Followers

Tuesday, December 22, 2015

விளக்கம்


வணக்கம்!
          பொதுவாக நம்ம ஆட்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அனைத்தையும் படிப்பதோடு சரி அதனை எடுத்து எப்படி நம் வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதை யாரும் சிந்திப்பது கிடையாது.

பாக்கியஸ்தானத்தில் சொன்ன கருத்தை என்னிடம் வந்து தான் பரிகாரம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் என்பது எல்லாம் கிடையாது. நீங்களே செய்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் யார் உங்களுக்கு சரியாக வருவார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களிடமே செய்துக்கொள்ளலாம்.

இதனை எல்லாம் சொல்வதின் அர்த்தம் பல பேர் அவர்களால் முடிந்தளவுக்கு பரிகாரமே அல்லது ஏதோ அவர்களின் வழியில் ஆன்மீகத்தின் வழியில் சென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள் என்பதற்க்காக தான் சொல்லுகிறேன். 

சும்மா படித்துவிட்டு அப்படியே சென்றுவிடாமல் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சுட்டிகாட்ட பல பதிவுகளை கொடுக்கிறேன். அனைத்தையும் என்னுடைய அனுபவதில் இருந்து கொடுப்பதால் எப்படியும் இது உங்களுக்கு வேலை செய்யும் அதில் எந்த ஒரு சந்தேகமும் கொள்ளவேண்டியதில்லை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: