Followers

Wednesday, December 16, 2015

மாதங்களில் நான் மார்கழி


ணக்கம்!
          நாளை மார்கழி மாதம் பிறக்கிறது. மார்கழி என்றாலே ஆன்மீகமாதமாகவே இருக்கும். இதுநாள் வரை காலை எட்டுமணி வரை தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இந்த மாதத்தில் மட்டுமாவது விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு இறைவனை தரிசனம் செய்யலாம்.

விடியற்காலை எழுந்துவிடுவது கூட முடியும் ஆனால் அந்த நேரத்தில் குளிப்பது எப்படி என்பவர்கள் இருக்கலாம். தினமும் குளிக்கும்பொழுது அது பழக்கம் ஏற்பட்டு நீங்கள் தானாகவே குளிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

மேலே சொன்னவற்றை எதுவும் செய்யமுடியவில்லை என்பவர்கள் தினமும் நீங்கள் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். விடியற்காலையில் பல கோவில்களில் விஷேச தரிசனம் நடக்கும் அதிலும் பங்குக்கொள்ளலாம்.

இறைவழிபாட்டிற்க்கு என்று ஒதுக்கவேண்டிய காலம் இந்த மாதம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள கோவிலில் உள்ள இறைவனை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். இந்த மாதம் நானும் பல கோவில்களுக்கு செல்ல உள்ளேன். நீங்களும் சென்று வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: