Followers

Wednesday, December 16, 2015

பாக்கியஸ்தானமும் இயல்புவாழ்க்கையும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் நான் சொல்லிக்கொண்டு வரும் கருத்துக்கள் ஜாதககதம்பம் படிப்பவர்களுக்கு பிடிக்கும் அதே நேரத்தில் இதனை நீங்கள் வெளியில் சொன்னால் உங்களை கேலி செய்வார்கள். நீங்கள் இருக்கும் தளம் என்பது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒன்று. பிறர் வேறு விசயத்தில் இருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் தான தர்மம் செய்யுங்கள் என்று சொன்னால் உங்களை முதலில் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.

உங்களின் வேலை இதனைப்படித்து இதுபோல் நடக்கவேண்டும். உங்களின் நிலைக்கு பிறர் வருவதற்க்கு அதிக காலம் எடுக்கும். என்ன காரணம் என்றால் அவர்களுக்கு இன்னமும் காலம் இதற்கு வரவில்லை என்று தான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

உங்களின் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் சென்று நீங்கள் பாக்கியஸ்தானத்தில் உள்ள கருத்தை சொல்லுங்கள். அவர்களின் பதில் இவன் ஏண்டா இப்படி மாறிவிட்டான். தான செய்யனுமாமே அவன் அவன் தண்ணி அடிப்பதற்க்கே நேரம் இல்லை என்று இருக்கின்றோம் என்று சொல்லுவார்கள்.

இப்படி எல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு முறை வேண்டுமானால் சொல்லலாம். எந்த நேரமும் இதனைப்பற்றி சொல்லதேவையில்லை. பாக்கியஸ்தானத்தில் செய்துக்கொண்டிருக்கும் விசயத்தில் உடனடியாக பலனை எதிர்பார்க்காதீர்கள் அது ஒருபுறம் செய்துக்கொண்டே இருப்பாோம் என்றாவது ஒரு நாள் வரட்டும் என்று இருந்துவிடுங்கள்.

பொதுவாக நாங்கள் செய்யும் பரிகாரம் அனைத்தும் பாக்கியஸ்தானத்தை முன்னிறுத்தி அதன் வழியாக பரிகாரம் செய்வோம். கேரளமுறையில் செய்யும் பரிகாரமும் கூட இப்படி தான் செய்வார்கள். பரிகாரம் என்று வரும்பொழுது நீங்கள் இப்படி செய்துக்கொண்டு பலனை உடனடியாக எதிர்பார்க்கலாம். என்றோ ஒரு நாள் பலன் வரட்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள் எங்கோ யாருக்கும் தெரியாமல் கூட செய்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: