Followers

Saturday, December 5, 2015

பாக்கியஸ்தானம் போல் செயல்படும் குரு தசா


வணக்கம்!
          மழை காரணமாக உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. கூடிய விரைவில் அனைத்து சரியாகவிடும் என்று நினைக்கிறேன். சரியான உடன் அதிக பதிவுகளை தந்துவிடுகிறேன். 

பாக்கியஸ்தானத்தை பார்த்து வந்தோம். பொதுவாக பாக்கியஸ்தானம் நன்றாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு கூட குரு தசா நடந்தால் அவர்களுக்கு பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும். ஒரு சில ஜாதகங்களில் நான் பார்த்து இருக்கிறேன் குரு தசா வந்தவுடன் நல்ல பாக்கியம் பெற்றவர்கள் போல் அவர்களுக்கு நடக்கும்.

குரு ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது வீட்டில் உள்ள காரத்துவத்தை அதிகம் கொடுப்பதால் அப்படி இருக்கலாம். குருதசாவில் உள்ளவர்கள் தான் அதிகம் பேர் கோவில் கட்டுவார்கள். அதிகமாக தான தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். பாக்கியஸ்தானத்தின் காரத்துவத்தை இவர்கள் செய்யும்பொழுது பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது தானே அர்த்தம் கொள்ளவேண்டும்.

ஒரு நண்பருக்கு கடுமையான பித்ருதோஷம் இருந்தது இளைமையில் கஷ்டப்பட்டார். குரு தசா வந்தவுடன் நல்ல நிலைக்கு வந்துவிட்டார். ஒரு கோவிலை கட்டி நிர்வகித்து வருகிறார். நிறைய ஆன்மீக பணிகளை செய்து வருகிறார். 

இதுவும் அவரின் பாக்கியம் தான் என்று சொல்லவேண்டும். குரு எந்த வீட்டில் இருந்து தசாவை நடத்தினாலும் பாக்கியஸ்தானத்தை பாேல் தான் செயல்படுகிறது. ஒரு சிலருக்கு வித்தியாசமாக நடைபெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: