Followers

Saturday, December 12, 2015

பொக்கிஷத்தை தரும் பாக்கியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்தால் அது புதையலை தரும் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு புதையலை விட பெரிய விசயங்கள் கிடைத்தன என்று சொல்லிருந்தார்கள். பாக்கியஸ்தானத்தைப்பற்றி நிறைய தாருங்கள் என்று சொல்லிருந்தார்கள். 

பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அல்லது குரு அமர்வது நல்லது தான் அதே நேரத்தில் இதனையும் நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும் அப்பொழுது தான் அனைத்தையும் நாம் பெறமுடியும். 

மனிதன் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கிறான் அதுவும் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கிறான் அதே நேரத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்க்கு அதற்கு ஒப்பான செலவையும் செய்யவேண்டும். அப்பொழுது தான் அவனுக்கு அந்த பெரிய விசயமும் கிடைக்கும்.

நம் ஆட்கள் எதுவும் இல்லாமல் நிறைய சம்பாதித்துவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அங்கு தான் பாக்கியஸ்தானம் உங்களுக்கு கொடுப்பதில்லை என்று சொல்லலாம். பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய செலவை நீங்கள் செய்யும்பொழுது அதுவாகவே மிகப்பெரிய பொக்கிஷம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

எச்சில் கையால் காக்கை கூட விரட்டகூடாது என்று கொள்கையோடு இருந்தால் பாக்கியஸ்தானம் கண்டிப்பாக உங்களுக்கு பொக்கிஷத்தை கொடுக்காது. கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள். என்னிடம் வந்து தான் இதனை எல்லாம் கொடுக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கொடுத்து இதனை பெறலாம்.

பாக்கியஸ்தானதில் உள்ள விசயங்களை நீங்கள் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக பெரிய புதையல் கிடைக்கும். புதையல் கிடைக்கவில்லை என்றாலும் கூட உங்களின் வாரிசு நன்றாக வாழும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: