Followers

Saturday, May 30, 2015

புதிய வங்கி கணக்கு


வணக்கம்!
          எனது SBI வங்கிகணக்கில் ஏதோ தி்டிர் பிரச்சினை வந்துவிட்டது. பணம் செலுத்த முடியவில்லை என்று நண்பர்கள் சொன்னவுடன் தான் எனக்கே தெரிந்தது. உடனே மாற்று ஏற்பாடாக எனது ஊருக்கு அருகில் இருக்கும் பட்டுக்கோட்டையில் ஒரு வங்கியில் வங்கி கணக்கை துவங்கினேன். அதன் விபரங்களை தருகிறேன். 

Bank :  Karur Vysya Bank

Branch : Pattukkottai

Name : RAJESH S

Account Type : Savings account.

A/C Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623

இந்த வங்கி கணக்கில் பணத்தை செலுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பயண அனுபவம்


வணக்கம்!
          கோயம்புத்தூர் பயணத்தில் இந்த முறை மருதமலை சென்றேன். நான் சென்ற நேரத்தில் முருகன் தங்கரதத்தில் பவனி புறப்பட்டார். தங்கதேரை முழுமையாக இழுக்க வாய்ப்பு கொடுத்தார்.

          கோயம்புத்தூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன். இடைவிடாத பயணம் இருப்பதால் உடல் சோர்வு அதிகமாகவே இருக்கின்றது அதனால் நேரம் கழித்து பதிவை தருகிறேன்.

எப்பேர்பட்ட தோஷம் இருந்தாலும் இடைவிடாத பூஜையால் தற்பொழுது பலர் நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர். வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தவர்களுக்கு எல்லாம் நல்ல வாழ்க்கையை தற்பொழுது அமைத்துக்கொடுத்து இருக்கிறேன்.

என்னிடம் வந்த ஒரு நபர்க்கு நிறைய தோஷம் இருந்தது. நிறைய பிரச்சினை இருந்தது அவரின் இடைவிடாத முயற்சி மற்றும் பூஜையின் பயன் அம்மன் அவர்க்கு நல்ல வாழ்வை தொடங்கவைத்திருக்கிறது. பூஜைக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் செலவு செய்து இருப்பார். 

அவர் செலவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்த காரணத்தால் அவர் முன்னேற்றப்பாதையில் சென்றார். நீங்களும் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஏதாவது ஒரு வழிபாட்டையாவது தொடர்ந்து செய்து வாருங்கள் என்று சொல்லுகிறேன்.

உங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது அதனை சரிசெய்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தாராளமாக என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். பணம் நான் பணம் அதிகம் எதிர்பார்ப்பேன் அதற்கு சம்மதம் என்றால் தாராளமாக என்னை தொடர்புக்கொள்ளலாம்.

சென்னைக்கு வருவதாக ஒரு பயணதிட்டம் இருக்கின்றது. சென்னையில் என்னை சந்திக்க நினைக்கும் நண்பர்கள் எனது மொபைல் எண்ணிற்க்கு குறுந்தகவலை அனுப்புங்கள் உங்களை சென்னைக்கு வரும்பொழுது சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 29, 2015

உயிர்தன்மை


வணக்கம்!
          எங்கள் பகுதியில் எல்லாம் கிராம பகுதியில் கிணறு இருக்கும். தற்பொழுது அந்த கிணற்றில் எல்லாம் தண்ணீர்  கிடையாது. போர் செட் வந்த பிறகு கிணறுகளில் தண்ணீர் இருப்பதில்லை. பல கிராமங்களில் பழைமையான கிணறு எல்லாம் தற்பொழுதும் இருக்கின்றது.

பழைய கிணற்றை நீங்கள் உற்று பார்த்தால் அந்த கிணறு உங்களை உள்ளே கூப்பிடுவது போல் உங்களின் மனதிற்க்கு தெரியும். அதனாலே நீங்கள் கிணற்றில் தவறி விழுந்துவிடுவீர்கள். பல பேர்கள் கிணற்றில் விழுவது இந்த காரணத்தால் தான் இருக்கும். 

நீங்களே இதனை ஆராய்ச்சி படி செய்து பாருங்கள். அந்த கிணற்றை உற்று நோக்கினால் அது உங்களை கூப்பிடுவது போல் இருக்கும். பழைய கிணற்றின் தன்மை அது. இந்த உலகத்தில் எல்லாம் ஒரு உயிர்தன்மை போல் செயல்படும்.

நான் சிறுவனாக இருந்தப்பொழுது எங்களின் ஊரில் அனைவரின் வீட்டிலும் கிணறு இருந்தது. விடியற்காலையில் பெண்கள் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து முறைவாசலில் தெளிப்பார்கள். விடியற்காலை நான்கு மணிக்கு எழும்பொழுது தண்ணீரை எடுப்பதற்க்கு முன் வாளியை வேகமாக எடுத்து சத்தம் வருவது போல் செய்வார்கள். அது எதற்கு என்றால் கிணற்றில் இருக்கும் தண்ணீர் தூங்கிக்கொண்டிருக்குமாம் அந்த தண்ணீரை விழிக்க செய்க இப்படி சத்தம் கொடுத்து வாளியை உள்ளே விடுவார்கள்.

அனைத்திற்க்கும் ஒரு மதிப்பு கொடுத்து உயிர் தன்மையோடு வாழ்ந்த காலங்கள் இனி வராது. இதனை ஏன் உங்களி்டம் சொல்லுகிறேன் என்றால் உலகத்தை உற்று நோக்கினால் நிறைய விசயங்கள் உங்களுக்கு தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 28, 2015

சனிதசா பரிகாரம்


வணக்கம்!
          சனித்தசாவைப்பற்றி நிறைய கேள்விகள் வந்தன. அவ்வப்பொழுது அதனைப்பற்றியும் பார்த்துவிடலாம். முதலில் உங்களுக்கு சனிதசா நடந்தால் எப்படிப்பட்ட பரிகாரத்தை நீங்கள் செய்யவேண்டும் என்பதை சொல்லிவிடுகிறேன்.

ஒவ்வொரு பரிகாரமாக பார்க்கலாம். முதலில் ஒரு பரிகாரத்தைப்பற்றி சொல்லிவிடுகிறேன். முதல் பரிகாரம் தாடி வளர்ப்பது. பொதுவாக சனிக்கிரகம் கிழத்தன்மை உடைய ஒரு கிரகம். சனிதசாவில் நீங்கள் எப்படிப்பட்ட பெரிய பியூட்டி பார்லருக்கு சென்றாலும் நீங்கள் அவ்வளவு அழகாக தெரியமாட்டீர்கள்.

தாடி வளர்ப்பது ஒரு வறுமையின் சின்னமாகவே கருதப்படுகிறது. சனி தசாவில் உங்களுக்கு கஷ்டம் அதிகமாக தெரிகிறது என்றால் நீங்கள் தாடி வளர்த்துக்கொள்ளுங்கள்.

தாடி ஒருவர் வளர்க்கிறார் என்றால் அவர் ஒரு சாமியாராக இருக்கவேண்டும் அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு மாலை அணிந்துக்கொண்டு செல்பவராக இருக்கவேண்டும். ஒருவரின் மனைவி கர்ப்பமாக இருந்தால் அவர் தாடி வளர்க்கலாம். 

சனித்தசா உங்களுக்கு நடந்துக்கொண்டு இருந்தால் தாடி வளர்த்து பாருங்கள். அது உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் தாராளமாக சனிதசா முழுவதும் வைத்துக்கொள்ளுங்கள். தாடி வளர்த்தும் பிரச்சினை ஓயவில்லை என்றால் தாடியை எடுத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 27, 2015

தேடுதல்


வணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடுதல் இருந்துக்கொண்டு இருக்கும். ஆன்மீகதேடுதல் உள்ளவர்களும் அதிகம் பேர் இருப்பார்கள். நமக்கு ஒரு குரு கிடைப்பாரா அவர் வழியாக நமக்கு ஒரு ஆன்மீக வழி கிடைக்காதா என்று தேடுதல் இருக்கும்.

என்னிடமே நிறைய நண்பர்கள் கேட்பார்கள் உங்களுக்கு சீடரை தேர்ந்தெடுத்துவிட்டீர்களா அப்படி இல்லை என்றால் நான் உங்களின் சீடராக வரலாமா என்று கேட்பார்கள். ஜாதககதம்பத்தின் வழியாக ஒவ்வொரு கருத்தாக உங்களுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த கருத்தை எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தில் முன்னேறினால் நல்லது. 

இந்த உலகம் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் தான் அதனை கவனிக்க தவறுகிறோம். கொஞ்சம் கவனித்தால் ஒவ்வொரு அசைவிலும் இருந்தும் நாம் நல்லதை பெறமுடியும்.

நமக்குள்ளும் ஒரு தேடுதல் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அதனை தேடி சென்றுக்கொண்டே இருந்தால் ஏதாவது ஒரு இடத்தில் நமக்கு கிடைத்துவிடும். நான் அப்படி தான் தேடிச்சென்றேன். விடாமுடியற்சியாக சென்றேன். நான் நினைத்தது கிடைத்தது. நீங்களும் விடாமுயற்சியுடன் தேடுங்கள். கண்டிப்பாக கிடைக்கும்.

நான் சொல்லுவது ஆன்மீகத்திற்க்கு மட்டும் இல்லை உங்களின் அனைத்து தேடுதலுக்கும் விடை கண்டிப்பாக கிடைக்கும். நாம் மனம் தளராமல் தேடவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 26, 2015

கலவை


வணக்கம்!
          இன்று செவ்வாய்கிழமை என்பதால் கோவில் பூஜை மற்றும் நமது சொந்த பூஜை என்று நேரம் சென்றுவிட்டது. வேலை எல்லாம் முடித்துக்கொண்டு தற்பொழுது தான் உங்களுக்கு பதிவை தரமுடிந்தது.

சந்திராஷ்டமம் என்றதும் சோதிடம் தெரிந்தவர்கள் பயந்துவிடுவார்கள். இரண்டரை நாளை எந்த வேலையும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஒரு சிலர் வெளியில் வருவது கூட இல்லை.

சந்திராஷ்டமம் அன்று வேலை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை.அன்றைய தினத்தை ஆன்மீகத்திற்க்கு பயன்படுத்தலாம்.  ஏதாவது கோவிலுக்கு செல்லுவது அல்லது கோவிலை சுத்தப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டால் புண்ணியம் வந்து சேரும்.

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கோயம்புத்தூரில் நான் இருப்பேன். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.எனது நம்பருக்கு குறுந்தகவலை அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 25, 2015

ஆன்மீகத்திற்க்கு உகந்த நாள்


வணக்கம்!
          ஆன்மீக வழிபாட்டிற்க்கு உகந்த நாளாக எந்த நாளை தேர்ந்தெடுக்கலாம் என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஆன்மீக முயற்சிகளை மேற்க்கொள்ள எந்த நாளை தேர்ந்தெடுக்கலாம் என்றார்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் ராசிப்படி தான் அந்த நாளை தேர்ந்தெடுக்க முடியும். பொதுவாக நாம் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அந்த நாள் நன்றாக இருக்கின்றது என்று சொல்லுவோம் அந்த நாளில் சந்திராஷ்டம் ஒருவருக்கு இருந்தால் அந்த நாள் அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தை எடுத்து அந்த நபர்க்கு எது உகந்த நாள் என்று பார்த்து அந்த நாளில் ஆன்மீக பயிற்சி செய்ய துவங்கவேண்டும்.ஜாதகத்தில் பாக்கியாதிபதி உச்சம் அல்லது அவரின் சம்பந்தப்பட்ட நாளை தேர்ந்தெடுத்து முதல் முயற்சியை துவங்கலாம்.

பொதுவாக கோச்சாரப்படி மகம் நட்சத்திரம் வரும் நாளில் ஆன்மீகப்பயிற்சியை மேற்க்கொண்டால் நல்ல பலனை அந்த நட்சத்திரம் கொடுக்கும்.

விரைவில் கோயம்புத்தூரில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மலமாதம்


வணக்கம்!
          வரும் ஆனி மாதம் இரண்டு அமாவாசை ஒரே மாதத்தில் வருகின்றது. இரண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் அது மல மாதம் என்று சொல்லுவார்கள்.

இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பெளர்ணமி ஒரு மாதத்தில் வரும்பொழுது அந்த மாதத்தில் எந்த ஒரு நல்ல விசேஷம் நடத்தகூடாது என்று ஒரு நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்யான ஒன்று தான்.

மல மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தலாம். குலதெய்வத்திற்க்கு பூஜை செய்யலாம் ஆனால் இறந்தவர்களுக்கு மட்டும் திதி போன்ற காரியங்களை மட்டும் செய்யகூடாது

மலமாதத்தில் நாம் கொடுக்கும் திதியை முன்னோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த மாதத்தில் உங்களின் முன்னோர்க்கு திதி நாள் வந்தால் அதன் பிறகு வரும் அமாவாசை அன்று கொடுத்துக்கொள்ளுங்கள் அல்லது ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை அன்று கொடுத்துக்கொள்ளலாம். மலமாதத்தில் சுபநிகழ்ச்சிகளை தாராளமாக நடத்திக்கொள்ளுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 24, 2015

தொடர்புக்கு


வணக்கம்!
          ஒரு நாளைக்கு பத்து பதிவு போட்ட காலமெல்லாம் இப்ப இல்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போடகூட நேரமில்லை. நமது அம்மன் கோவிலை பராமரித்துக்கொண்டு இருந்த நபர் இப்பொழுது இல்லை. அம்மன் அவருக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பிவிட்டது என்னை வைத்து வேலை வாங்க வேண்டும் என்று அம்மன் நினைக்கிறது என்று நினைக்கிறேன். நானே அதனை பராமரித்துக்கொண்டு இருக்கிறேன். 

ஓய்வுன்றி வேலை மற்றும் சொந்த வேலை என்று இருப்பதால் என்னை தொடர்புக்கொள்பவர்கள் அனைவருக்கும் என்னால் பதில் அளிக்கமுடியவில்லை. பழைய நண்பர்களை மட்டும் தொடர்பில் இருந்துக்கொண்டு இருக்கிறேன். எனது செல் நம்பரில் தொடர்ந்து விடாமல் தொடர்புக்கொண்டே நண்பர்கள் இருக்கின்றார்கள். இதற்கு மாற்று ஏற்பாடாக ஒன்றை செய்து இருக்கிறேன்.

சும்மா ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டு இருக்கலாம் என்று தொடர்புக்கொள்ளவேண்டாம். இலவச சேவை என்பது நம்மிடத்தில் துளியும் கிடையாது. பக்கா கமர்சியல் ஆள் நான். இதனை அறிந்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். 

எனது மெயில் ஐடியில் உங்களைப்பற்றி தகவலை தந்துவிடுங்கள் அதோடு உங்களின் மொபைல் நம்பரையும் அதில் இணைத்துவிட்டால் ஓய்வு நேரத்தில் உங்களை தொடர்புக்கொள்கிறேன்.

E Mail ID:  astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 22, 2015

விலையுர்ந்த பொருள் வாங்கும்பொழுது


வணக்கம்!
          நமக்கு தேவையான பொருளை வாங்கும்பொழுது நாம் நேரடியாக கடைக்கு சென்று வாங்கிக்கொள்கிறோம். சிறிய பொருள் அன்றாட தேவைக்கான பொருளாக இருந்தால் நாமே சென்று பொருளை வாங்கிக்கொள்ளலாம்.

வாழ்நாள் முழுவதும் ஒரு பொருள் நமக்கு பயன்படும் என்று நினைக்கும்பொழுது அந்த பொருள் எந்த கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றது என்று பார்த்து தெரிந்தக்கொண்ட பிறகு அந்த கிரகத்தின் தன்மையில் இருக்கும் நபரை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று வாங்கினால் குறைந்த விலையில் வாங்கலாம். அந்த பொருளும் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயமாக இருந்தால் செவ்வாய் ஆதிக்கம் உள்ள நபர்களாக பார்த்து கூப்பிட்டுக்கொண்டு செல்லும்பொழுது அது நமக்கு எளிதில் முடியும். வெள்ளி சம்பந்தப்பட்ட பொருளாக இருந்தால் சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட நபர்களாக இருந்தால் நமக்கு வாழ்நாள் முழுவதும் அது நிலைத்து நிற்கும்.

நாம் கூப்பிட்டுக்கொண்டு செல்லும் நபர்க்கு ஏழரை சனி அல்லது அஷ்டமசனி நடக்ககூடாது. இந்த இரண்டும் நடக்கும்பொழுது வாங்கும் பொருள் விலை அதிகமாக இருக்கும் அல்லது நிலைத்து நிற்காது.

எப்பொழுதும் அடுத்தவரை கூப்பிட்டுக்கொண்டு இருக்கமுடியாது. விலையுர்ந்த பொருள் வாங்கும்பொழுது மட்டும் இப்படி செய்யுங்கள். அடுத்தவர் உங்களுக்கு பழக்கம் இல்லை என்றால் கிரக ஆதிக்கம் உள்ள நாளாக பார்த்து கடைக்கு சென்று வாங்கிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 21, 2015

பெற்றோர்க்கு


வணக்கம்!
          பெற்றோர்க்கு என்ற எழுதிய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் பாராட்டினார்கள். அதே நேரத்தில் பல கேள்விகளும் வந்தன. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தன் பிள்ளைகளுக்கு தானே கொடுக்கவேண்டும் என்று சம்பாதிக்கிறோம் என்றார்கள்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தன் வாரிசுக்கு தான் கொடுக்கவேண்டும்.அனைத்தையும் கொடுக்கும்பொழுது அந்த பையனுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிட்டு கொடுக்கவேண்டும் என்று சொன்னேன். ஒன்றும் தெரியாத பையனாக வளர்ந்துவிடுகிறார்கள். பணம் என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்க அவனுக்கு பயிற்சி கண்டிப்பாக தேவை அப்பொழுது தான் உங்களின் சொத்துக்களை பாதுகாத்து சேர்த்து வைப்பான்.

ஒரு சில பெற்றோர்களும் சரியில்லை என்றே சொல்லவேண்டும். ஒன்றுமே செய்யாமல் இருந்துவிடுகிறார்கள். நல்ல விசயத்தையும் சொல்லி தருவதில்லை. சொத்தையும் சேர்த்து வைப்பதில்லை.

ஒரு சில பெற்றோர்கள் தன் புத்திக்கு செயல்படுவதில்லை. அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் வழிகாட்டுதலில் செயல்பட்டு தன் வாரிசுக்கு துரோகமும் இழைத்துவிடுகிறார்கள். தன் அண்ணன் தம்பி அல்லது அக்கா தங்கை பேச்சை கேட்டு அவர்களின் குடும்பத்தை கவனிப்பதில்லை. இப்படியும் பல பேர்கள் இருக்கிறார்கள்.

பொதுவான கருத்து 

தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று இருக்கவேண்டும். நீங்கள் பிறர் குடும்பத்தை கவனிக்க போய்விட்டால் உங்களின் குடும்பம் போய்விடும். நான் சந்திக்கும் அனைத்து குடும்பத்திலும் அவர்களின் குழந்தைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன். அதற்கு காரணம் இருக்கிறது. உங்களின் பிள்ளைகள் தான் வாழும்பொழுதும் வயதான காலத்திலும் உங்களை காப்பாற்றவேண்டும். உங்களின் இறப்புக்கும் உங்களின் பிள்ளைகள் தான் கொள்ளிவைக்கவேண்டும். நீங்கள் இறந்த பிறகு உங்களுக்கு தர்பணம் திதி எல்லாம் உங்களின் பிள்ளைகள் தான் செய்யவேண்டும். உங்களின் உறவினர்கள் வந்து இதனை எல்லாம் செய்யமுடியாது.

வாழும்பொழுதும் இறப்பிற்க்கும் இறப்பிற்க்கு பிறகும் உங்களின் பிள்ளைகள் தான் உங்களுக்கு அனைத்தையும் செய்ய முடியும் என்பதால் உங்களின் பிள்ளைகளுக்கு நான் அதிகம் முக்கியதுவம் கொடுப்பது உண்டு.

உங்களின் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தாலே போதும். நீங்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தீர்கள் என்பதையும் சொல்லிவிடவேண்டும். அவர்களுக்கும் நல்ல கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால் பல தலைமுறைகளுக்கு அது செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 19, 2015

கோரிக்கை நிறைவேற தீப வழிபாடு


வணக்கம்!
          நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்துக்கொண்டே தான் இருக்கும். அப்படி பிரச்சினை ஏற்படும்பொழுது அதனை கண்டு மனம் தளராமல் அதனை போக்க என்ன வழி என்று பார்த்து செயல்படவேண்டும்.

தன் கையில் பொருள் வைத்திருப்பவன் அதாவது பணம் வைத்திருப்பவன் பிரச்சினையை சரிசெய்துக்கொள்வான். பணம் இல்லாதவர்களுக்கு பிரச்சினையை சரி செய்வதற்க்கு வழி தெரியாது. அப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு பிடித்தமான தெய்வத்திற்க்கு தொடர்ந்து தீபம் ஏற்றி வருவது நல்லது.

தீபம் ஒரு நாளில் ஏற்றி வைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடாது தொடர்ச்சியாக தீபம் ஏற்றி வரவேண்டும். என்னிடம் பணம் இல்லாத நாளில் எனக்கு வந்த பிரச்சினையை தீர்த்தவிதத்தைப்பற்றி சொல்லுகிறேன் பாருங்கள்.

கோவிலுக்கு சென்று பிறர் ஏற்றும் தீபத்தை பார்ப்பேன். அந்த நேரத்தில் ஒரு ரூபாய் தீபம் வாங்க கூட என்னிடம் பணம் இல்லை. பிறர் ஏற்றும் தீபத்தை பார்த்தே அந்த தெய்வத்திற்க்கு சமர்ப்பணம் செய்து வெற்றி பெற்றுஇருக்கிறேன்.


உங்களிடம் பணம் இருந்தால் தொடர்ச்சியாக தீபம் ஏற்றி வாருங்கள். நீங்கள் நினைக்கும் காரியம் வெற்றி பெறும். ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றுங்கள் அது போதும் உங்களின் கோரிக்கை நிறைவேறும். இதனை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கடன்


வணக்கம்!
          இன்று காலையில் மெயிலை பார்க்கும்பொழுது ஒருவர் கடன் பிரச்சினையைப்பற்றி எழுதியுள்ளதை பார்த்தேன். கடன் பிரச்சினைக்கு தீர்வைப்பற்றி கடந்த கால பதிவில் எழுதியுள்ளேன். மீண்டும் அதனைப்பற்றி பார்க்கலாம்.

சோதிடத்தில் ஆறாவது வீட்டு அதிபதியின் துணையோடு நமக்கு வரும் கடன் நம்மை பிரச்சினையில் மாட்டிவிடுகிறது. கடன் சுமை மரணவேதனையை விட கொடுமையானது. செலவினத்தை குறைத்தாலே கடன் ஏற்படாது என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். அடிப்படை தேவைக்கே பிரச்சினை என்று வரும்பொழுது கடன் வாங்கி தான் ஆகவேண்டும்.

பத்து பேரிடம் நீங்கள் கடன் வாங்கிவிட்டால் அந்த பத்து பேரின் எண்ண தாக்குதலில் இருந்து நீங்கள் மீறி வேலை செய்வது என்பது பெரிய விசயமாக இருக்கும்.தொழில் அதிபர்கள் என்று நாம் வேலை செய்யும் ஆட்கள் எல்லாம் கடனை வாங்கிவிட்டு தான் என்னை தேடி வருவார்கள். அவர்களை கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வைத்து இருந்தேன். தற்பொழுது அதனை நான் செய்வதில்லை. பணத்தோடு வந்தால் தான் நான் சேர்த்துக்கொள்ளவதாக இருப்பதால் இந்த பிரச்சினை வருவதில்லை.

கடன் பிரச்சினையை தீர்க்க ஆயிரம் வழிபாட்டு முறைகளை ஆன்மீகத்தில் சொல்லிவிடுவார்கள். வருபவர்களுக்கு ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் அல்லவா. அந்த காரணத்தால் பல வழிபாட்டு முறைகள் இருக்கும்.

சோதிடத்தில் ஆறாம் வீட்டு அதிபதியின் துணையோடு கடன் வந்தாலும் செவ்வாய் கிரகம் கையெழுத்து போடாமல் கடன் ஏற்படுவதில்லை. செவ்வாய் கிரகத்திற்க்குரிய முருகன் வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.

செவ்வாய்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு நமது அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் உங்களுக்கு ஏற்பட்ட கடனில் இருந்து விடுபடவழி செய்யும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 18, 2015

தன்னம்பிக்கை


வணக்கம்!
          பல நண்பர்களுக்கு நான் நிறைய செய்துக்கொடுத்து இருக்கிறேன். பலருக்கு நல்லது செய்துக்கொண்டு இருக்கிறேன். என்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கு எப்படியாவது நல்லதை செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன்.

அம்மனை வைத்து செய்துக்கொடுத்தாலும் வாங்கிறவன் கொஞ்சம் திறமைசாலியாக இருக்கவேண்டும். திறமை இல்லை என்றால் அம்மன் கொஞ்ச நாள் பார்க்கும் இவன் நோஞ்சானாக இருக்கிறான் இவனிடம் நாம் இருந்தால் நம்ம ஆளுக்கு வருமானம் குறைவு என்று வந்துவிடும்.

உங்களிடம் நான் சொல்லுவது வாய்ப்பு இல்லை. எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் நன்றாக ஓடிவிடுவேன் என்று நினைப்பவர்கள் என்னை தேடி வந்தால் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். வாய்ப்பு கொடுத்தும் அதனை பயன்படுத்த தெரியவில்லை என்றால் நான் எதும் செய்யமுடியாது.

திறமைசாலியாக இருந்துக்கொண்டு கிரகங்கள் தடுப்பதால் என்னால் ஓடமுடியவில்லை என்று சொன்னால் அந்த கிரகத்தை நாம் மாற்றி ஒடவைத்துவிடலாம். ஓடவும் நீங்கள் தான் சார் வரவேண்டும் என்றால் நான் என்ன செய்வது? என்னிடம் நீண்ட கியூ இருக்கிறது. அத்தனை பேருக்கும் நானே ஓடுவது முடியாதா காரியம்

மனிதன் சோரம் போககூடாது. இருக்கின்ற இடத்தில் இருந்து எழுவற்க்கு வழி செய்யவேண்டும். உங்களை பிடித்து ஒருவன் கீழே தள்ளுகிறான் என்றால் கீழ் இருந்து மேலே எழும்பொழுது ஒரு கல்லாவது எடுத்துக்கொண்டு எழவேண்டும்.

இவன் வீணாக போய்விட்டான் என்று மட்டும் பேர் வாங்காதீர்கள். எப்படியாவது நான் சாதித்துவிடுவேன். நான் திறமைசாலி என்று பேர் எடுங்கள். அம்மன் உங்களுக்கு வேகமாக உதவ ஆரம்பிக்கும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாதுகாப்பு


வணக்கம்!
          சதுரகிரியில் ஆற்று வெள்ளத்தில் விபத்து ஏற்பட்டு பலி என்று செய்தி சானலில் பார்த்தேன். காடுகளுக்கு உள்ளே இருக்கும் செல்லும் கோவிலுக்கு செல்லும்பொழுது தகுந்த பாதுகாப்போடு செல்லவேண்டும். அந்த காட்டைப்பற்றி நன்றாக தெரிந்து இருக்கவேண்டும்.

காடுகளுக்கு பயணம் செய்யும்பொழுது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காட்டில் நாம் கும்பிடபோகும் சக்தி என்பது ஒன்று அந்த காட்டை பாதுகாக்கும் சக்தி என்பது வேறு ஒன்றாக இருக்கும்.பாதுகாக்கும் சக்தியிடம் நாம் எச்சரிக்கையுடன் இருந்துக்கொள்ள பல பாதுகாக்கு நடவடிக்கை ஆன்மீகத்தில் இருக்கிறது அதனை பின்பற்றி செல்லவேண்டும்.

டிவி சேனலில் டிஸ்கவரி தொலைக்காட்சியை பார்த்தால் பல பாதுகாப்பு நடவடிக்கையைப்பற்றி சொல்லி தருவார்கள். அதனை பார்த்தாலே அவசர நேரத்தில் தப்பிக்க வழி சொல்லி தருவார்கள்.

ஆன்மீக பயணம் செல்லுவது எல்லாம் தகுந்த குருவின் ஆலோசனையின் படி செல்லவேண்டும். இளம் வயதில் பயணம் மேற்க்கொண்டால் நல்லது வயதான காலத்தில் ஆன்மீக பயணம் செல்லும்பொழுது உடல் ஒத்துழைக்காது. 

காடுகளுக்கு செல்லும்பொழுது அந்த காட்டை விட்டு எந்தளவுக்கு வேகமாக வெளியே வரவேண்டுமே அந்தளவுக்கு அவசரமாக நமது வேலையை முடித்துக்கொண்டு வந்துவிடவேண்டும். தகுந்த பாதுகாப்போடு பயணம் மேற்க்கொண்டு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

தன் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று. ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லும்பொழுது கடவுள்  காப்பாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு இருப்பதை விட உங்களுக்கு என்ன என்ன பாதுகாப்பு இருக்கின்றதோ அத்தனை பாதுகாப்பு நடவடிக்கையும் கையாண்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Saturday, May 16, 2015

ஆன்மீக வியப்பு


வணக்கம்!
          நான் பல இடங்களுக்கு செல்லும்பொழுது நடக்கும் ஒரு சம்பவத்தைப்பற்றி சொல்லுகிறேன். நான் எந்த இடத்திற்க்கு சென்றாலும் அந்த வந்து ஒரு சிலர் என்னிடம் வந்து நான் காசியில் இருந்து வருகிறேன். இராமேஷ்வரத்தில் இருந்து வருகிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பார்கள்.

என்னிடம் உதவி கேட்கும் நபர்களை பார்த்தால் சாமியாராக இருப்பார்கள் அல்லது புரோகிதம் பார்க்கும் ஐயர்களாக இருப்பார்கள். நான் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் என்னிடம் மட்டும் வந்து உதவி கேட்டுவிட்டு நான் கொடுப்பதை பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். பிறர்களிடம் எந்த உதவியும் பெறாமல் சென்றுவிடுவார்கள்.

என்னை பார்ப்பதற்க்கு ஆன்மீகத்தில் இருப்பதற்க்கான எந்த ஒரு வேஷமும் இருக்காது. சாதாரணமானவர்கள் போல் தான் நான் இருப்பேன் ஆனால் என்னிடம் வந்து தான் இப்படிப்பட்ட உதவிகளை கேட்பார்கள். நானும் அவர்களுக்கு தேவையான உதவியை செய்துவிடுவேன்.

ஜாதக கதம்பத்தில் இருந்து வந்த நண்பர்களோடு கூட இப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள். சார் எப்படி உங்களை அடையாளம் கண்டு வந்து கேட்கிறார்கள் என்று கேட்டுள்ளனர்.

நம்மை இயக்கும் அம்மன் மற்றும் குருவின் வேலை தான் இது எல்லாம். நம்மிடம் இருக்கின்றபொழுது அதனை பெறுவதற்க்கு இறைவனே இப்படிப்பட்ட லீலைகளை நடத்துக்கிறான் என்பதை பல காலத்திற்க்கு பிறகு தான் நான் கண்டுக்கொண்டுள்ளேன்.

உங்களிடமும் சக்தி இருந்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழம். நீங்களும் அதனை புரிந்துக்கொள்ளலாம். சும்மா வந்து மது அருந்துவதற்க்காக ஒரு சிலர் கேட்பார்கள் அதனை தவிர்த்துவிடுங்கள். அவர்களை நீங்கள் பார்த்தாலே உங்களே புரியும்.

சாமியார்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் வந்தாலே உங்களுக்குள் உள்ள உள்ளுர்ணவு காட்டிக்கொடுக்கும். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். 

மதுரைக்கு நண்பரை சந்திக்க செல்லுகிறேன். நாளை மதுரையில் இருப்பேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 15, 2015

தடைகள்


வணக்கம்!
          ஒவ்வொரு நண்பர்களையும் சந்திக்கும்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தை சார் நிறைய தடைகள் வருகின்றது. தடைகள் இல்லாமல் காரியம் நடைபெறவேண்டும் என்றால் என்ன செய்வது என்று கேட்பார்கள்.

தடைகள் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்றாலும் நமது முன்னோர்கள் ஏற்படுத்துவது தான் இது. முன்னோர்களை நாம் சாந்தப்படுத்தாமல் நாம் எந்த காரியத்தில் இறங்கினாலும் அதில் வெற்றி பெறுவது கடினம்.

ராகு கேதுக்களால் தான் தடைகள் அதிகம் ஏற்படும். ராகு கேது நல்ல முறையில் ஜாதகத்தில் அமையும்பொழுது நாம் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.ராகு கேது சரியில்லை என்றாலும் குரு கிரகம் நல்ல முறையில் இருந்தால் அனைத்தையும் சாதித்துவிடமுடியும். ஒரு குரு நமக்கு வழிகாட்டும்பொழுது நமது காரியங்களை எளிதில் சாதித்துவிடலாம்.

ரவுடியாக இருந்தால் கூட வழிகாட்டி வேண்டும் என்று நான் பழைய பதிவில் சொல்லியுள்ளேன். நீங்கள் எதனை செய்தாலும் அதற்கு ஒரு வழிகாட்டி இருந்தால் அதில் நீங்கள் தடைகள் இல்லாமல் வெற்றி பெறமுடியும்.

குரு இல்லை என்றால் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யுங்கள். உங்களின் தாய் தந்தை இல்லை என்றால் அமாவாசை விரதம் இருந்து வாருங்கள். உங்களுக்கு ஏற்படும் தடைகள் விலகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 14, 2015

அம்மன் நம்பிக்கை


வணக்கம்!
          ஒரு முறை நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார். அனைத்து வேலைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு செய்யுங்கள். வேலை முடிந்த பிறகு பணத்தை வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னால் அதில் ஏமாற்றுதல் அதிகம் இருக்கும் என்றார்.

நான் மனிதனை நம்புவதில்லை. சக்தியை தான் நம்புகிறேன். மனிதனை பயன்படுத்திக்கொள்கிறேன். கலியுகத்தில் மனிதன் என்பவன் எப்படி இருப்பான் என்று எனக்கு குரு சொல்லிக்கொடுத்து இருக்கிறார்.

என்னிடம் ஏமாற்று வேலை ஒரு மனிதன் செய்யும்பொழுது அந்த கணத்தில் இருந்து அவனின் அழிவு என்பது ஆரம்பித்துவிட்டது என்றே அர்த்தம் கொள்ளலாம். 

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஆளை தேர்ந்தெடுக்கும்பொழுதே அவரிடம் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தை என்னிடம் நீங்கள் உதவி கேட்பது தவறில்லை. கடைசி வரை ஒழுங்காக இருங்கள் என்று தான் சொல்லுவேன். ஏன் என்றால் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றால் அம்மனை அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும். அதன் பிறகு அவர்களை நான் காப்பாற்றுவது கூட கிடையாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குலதெய்வம்


வணக்கம்!
          எந்த ஒரு சோதிடத்திரை நீங்கள் சந்தித்து பலனை கேட்டாலும் அந்த சோதிடர் சொல்லும் வார்த்தை உங்களின் குலதெய்வத்தை வணங்குங்கள் என்று சொல்லுவார்.

ஜாதகத்தில் இருந்து வரும் எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்குவது உங்களின் குலதெய்வமாக இருக்கும். உங்களின் குலதெய்வம் உங்களுக்கு அருளை வழங்கவில்லை என்றால் உங்களால் எந்த ஒரு காரியத்தை வெற்றியுடன் செய்து முடிக்கமுடியாது.

ஒவ்வொரு குலதெய்வத்திற்க்கும் அந்த குலத்தின் வழிப்படி ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்யப்படும். அந்த குல தெய்வத்தின் வழக்கப்படி எந்த மாதமும் அதற்கு உகந்ததோ அந்த மாதத்தில் அதனை செய்வார்கள். 

குலதெய்வத்தின் பூஜையின் பொழுதுதான் அந்த நமது மனிதர்கள் அவர்களின் கோபத்தை காட்டுவார்கள். பங்காளிக்குள் சண்டை ஏற்பட்டு இருக்கும் அதனை காரணம் காட்டி குலதெய்வத்தின் பூஜையை தடுக்க நினைப்பார்கள். 

இந்த காலத்தில் மனிதன் தன் வேலையை தவிர பிற செயலை தடுக்கும் வேலையில் தான் அதிகம் செய்வார்கள். இந்த மாதிரியான கீழ்தனமான வேலையில் நீங்கள் ஒரு பொழுதும் ஈடுபடாதீர்கள். உங்களின் கடமை அந்த பூஜை நல்ல முறையில் நடைபெறவேண்டும் என்பதில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி ஈடுபட்டால் உங்களின் வாழ்வு மேம்படும். குலதெய்வத்திற்க்கு உண்டான பச்சைப்பரப்புதலை செய்து வருகிறீர்களா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 13, 2015

ஞாயிறு


வணக்கம்!
          என்னை சந்திக்கும்பொழுது நண்பர்கள் ஏன் சார் பதிவு அதிகம் எழுதுவது இல்லை நிறைய பதிவுகளை எங்களுக்கு தாருங்கள் என்று சொல்லுவார்கள். நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் எனது எண்ணத்தில் இருந்து எடுத்து எழுதிய பதிவுகள். நான் என்ன நினைக்கிறேனோ அதனை எழுதுவது எனது பழக்கம். நிறைய கருத்துக்களை சிந்தனை செய்து அதனை பயன்படுத்தி அதில் வெற்றி பெற்ற கருத்துக்களை எழுதிவருகிறேன்.

இதனை சும்மா வந்து படித்துவிட்டு சென்றால் அதன் உள்ளே இருக்கும் கருத்துக்களை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள். வாழ்விற்க்கு தேவை என்று நினைக்கும் ஆட்கள் எப்படியும் என்னை தேடி வந்து இதனை எல்லாம் கேட்டு தெரிந்த கொண்ட பிறகு அதனை பயன்படுத்துவார்கள். வாழ்க்கை நல்லமுறையில் அமையவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னை தேடி வரட்டும் அவர்களுக்கு நான் சொல்லிக்கொடுக்கிறேன். சாதாரணமான கருத்துக்களை மட்டும் பதிவில் எழுதுகிறேன். குறைவான கருத்துக்கள் மட்டும் பதிவில் வரும்.

தொழில் நண்பர்களிடம் நான் சொல்லும் கருத்து இதனை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் அனைவருக்கும் அரசாங்கம் விடுமுறை கொடுத்து விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று கிருத்துவர்கள் வழிபாடு நடத்தவேண்டும் என்று விடுமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனை நீங்கள் பயன்படுத்துவது தவறான ஒன்று. நான் கிருத்துவர்களுக்கு எதிராக இதனை எழுதுகிறேன் என்று நினைக்கவேண்டாம்.

ஞாயிற்றுக்கிழமை அன்று நீங்கள் வழக்கம் போல் வேலை செய்தால் அல்லது அந்த நாளை முழுமையாக நீங்கள் பயன்படுத்தினால் அதில் நீங்கள் பெரிய வெற்றியை பெறலாம்.

சூரிய கிரகம் தன் சக்தியை அதிகம் தரும் நாளில் நீங்கள் ஒய்வாக இருப்பது நல்லது அல்ல. நான் தொழில் செய்யும் நண்பர்களுக்கு எல்லாம் சொல்லும் வார்த்தை ஞாயிற்றுக்கிழமை அன்று அலுவலகத்தை திறந்து வையுங்கள் என்று சொல்லுவேன். வியாபாரம் நடைபெறாவிட்டாலும் பரவாயில்லை காலையில் மட்டுமாவது திறந்து வையுங்கள் என்று சொல்லுவேன். இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்களும் செய்து பாருங்கள் அல்லது உங்களின் நண்பரிடத்தில் சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 12, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          நேற்று கோயம்புத்தூரில் நண்பரை சந்தித்துவிட்டு இன்று காலை தஞ்சாவூர் திரும்பிவந்துவிட்டேன். நமது ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பரை தான் சந்திக்க சென்றேன். பல வருட நட்பு நேற்று தான் முதன் முறையாக சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு ஊருக்கும் நான் இப்படி செல்லும்பொழுது சம்பந்தப்பட்ட நபரின் பூர்வபுண்ணியம் மற்றும் அவர்களின் குலதெய்வ அருளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று தான் நான் செல்லுகிறேன்.

நம்மை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ளகூடாது. குருவின் அருளால் மற்றும் நமது அம்மனின் அருளால் அவர்களுக்கு பூர்வபுண்ணியம் மற்றும் அவர்களின் குலதெய்வ அருளை கிடைக்க செய்கிறோம்.  என்னிடம் எதுவும் கிடையாது அவர்களின் சக்தி வேலை செய்கிறது.

பூர்வபுண்ணியத்தை ஒருவருக்கு எடுத்து கொடுத்தாலே போதும் அந்த ஆள் நன்றாக வளர்ந்துவிடுவார். அதனால் தான் நான் இப்படி ஒவ்வொரு ஊருக்கும் சென்று இந்த வேலையை செய்துக்கொடுக்கிறேன். இதனை படிக்கும் உங்களின் வீட்டிற்க்கும் ஒரு நாள் வருகிறேன். அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 10, 2015

சக்தி


வணக்கம்!
          சக்தியைப்பற்றி எழுதி நிறைய நாட்கள் சென்றுவிட்டன. ஒரு நண்பர் மீண்டும் அதனைப்பற்றி கேட்டார். உடனே அதனைப்பற்றி ஒரு பதிவை தருகிறேன்.

கோவில்களில் நந்தவனம் என்று ஒன்றை வைத்து இருப்பார்கள். சாமிக்கு தேவையான பூக்களை அங்கு இருந்து எடுத்து பூஜைக்கு பயன்படுத்தவேண்டும் என்பதற்க்காக வைத்திருந்தனர். இன்றைய காலத்தில் நந்தவனம் என்பது எல்லாம் இருக்கின்றதா என்பது நீங்கள் தான் சொல்லவேண்டும்.

நந்தவனத்தில் விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் பூக்களை பறித்துவிடவேண்டும் என்பது விதிமுறை. அந்த பூக்களை வாழை நாரில் மாலை கட்டி போடவேண்டும். உதிரிபூக்களாவும் பயன்படுத்தவேண்டும். அனைத்தும் இயற்கையாகவே அமையவேண்டும் என்று அப்படி எல்லாம் செய்துவந்தார்கள். 

இன்றைய காலத்தில் நமது கோவில்களில் நந்தவனம் கிடையாது. அப்படியே நந்தவனம் இருந்தாலும் அதனை பராமரிக்க முடியாமல் விட்டுவிடுகிறார்கள்.

நாம் அனைவரும் கடையில் தான் பூக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். காலத்தின் கோலம் என்று இதனை நாம் கருதினாலும். நீங்கள் பூ அல்லது மாலை வாங்கும்பொழுது அது இந்துக்களின் கடையில் இருந்து வாங்கப்படவேண்டும். பெரும்பான்மையான பூ கடைகள் முஸ்லீம் கடைகளாக இருக்கின்றது.

முஸ்லீம் கடையில் பூ வாங்கினால் முஸ்லீம் காலையில் அவர்களின் கடவுளை தொழுதுவிட்டு பூ வேலையை ஆரம்பிப்பார்கள். அவர்களின் சக்தி அந்த பூவிலும் இருக்கும். அதனை நாம் வாங்கி பயன்படுத்தும்பொழுது நமது தெய்வத்திற்க்கு ஏற்றுக்கொள்ளாது. 

இந்துக்களின் கோவில் என்றால் அது இந்துக்களின் பூ கடையில் வாங்கி பயன்படுத்தும்பொழுது அது நல்லவிதமான சக்தியை நாம் பெறமுடியும். நீங்கள் பெரும்பாலும் உதிரிபூக்களாக பயன்படுத்துவது நல்லது. கடவுளுக்கும் மிகவும் விருப்பமாக அமையும்.

தற்பொழுது நண்பரை சந்திக்க கோயம்புத்தூர் பயணம் கிளம்பிவிட்டேன். நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 9, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்


\





அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 8, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          இன்று காலை தஞ்சாவூர் வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்தேன். சென்னையில் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டாலும் தொழில் நண்பர்களின் அலுவலகத்தில் உள்ள வேலை காரணமாக வெளியில் உள்ள நண்பர்களை சந்திக்க முடியவில்லை.

அம்மனை வைத்து வேலை செய்தாலும் ஒவ்வொரு அலுவலகமாக நானே சென்று பார்க்கும்பொழுது அங்கு தடையின்றி வேலை வேகமாக நடைபெறும். ஒவ்வொரு நண்பர்களின் வீட்டிற்க்கும் நான் செல்வதின் நோக்கமே அவர்களின் மொத்த பிரச்சினையும் தீரும் என்பதற்க்காக செல்லுகிறேன்.

ஒவ்வொரு வாரத்திற்க்கும் பல ஊர்களுக்கு செல்லுகிறேன். அத்தனை ஊர்களையும் நான் பதிவில் சொல்லமுடியாது. நீங்கள் என்னை சந்திக்க நினைத்தால் என்னுடைய மொபைல் நம்பருக்கு மெசேஷ் செய்துவிடுங்கள். அந்த ஊருக்கு வரும்பொழுது உங்களை நான் சந்திக்கிறேன். பழைய நண்பர்களாக இருந்தால் போனில் கூப்பிட்டு சொன்னால் போதும் உங்களை வந்து சந்திக்கிறேன்.

சென்னையில் அடிக்கும் வெயில் கொடுமையாக இருந்தது. அந்த வெயிலும் பல இடங்களுக்கு சென்று நண்பர்களை பார்த்துவிட்டு வந்தேன். பல நண்பர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் மிக குறைந்த காலத்தில் நல்ல வாழ்க்கையை அம்மன் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறது.

பதிவில் வரும் அனைவரையும் உடனே சந்தித்துவிடமுடியாது. ஒவ்வொருவராக சென்று பார்த்து அவர்களின் பிரச்சினையை தீர்த்து வருகிறேன். புதிய நண்பர்கள் பொறுமையாக நான் சொல்லுவதை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். நல்ல வாழ்க்கையை வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          அம்மன் பூஜை நாளை  09-05-2015 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு பங்களித்தவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்
திரு மருதுபாண்டியன் அவர்கள்
திரு சரவணபாபு அவர்கள்
திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்

கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
திருப்பூரை சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள்

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர். நாளை மாலை நேரத்தில் பூஜை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 4, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          கோயம்புத்தூர் பயணம் முடித்து சனிக்கிழமை அன்று இரவே தஞ்சாவூர் கிளம்பிவிட்டேன். ஒரு நாள் மட்டும் தான் கோயம்புத்தூரில் இருந்தேன். சனிக்கிழமை அன்று பொள்ளாசி மாசாணியம்மன் கோவில் சென்று வந்தேன்.

ஒவ்வொரு கோவிலாக சென்று பார்க்கும்பொழுது ஒவ்வொரு அனுபவம் ஏற்படுகிறது. இந்த கோவிலில் ஒரு புதிய அனுபவம் ஒன்று இருந்தது. மிளகாய் அரைத்து அம்மனுக்கு பூசுவதாக ஒரு சடங்கு செய்வார்களாம்.

பொதுவாக இந்த மாதிரியான விசயங்களில் தலையீடு செய்யவேண்டாம் என்று தான் நான் பிறர்க்கு சொல்லுவேன். அதே நேரத்தில் உங்களின் வேண்டுதலை இப்படி செய்யாமல் தீபம் அல்லது அர்ச்சனை இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் வேண்டுதல் வையுங்கள்.

மிளகாய் அரைத்து பூசுவது அந்த கோவிலின் வழக்கமாக இருந்தாலும் நீங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் நல்ல வழியில் வேண்டுதல் வைத்து நிறைவேற்றிக்கொள்வது நல்லது. 

சென்னையில் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். சென்னை வருவதாக திட்டம் இருக்கிறது. சென்னை வரும்பொழுது உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 2, 2015

நம்பினால் நம்புங்கள்


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் தினசரி செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் விபத்துக்கள் நடைபெறுவதை காண்பிப்பார்கள். தினமும் ஏதாவது விபத்துக்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது.

விபத்துக்கு பல காரணங்களை சொல்லுகின்றார்கள். ஒரு இடத்தில் மட்டும் அதாவது ஒரு பகுதியில் மட்டும் அடிக்கடி விபத்து நடைபெறும் அந்த பகுதியில் விபத்துபகுதி என்று பலகை எழுதி வைத்து இருப்பார்கள்.

ஒரே இடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால் அந்த பகுதிக்கு அருகில் ஏதாவது ஒரு தேவதை இருக்கும். அந்த தேவதை அந்த சாலையை கடக்கும்பொழுது குறிப்பிட்ட பகுதியை கடக்கும்பொழுது அப்பொழுது செல்லும் நபர்கள் விபத்தால் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் விபத்து நடந்த பகுதிக்கு நான் சென்று பார்த்து இருக்கிறேன். விபத்து நடந்த பகுதிக்கு அருகில் அதன் சுற்றவட்டாரத்தில் ஒரு தேவதையின் நடமாட்டம் இருக்கின்றது.

எங்களின் ஊருக்கு அருகில் ஒரு இடம் இருக்கின்றது. அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும். அந்த பகுதியில் அருகில் எந்த தேவதையும் இல்லை ஆனால் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஆலமரம் இருக்கின்றது. அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு தேவதை நான் சொன்ன வழியாக செல்லுகிறது. 

பத்து கிலோ மீட்டர் அளவுக்கு அந்த தேவதை குறுக்காக சென்று வருகிறது. பத்து கிலோ மீட்டரில் இரண்டு சாலைகள் குறுக்கீடு இருக்கிறது. இரண்டு சாலையிலும் அது குறுக்கீடும் இடத்தில் விபத்து நடக்கிறது. 

ஒரே இடத்தில் தான் அது குறுக்கிடுகிறது. சரியாக அதே இடத்தில் பல விபத்துக்கள் நடந்து இருக்கிறது. பல உயிர்களை காவு வாங்கி இருக்கின்றது.

இதனை எல்லாம் நம்புவது கடினம் ஆனால் அது தான் உண்மை. நீங்கள் ஆன்மீக பயிற்சி செய்தால் இதனை ஒரு சோதனையாக செய்துப்பாருங்கள். நான் சொல்லுவது உண்மை என்று தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 1, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          
                அம்மனின் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதுவரை அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றிக்கொடுத்த நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம்.

புதிய வேண்டுதல் வைப்பவர்கள் அம்மன் பூஜை அன்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாத அம்மன் பூஜைக்குள் அம்மன் அதனை உங்களுக்கு நிறைவேற்றிக்கொடுக்கும்.

பணம் அனுப்புவர்கள் தங்களின் பெயர் மற்றும் ஊர் மொபைல் நம்பரை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.

இன்று மாலை கோயம்புத்தூர் பயணம். கோயம்புத்தூர் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளலாம். கோயம்புத்தூர் சென்றுவிட்டு அங்கிருந்து ஏதாவது ஒரு இடத்திற்க்கு செல்வது உண்டு. ஒரு நாளில் திரும்பிவிடுவேன். ஒய்வு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன். சந்திக்க விரும்பும் புதிய நண்பர்கள் தங்களின் பெயரை எனக்கு மெசேஷ் செய்துவிடுங்கள். உங்களை நான் கூப்பிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஒருவர் போதும்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் சோதிடர்களுக்கு தெரிந்த கோவில்களை விட ஜாதகம் பார்க்க வரும் நபர்களுக்கு அதிக கோவில் தெரியும். சோதிடத்தை பற்றியும் அதிகம் மக்களுக்கு தெரியும்.

நம்மை தேடி ஒருவர் வந்தால் அவர் என்னிடமே சொல்லுவார் அங்கு பெரிய சாமியார் இருக்கிறார். அவரிடம் நான் பல முறை சென்று இருக்கிறேன். அவர் நிறைய நல்லது செய்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள். அவரிடம் சென்று நல்லது நடந்த பிறகு எதற்கு என்னிடம் வருகிறீர்கள் என்று கேட்பது உண்டு.

ஒரு தெருவில் பத்து சோதிடன் இருந்தால் அந்த பத்து பேரையும் சந்தித்து கேள்வி கேட்டால் குழப்பம் மட்டுமே மிஞ்சும். அது போல் தான் ஒன்று நடக்கவேண்டும் என்றால் ஒரு ஆளை சார்ந்து இருப்பதே நல்லது.

ஒருவர் ஒரு காலம் கொடுத்து இந்த காலத்திற்க்குள் இது நடைபெறும் என்றால் அவர் அதற்கான வேலையை செய்துக்கொண்டு இருப்பார். அவர் செய்யும் வேலையில் குறுக்கீடு வரும்பொழுது அந்த வேலை நடைபெறாமல் போய்விடும்.

என்னை விட்டு போககூடாது என்பதற்க்காக இதனை சொல்லவில்லை எங்கு சென்றாலும் உங்களுக்கு காரியம் நடைபெறும் வேண்டுமானால் நீங்கள் அவரை மட்டும் தான் நம்பி இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம்!
          இன்றைய மாதம் நிறைய கருத்துக்களை தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன். மனிதன் எல்லா வளத்தையும் பெற நினைத்தாலும் வாழ்வின் இறுதிக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

நாம் நிறைய சேர்த்து வைத்தாலும் அது எல்லாம் வீண் என்று நமக்கு தோன்றும் நேரம் ஒரு இடத்தில் நமக்கு வரும். அந்த இடத்தில் கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை வீணடித்துவிட்டோம் என்று நினைக்கதோன்றும்.

உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சி மேற்க்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.இந்த ஜென்மத்தில் இருந்து விடபட ஒரு வழியை ஏற்படுத்தி தரும்.

தூக்கத்திலும் போனால் போகும் சுளி மாறினாலும் போகும் உயிர் என்பார்கள். மரணம் வரும் நேரத்தில் ஆன்மீக பயிற்சியை மேற்க்கொள்ளாமல் இதனை படித்தவுடன் உடனே ஆரம்பியுங்கள்.

உங்களுக்கு எல்லாம் நல்ல ஒரு ஆன்மீக ஆரம்பம் அமைய அம்மனிடம் பிராத்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு