Followers

Thursday, December 3, 2015

சென்னை வெள்ளம்


ணக்கம்!
          நெட் பிரச்சினை இருப்பதால் பதிவை தரமுடியவில்லை. இப்பொழுது தான் கொஞ்சம் கிடைத்தது. உடனே பதிவை தருகிறேன். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பதிவை படிக்க கூட முடியாமல் எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள். என்னால் முடிந்தவரை என்னிடம் உள்ள தொடர்பு நம்பரை வைத்து தொடர்புக்கொண்டு பேசினேன். போனை தொடர்புக்கொள்ளமுடியாத நண்பர்களுக்கு குறுந்தகவலை அனுப்பியுள்ளேன். சென்னையை தவிர மற்ற ஊர்களில் உள்ள நண்பர்களும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டேன்.   

பழைய பதிவில் நான் சொல்லிருக்கிறேன். அனைவரும் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுருந்தேன். கற்று இருந்தால் அந்த நீச்சல் இன்று பயன்பட்டு இருக்கும். அதே நேரத்தில் பல பேரை காப்பாற்ற முடியும்.

மனித தவறுகளால் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகினாலும் மன்னித்துவிட்டு இறைவனிடம் பிராத்தனை செய்வோம் மனிதர்களை காப்பாற்ற இறைவனிடம் பிராத்தனை செய்யலாம்.

வெள்ளத்தை காட்டி ஒரு சிலர் உலகம் அழியபோகின்றது எங்களிடம் வாருங்கள் என்று ஆன்மீகம் கூட இந்த நிலையில் பேசலாம். இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்கலாம். அம்மனிடம் பிராத்தனை செய்வோம். தாங்கிக்கொள்ள வலிமையை தரும்.

கட்டண பதிவில் பதிவுகளை எழுதமுடியவில்லை. நெட் சரியான உடன் அனைத்து பதிவையும் சேர்த்து தந்துவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: