Followers

Wednesday, December 23, 2015

சிவன் நாள்கள்


ணக்கம்!
          தொடர்ச்சியாக சிவனின் நாளாக வருகின்றது. அதாவது இன்று பிரதோஷம் நாளை பெளர்ணமி அதன் பிறகு ஆருத்ரா தரிசனம் என்று சிவனின் நாளாக வருகின்றது. 

இன்று பிரதோஷத்திற்க்கு கோவிலுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு இந்த பதிவை தருகிறேன். ஒவ்வொரு பிரதோஷத்திற்க்கும் இரண்டு கோவிலுக்கு அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுத்துவிடுவது உண்டு. 

பதிவில் ஏன் சொல்லுகிறேன் என்றால் இதனை நீங்களும் செய்யவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். உங்களால் ஒரு கோவிலுக்கு வாங்கிக்கொடுங்கள். இதனை கடைசிவரை கடைபிடித்து வாருங்கள். பெரிய அளவில் செலவு ஆகாது. குறைந்த செலவில் நமக்கு புண்ணியம் சேர்க்கும் நிகழ்வாக அமைந்துவிடும்.

நாளை பெளர்ணமி கிரிவலம் செல்லுங்கள். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் அப்படி இல்லை என்றால் உங்களின் ஊரில் உள்ள சிவன் கோவிலிலேயே செல்லலாம். வெள்ளிக்கிழமை மாலை உங்களின் குலதெய்வத்திற்க்கு அல்லது இஷ்டதெய்வத்திற்க்கு பச்சைபரப்புதலை செய்யலாம்.

நாளை பெரம்பலூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் உள்ள நபர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: