை செய்யும்பொழுது மட்டுமே நமக்கு தடையின்றி காரியம் நடைபெறும். ஒவ்வொரு வேலை நடைபெறும்பொழுதும் தடையின்றி காரியம் நடந்தால் வெற்றியை நோக்கி வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

நமக்கு தடை அதிகம் ஏற்பட்டு வாழ்வில் எந்த வேலையும் நடைபெறாமல் போகும்பொழுது நமக்கு வெறுப்பு வந்துவிடுவது இயல்பு. பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும் ஒருவர் தான் ஒரு கோவிலை கட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கும். இந்த நாட்டில் இருக்கும் பணக்காரர்கள் அனைவரும் கோவிலை கட்டிவிடுகிறார்களா என்ன ? யாராவது ஒருவர் கோவிலை கட்டுவார். அவருக்கு தான் பாக்கியம் இருக்கும்.

நம்மிடம் பணம் அதிகம் இருந்தால் கூட இப்படிப்பட்ட காரியங்களை செய்துவிடமுடியாது. கோவிலை கட்டுவதற்க்கும் பாக்கியம் இருக்கவேண்டும். பாக்கியம் இருக்கும்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும்.

கோவிலை கட்டமுடியவில்லை ஏதாவது ஒரு கோவிலுக்கு நம்மால் உதவி செய்யமுடியும் என்றால் நம்மால் அது முடியும். உங்களுக்கு பாக்கியம் இருந்தால் இந்த வேலையிலாவது ஈடுபடுவீர்கள். அந்த பாக்கியம் இருக்கின்றதா என்பது உங்களின் நடவடிக்கையை பொறுத்த விசயம் அது அதனை நீங்கள் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்தால் ஒரு கோவிலை கட்டுவதற்க்கு சம்பாதியுங்கள். அப்படி சம்பாதிக்கமுடியவில்லை என்றால் கோவிலை பராமரிக்க அல்லது கோவிலுக்கு பூஜை செய்ய உதவி செய்யுங்கள். உங்களின் பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: