Followers

Saturday, December 12, 2015

அனுபவம்


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தில் தொடர்ந்து படித்து வரும் நண்பர்களை அந்தந்த ஊர்களுக்கு நான் செல்லும்பொழுது சந்தித்து பேசி அவர்களின் குறைகளை அம்மனை வைத்து நிவர்த்தி செய்வது உண்டு.

என்னால் முடிந்தளவுக்கு பயணம் மேற்க்கொண்டு சென்று சந்தித்து வருகிறேன். வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கு பரிகாரமும் செய்துக்கொடுப்பது உண்டு. ஒவ்வொருவரின் பிரச்சினைக்கும் அவர்களின் வாழ்வில் சார்ந்து பரிகாரமாக அமைத்துக்கொடுப்பது உண்டு.

ஒரு மனிதனுக்கு மிக சரியான வழிகாட்டியாக ஜாதக கதம்பம் இருக்கும். அதே நேரத்தில் நிறைய நண்பர்கள் இன்னுமும் என்னை சந்திக்காமல் இருப்பதும் தெரியவருகிறது. நான்கு வருடங்களுக்கு மேல் படிப்பவர்கள் கூட சந்திக்காமல் இருந்து வருகின்றனர். அவர்களின் கர்மா அப்படி இருக்கலாம். 

ஏன் என்னை சந்திக்கவேண்டும்?

இத்தனை நாள் இதனை படித்து வருகின்றீர்கள். உங்களின் எண்ணமும் எனது எண்ணமும் ஒரே கோட்டில் இருப்பதால் இதனை படிக்கமுடியும். சந்திக்கும்பொழுது நிறைய புரிதல் ஏற்படும் அல்லவா அதனால் சொன்னேன்.

உங்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கும்பொழுது என்னை சந்தித்தால் அதற்கு தீர்வு இயற்கையாகவே கிடைக்கலாம் அந்த காரணத்தாலும் சொல்லுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: