Followers

Wednesday, December 9, 2015

பாக்கியஸ்தானத்தில் இராகு


ணக்கம்!
          ராகு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்தவுடன் நாம் கண்ணை மூடிக்கொண்டு பாக்கியஸ்தானம் கெட்டுவிட்டது. உங்களுக்கு பித்ருதோஷம் இருக்கின்றது உங்களுக்கு கஷ்டமான காலம் தான் என்று சொல்லிவிடுவோம். உண்மையில் நடப்பது அப்படியல்ல.

நான் பார்த்த ஏகாப்பட்ட ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் ராகு அமைந்தவர்கள் அனைவரும் மிகப்பெரிய வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஒரு சிலருக்கு ராகு ஒன்பதாவது வீட்டில் அமையும்பொழுது இளம்வயதில் அதிககஷ்டப்பட்டு இருக்கின்றார்கள். முப்பது வயதை கடந்தவுடன் நல்லவாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

ஒரு சிலர் அயல்நாடுகளில் அடிக்கடி பயணம் ஏற்கொண்டு மிகப்பெரிய அளவில் சம்பாதிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அயல்நாடுகளில் நிரந்தரமாக தங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

பொதுவாக பார்க்கும்பொழுது ராகு ஒன்பதாவது வீட்டில் அமரும்பொழுது அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றார்கள். ஆன்மீகத்தைப்பற்றி ஆன்மீககூட்டங்களில் பேசுபவர்களும் இவர்களாக தான் இருக்கின்றார்கள். 

நான் ஒரு சில அயல்நாட்டில் வசிப்பர்களின் ஜாதகர்களை பார்த்திருக்கிறேன். ஒன்பதாவது வீட்டில் ராகு அமைந்தவர்கள் இந்தியாவிற்க்கு அடிக்கடி வந்து இமயமலை போன்ற இடங்களில் தங்கி ஆன்மீகப்பயிற்சியை மேற்க்கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.

இராகு ஒன்பதில் அமைந்தால் கெடுதல் மட்டும் தான் நடக்கும் என்று சொல்லுபவதை விட நல்லதும் நடக்கும் என்றும் சொல்லவேண்டும். ஒரு சிலருக்கு கஷ்டம் ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடும்பொழுது இந்த நிலை மாறிவிடும்.

இன்று மதியம் திருப்பூர் பயணம்.  நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ளவர்கள் என்னை சந்திக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: