Followers

Tuesday, June 30, 2015

சனி தசா பலன்கள்


ணக்கம்! 
          சனி தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். அதில் இன்று கடகத்தில் சனி அமர்ந்து தன்னுடைய தசாவை நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

சந்திரனின் வீடு என்றாலே அது தாயைதானே குறிக்கிறது. தாய்க்கும் ஜாதகருக்கும் சனியின் தசாவில் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். சந்திரன் மனக்காரகன் என்பதால் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவார். நீர் வழியாக செய்யும் வியாபாரத்தை ஜாதகருக்கு சனிபகவான் ஏற்படுத்தி தருவார்.

எனது நண்பர் ஒருவருக்கு தனுசு லக்கினம் கடகத்தில் சனி அமர்ந்து தசாவை நடத்தியது. சுயபுத்தியில் நல்லதை தந்த சனிபகவான் அதன் பிறகு நல்லதை செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். அவரது அம்மாவிற்க்கும் அவருக்கு சண்டை ஏற்பட்டு அவரின் அம்மாவை பிரித்துவிட்டது. இருவரும் தனி தனியாக குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வாடிக்கையாளருக்கு மகரலக்கினம் கடகத்தில் சனிபகவான் இருந்து தசாவை நடத்தினார். அவர் திருமணம் செய்தது அவரின் தாயின் வழியில் உள்ள பெண்ணை. சனி தசா முழுவதும் அவருக்கு நல்ல வருமானத்தை பெற்று தந்தது. சனி தசாவில் அவரின் மனைவிக்கு வேலை கிடைத்தது. அவரின் வழியாகவும் பெண் வீட்டாரின் வழியாக வருமானத்தை அடைந்துக்கொண்டு இருக்கிறார். தற்சமயம் அவருக்கு சனி தசா நடந்துக்கொண்டு இருக்கிறது.

ஒரு வாடிக்கையாளருக்கு சனி பகவான் கடகத்தில் இருக்கிறார். அவருக்கு லக்கினத்திலேயே அமர்ந்து சனி பகவான் தசாவை நடத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு நரம்பு தளர்ச்சி அவ்வப்பொழுது ஏற்படும். இன்னும் பல அனுபவங்கள் இருக்கின்றன அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முதல் படி


ணக்கம்!
          ஆன்மீகத்தை அறிய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உங்களின் மனதை அதற்கு தயார்படுத்துக்கள். நாம் ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும் என்றால் நமது மனதை அதற்கு தயார் செய்யவேண்டும்.

நம்பிக்கையோடு முதல் படியை எடுத்துவைத்தால் அனைத்தும் நல்லதா நடைபெறும். நம்பிக்கையற்று எடுத்து வைத்தால் எந்த காரியத்திலும் நாம் முன்னேற்றம் அடையமுடியாது. உங்களின் மனதை தயார்படுத்திக்கொண்டால் போதும் அதுவாகவே அனைத்தும் நடைபெற்றுவிடும்.

என்னை சந்திக்க வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்னிடம் அம்மனின் சக்தி இருக்கின்றது என்று மனதில் நினைத்துக்கொண்டு வரும்பொழுது உங்களுக்கு அம்மன் சக்தி கிடைக்கும். நமது மனது அதற்கு தயாராகும்பொழுது எளிதில் கிடைக்கும்.

மனதை முதலில் பிடித்துக்கொண்டு அதன் பிறகு மனதை விடுவது தான் இதில் உள்ள சூட்சமம். மனதை தயார் செய்து அதனை விட்டுவிட்டால் எளிதில் உங்களால் அனைத்து சக்தியையும் பெறமுடியும். தொடர்ந்து எப்படி எல்லாம் இதனை செய்யாலம் என்று வரும் பதிவில் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்வவளம்


ணக்கம் !
          செல்வ வளத்திற்க்கு என்று நிறைய பதிவுகளை அவ்வப்பொழுது கொடுப்பது ஜாதககதம்பத்தின் ஸ்பெஷல் கடந்த சில மாதங்களாக அதனை செய்யாமல் இருந்துவந்தேன். தனிப்பட்ட முறையில் சந்திக்கும் நபர்களுக்கு மட்டும் இதனை கொடுத்துவந்தேன். இன்று ஒரு செல்வவளம் தரும் கருத்தை பொதுவாக நாம் பார்க்கலாம்.

வித்தியாசம் வித்தியாசமாக கருத்துகளை மட்டும் நம் பதிவில் சொல்லவேண்டும் அதே நேரத்தில் அதனை பல பேர்கள் செய்து அதில் வெற்றி பெற்றால் மட்டுமே பொதுவாக சொல்லுவது வழக்கமாக வைத்திருக்கிறேன்.

நீங்கள் அணியும் உள்ளாடை உங்களின் செல்வவளத்தை உயர்த்தும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. உண்மை அது தான். நீங்கள் அணியும் உள்ளாடை வெள்ளை நிறத்தில் அல்லது ராேஸ் நிறத்தில் உள்ளாடையை அணியுங்கள். உங்களின் செல்வவளம் நிச்சயமாக உயர்த்தும்.

வெள்ளை அல்லது ரோஸ் கலரில் பனியன் ஜட்டியை அணியும்பொழுது உங்களின் செல்வவளம் நிச்சயம் உயரும். தினமும் அணியவேண்டும். அப்படி செய்து வந்தால் கொஞ்ச காலத்தில் உங்களின் செல்வம் உயரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சோதிட அனுபவம்


ணக்கம்!
          என்னிடம் ஒரு நண்பரின் ஆலோசனையில் ஒரு சினிமா தயாரிப்பாளர் ஒருவர் வந்து சந்தித்தார். நானும் அவரின் ஜாதகத்தை பார்த்தேன். அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. விரைய வீட்டில் சுக்கிரன் இருந்தது. என்னை அவர் சந்தித்த நோக்கம் படம் எடுக்கும்பொழுது ஏதோ பிரச்சினை என்று சொன்னார். அந்த நேரத்தில் அம்மனை வைத்து அந்த பிரச்சினையை நீக்கிவிட்டேன். படம் எடுத்துவிட்டதாக சொன்னார். அதன் பிறகு அவர் என்னை சந்திக்கவில்லை. 

பொதுவாகவே எனது சுபாவம் அடுத்தவர்களை அவ்வளவு எளிதில் நம்புவது கிடையாது. அதுவும் ஆன்மீக வேலையில் பணம் வாங்காமல் சுத்தமாக செய்வதில்லை என்றே சொல்லாம். சினிமா சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் எதுவும் செய்வதில்லை. நண்பரின் உதவியால் வந்தவர் என்று செய்தேன்.

விரைய வீட்டில் சுக்கிரன் இருக்கிறது. எந்த கிரகம் விரைய வீட்டில் இருக்கின்றதோ அந்த வீட்டின் காரத்துவம் சம்பந்தப்பட்ட வேலையில் நாம் இறங்ககூடாது. அப்படி அந்த வீட்டின் காரத்துவம் சம்பந்தப்பட்ட வேலையில் இறங்கும்பொழுது அதற்கு தகுந்த ஏற்பாடு செய்து இறங்கவேண்டும்.

தயாரிப்பாளர் படம் எடுத்தாரே தவிர அந்த படம் இன்று வரை வெளியில் வரவில்லை என்றே நினைக்கிறேன். படம் வந்தாக எனக்கும் தெரியவில்லை.சுக்கிரன் பனிரெண்டில் இருந்து அவரின் பணத்தை எல்லாம் படம் எடுக்கவைத்து சிக்க வைத்துவிட்டது. பனிரெண்டாவது வீட்டில் இருக்கும் கிரகம் அதன் காரத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் இறங்கவைத்து சிக்க வைத்துவிடும்.

எனது ஊருக்கு அருகில் ஒரு நண்பரின் ஜாதகத்தில் பனிரெண்டாவது வீட்டில் சனிக்கிரம் இருந்தது. அவர் பல தொழில் செய்துவந்தார் அவர் எந்த தொழில் செய்தாலும் அதில் அவர் தோல்வியை சந்திப்பார். எந்த தொழிலும் அவருக்கு சரியில்லை. 

கடைசியில் அவரிடம் நான் சொன்னது இருக்கின்ற தொழிலை மூடிவிட்டு எங்காவது ஒரு வேலையில் சேர்ந்துவிடு என்றேன். தற்பொழுது அவர் வேலையில் சேர்ந்துவிட்டார். சனிக்கிரகம் பனிரெண்டில் இருந்தால் ஒரு நிரந்தரமான தொழில் அமையாது. ஏதாவது சனி நன்றாக இருக்கும்பொழுது ஒரு தொழில் அமைந்தாலும் அந்த தொழில் அதிக நாட்கள் நீடிக்காது. ஏதோ என்று தொழில் இருக்கும்.

விரைய வீட்டில் அமரும் கிரகத்தின் காரத்துவம் உடைய வேலையை தேர்ந்தெடுக்காதீர்கள். அப்படியே தேர்ந்தெடுத்தால் அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தொழில் வெற்றிக்கு


வணக்கம்!
          நாம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில கடைகளை பார்த்து இருப்போம். அந்த கடைகள் பல வருடங்களாக அந்த பகுதியில் மிகப்பெரிய பெயரை பெற்று எந்த நேரமும் வியாபாரம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

ஒருவருக்கு என்ன தான் தசா நாதன் எல்லாம் நன்றாக இருந்தாலும் அவருக்கு இடையில் வரும் கோச்சாரபலன்கள் அவர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்வில் ஒரு சில அடிகளை கொடுத்துவிடும். அவர் செய்துக்கொண்டு இருக்கின்ற வியாபாரத்தையும் விட்டுவைக்காது. 

ஒருவர் தொடர்ந்து நல்ல வியாபாரம் செய்துக்கொண்டு இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவரின் வியாபார வெற்றிக்கு ஒரு ஆன்மீகவாதி பின்புலமாக இருக்கிறார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

ஆன்மீகவாதியின் கையில் தான் பெயர் பெற்று விளங்குகின்ற கடைகள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இதனை நம்பாமல் இருக்கலாம் ஆனால் இது தான் உண்மையான ஒரு நிகழ்வு.

ஆன்மீகவாதி செய்யும் பூஜையில் தான் இப்படிப்பட்ட வியாபாரம் செய்பவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வியாபாரம் செய்ய  தொடங்கினால் கண்டிப்பாக ஒரு நல்ல ஆன்மிகவாதியை வைத்து பூஜை செய்துக்கொள்ளுங்கள்.

என்னை தேடிவந்த பலருக்கு தற்பொழுது தான் ஒவ்வொன்றாக செய்துக்கொடுத்து வந்துக்கொண்டு வருகிறேன். இது அனைத்தும் முன்கூட்டியே பணம் கட்டி செய்கின்றனர். அதோடு எங்களின் பங்குகளையும் கொடுத்துவிடவேண்டும் என்ற கட்டளையோடு செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 28, 2015

குரு பெயர்ச்சி


வணக்கம் !
          குரு பெயர்ச்சி நடப்பதற்க்கு முன்பே பல நிகழ்வுகள் நடந்துவிட்டது. என்னிடம் பல வருடங்களாக இருந்த வாடிக்கையாளர்கள் ஒரு சிலருக்கு குரு கிரகம் பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டது என்னை விட்டு பிரித்துவிட்டது.. 

ஒதுங்கி இருந்த பல நண்பர்கள் எல்லாம் தற்பொழுது என்னை நோக்கி வர ஆரம்பித்து இருக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் இருந்தால் நம்மை நோக்கி நல்லவர்களை குரு கிரகம் வரவழைத்துவிடும். நமக்கு குரு கிரகம் பிரச்சினையை தரும் நிலையில் இருந்தால் நல்லவர்களை பிரித்து தீயவர்களை கொண்டுவந்து விட்டுவிடும்.

குரு கிரகம் நல்ல அறிவை தரகூடிய ஒரு கிரகம். குரு கிரகம் கெடுதல் நிலைக்கு வரும்பொழுது நமது புத்தி வேலை செய்யாது. நாம் தான் செய்கிறோம். உலகத்தில் கடவுள் இல்லை என்று நாத்தீகவாதம் பேச வைத்துவிடும். அகங்காரம் மேல் நாேக்கி வரவழைத்துவிடும்.

குரு கிரகம் நல்ல நிலைக்கு வரும்பொழுது அறிவு வளர்ச்சி அடைந்து நல்ல நிலைக்கு கொண்டு செல்ல என்ன என்ன வேண்டுமே அதனை எல்லாம் பெற்றுக்கொடுத்துவிடும்.

குரு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தாலே போதும் அவர்களுக்கு எல்லாம் தானாகவே அமைந்துவிடும். குரு கிரகத்தின் அருளை மட்டும் நாம் பெற வேண்டும் மற்ற கிரகத்தின் அருள் தேவையில்லை என்றே சொல்லலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          வாங்கி கட்டிய வரம் என்ற தலைப்பில் ஒரு சில கருத்துக்களை பார்த்து வந்தோம். தற்பொழுது அதில் ஒன்றை எழுதவேண்டும் என்று நினைத்து அதனை தொடுகிறேன்.

பணம் சம்பாதிக்க பல வழிகளை மக்கள் பயன்படுத்தினாலும் அதில் பங்கு வர்த்தம் வழியாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்களும் உண்டு.பங்கு வர்த்தகத்தில் சம்பாதிப்பது தவறு இல்லை என்றாலும் இதில் ஈடுபட வைப்பவர்களை பற்றி தான் இந்த பதிவே.

மக்களை ஆசை காட்டி இதில் பணம் கட்டினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சொல்லி மக்களின் பணத்தை கட்ட வைத்துவிடுவார்கள். பணம் கட்டிய இரண்டு நாள் அல்லது அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் பணம் எல்லாம் போய்விடும். நஷ்டம் ஏற்பட்டவுடன் அதனைப்பற்றி கவலை படாமல் அந்த நிறுவனத்தை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பார்கள். பணம் போட்டவன் நிலை அந்தோ கதிதான்.

ஷேர் புரோகர்களின் வேலை அது தான் என்றாலும் அவர்களின் வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு செல்வது இல்லை. அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கிறார்கள். அதில் இருந்து மீண்டு வருவதில்லை. பல பேர்களின் வாய்வழி தோஷம் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடுகிறது. அவர்கள் என்ன தான் வழிபாடு எல்லாம் செய்தாலும் அவர்களால் எந்த முன்னேற்றமும் ஆன்மீகவழியில் ஏற்பட செய்ய வைக்க முடிவதில்லை.

நம்ம பதிவுக்கு வரும் பல நண்பர்கள் இப்படி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரளவு சம்பாதித்துவிட்டால் வேறு நல்ல தொழிலாக பார்த்து மாறிக்கொள்ளுங்கள்.உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் அது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 27, 2015

வீடு


வணக்கம்!
          நான் நண்பர்களை சந்திக்க அவர்களின் வீடுகளுக்கு செல்லும்பொழுது அந்த வீடுகளை பார்க்கும்பொழுது அவர்கள் எந்தளவுக்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்துவிடும்.

ஒவ்வொரு மனிதர்களின் ஜாதகமும் போல் அவர்களின் வீடுகளும் நமக்கு ஜாதகம் போல் இருந்து ஒரு சில விசயங்களை எனக்கு சொல்லாமல் சொல்லுகிறது. அதனைப்பற்றி நான் பழைய பதிவில் எழுதியிருக்கிறேன். இந்த பதிவிலும் ஒன்றை சொல்லுகிறேன்.

உங்களின் வீடு சூரிய வெளிச்சம் உள்ளே வருவது போல் இருந்தால் மிக நன்றாக இருக்கும். பல வீடுகளில் பகலில் கூட மின் விளக்கை வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். சூரிய வெளிச்சம் வீட்டிற்க்குள் வந்தால் உங்களுக்கும் உங்களின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

வாடகை வீட்டில் நீங்கள் வாழ்ந்தால் கூட அப்படிப்பட்ட வீடுகளில் நீங்கள் வசிக்க வேண்டாம். அப்படிப்பட்ட வீடுகளில் நீங்கள் வசித்தால் உங்களின் வளர்ச்சி பாதிக்க செய்யும். அதே நேரத்தில் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நல்லதை நோக்கி செல்லாது. இருக்கின்ற அனைத்து வியாதியும் உங்களுக்கு வரும். உலகத்தில் உள்ள பிரச்சினை அனைத்தையும் நீங்கள் சுமப்பது போன்ற நிலை ஏற்படும்.

நீங்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்தால் இப்படிப்பட்ட வீடுகளை விட்டு நல்ல வீடாக சூரிய வெளிச்சம் உள்ளே வருவது போல் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வாழுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குழந்தை பாக்கியம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் பத்து பேருக்கு திருமணம் நடைபெற்றால் அதில் மூன்று நபருக்கு தான் இயற்கையாகவே குழந்தை பாக்கியம் பிறக்கிறது. மீதியுள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது மருத்துவர்களால் உருவாக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு மெயிலாவது எனக்கு வரும் எனக்கு குழந்தை இல்லை சார் ஏதாவது பூஜை செய்து தாருங்கள் என்று கேட்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் நிலை மிகவும் கஷ்டமானது என்று எனக்கு நன்றாக தெரியும். அதே நேரத்தில் இந்த வேலைக்கு மட்டும் அதிகம் சிரத்தையோடு பூஜை தொடர்ந்து செய்யவேண்டும்.

ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் வீடாக சோதிடத்தில் பூர்வபுண்ணிய வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் குழந்தை பாக்கியத்திற்க்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் என்று பாருங்கள். குழந்தை பாக்கியத்தைப்பற்றி பழைய பதிவில் நிறைய எழுதியுள்ளேன்.  மேலும் எழுதவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

ஒருவருக்கு திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் குழந்தை இல்லை என்றால் தகுந்த வழிகாட்டுதலோடு பரிகாரத்தை செய்யுங்கள். அதோடு மருத்தவரையும் சந்தித்து மருத்துவ ஆலாேசனை பெற்ற சிகிச்சை எடுத்து வாருங்கள்.

எங்களிடம் திருமணம் முடிந்து ஆறு வருடத்திற்க்கு மேல் உள்ள தம்பதினர்க்கு மட்டும் தான் பூஜை செய்யவேண்டும் என்று குரு சொல்லுவார். எல்லா வழிகளையும் நீங்கள் மேற்க்கொண்டு அதில் வெற்றி பெறவில்லை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதற்க்கான வழிமுறைகளை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 26, 2015

சனியின் பார்வை


ணக்கம்!
          சனிக்கிரகத்தை கண்டு மக்களுக்கு ஒரு பெரிய பயமே இருக்கின்றது அல்லது பயத்தை உருவாக்கிவிட்டார்கள் என்றும் சொல்லலாம்.

சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டிற்க்கு வந்துவிட்டது ஏழரை ஆரம்பித்துவிட்டது. ராசிக்கு ஏழில் கண்ட சனியாக வந்துவிட்டது. ராசிக்கு எட்டாவது வீட்டில் அஷ்டமசனி என்று ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லிவைப்பார்கள். 

சனிக்கிரகத்தின் வருகையைவிட சனிக்கிரகத்தின் பார்வை தான் பெரிய அளவில் பிரச்சினை உருவாக்கிவிடும். ராசிக்கு சனியின் பார்வை விழும்பொழுது அவர்களின் செயல்பாடு அதிகம் பாதிக்கபடும்.

ஒவ்வொருவருக்கும் ஜாதகத்தில் அமையும் சனியின் பார்வை எந்த வீட்டிற்க்கு வருகிறது என்று பார்த்து தெரிந்துக்கொண்டு அந்த காரத்துவம் கெடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

கோச்சாரப்படி சனியின் பார்வை எந்த வீட்டிற்க்கு வருகிறது என்று பார்த்து தெரிந்துக்கொண்டு அதற்க்கும் பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது. பரிகாரம் செய்யமுடியவில்லை என்றால் அந்த காரத்துவம் எதனை காட்டுகிறது என்று பார்த்து அந்த காரியங்களை கொஞ்ச காலத்திற்க்கு தவிர்த்துவிடுவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பயம் வேண்டாம்


ணக்கம்!
         ஒருவர் பணம் தரவில்லை என்று போட்ட பதிவை படித்துவிட்டு பலர் அரண்டுவிட்டனர். பலர் போன் செய்து என்னிடம் பேசினர். அவர்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்துவிட்டேன். அனைவருக்கும் புரியும்படி இந்த பதிவில் விளக்கிவிடுகிறேன்.

நான் இந்த தொழிலுக்கு வந்து பல வருடங்கள் சென்றுவிட்டது. என்னால் ஒருவரும் பாதிப்படைந்தது கிடையாது. நன்மையை மட்டும் தான் அடைந்துள்ளனர்.

நான் செய்கின்ற நபர்களிடம் நேரிடையாக இவ்வளவு தான் பணம் வேண்டும் என்று கேட்டது கிடையாது. ஒவ்வொரு வேலைக்கும் பதிவில் இவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். நம்மிடம் வரும் ஆட்கள் குறைத்துக்கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு சென்று இருக்கிறேன்.

தொழில் என்று வரும்பொழுது அதில் வரும் பணம் அனைத்தும் எனக்கு மேல் உள்ளவர்களுக்கு செல்லவேண்டும் அது விதி. ஒரு காரியம் நடந்து அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்று முறை நான் ஹோமம் செய்துக்கொடுத்து இருக்கிறேன். 

நான் பதிவிட்ட நாளில் எனக்கு மேல் உள்ளவர்கள் இவருக்கு இனிமேல் எதுவும் செய்யகூடாது என்று சொன்னார்கள். அவர்களின் பேச்சை கேட்டு உடனே எனது வேலையை நிறுத்திவிட்டேன். சம்பந்தப்பட்ட வேலையில் பணம் வந்தபிறகு தான் அவர்களோடு பேச வேண்டும் என்பது விதி. அத்தோடு எனது வேலை முடிந்துவிட்டது.

நான் உங்களிடம் சொல்லுவது எல்லாம் என்னால் எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது. எனது மேலிடத்தில் உள்ளவர்களுக்கு தரவேண்டிய பணம் இருந்தால் அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் செய்த வேலையை திரும்ப எடுப்பது மட்டுமே எனது வேலை.

நான் ஜாதக வழியில் நிறைய வேலையை செய்வது உண்டு. அதனை மட்டும் தற்பொழுது திரும்ப பெறும் வேலையை தொடங்குவேன். மற்றபடி என்னால் எந்த பாதிப்பும் வராது. சம்பந்தப்பட்ட நபர் பணத்தை செலுத்திவிட்டால் உடனே அனைத்தையும் சரி செய்துக்கொடுத்தவிடுவது உண்டு.

தொழிலில் இருந்து வரும் பணத்தை வைத்து தான் பல நல்ல சேவைகள் செய்யப்படுகின்றன. அதில் மட்டும் எச்சரிக்கையோடு இருங்கள். மற்றபடி என்னை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. உங்களை போல் எனக்கும் எல்லாம் உண்டு. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு பெயர்ச்சி


ணக்கம்!
               குரு பெயர்ச்சி நடைபெறுவதை தொடர்ந்து பல நண்பர்கள் குரு பெயர்ச்சியை பற்றி எழுதுங்கள் என்று கேட்டார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் குரு பெயர்ச்சி விளம்பரம் தான் இருக்கின்றது. இதில் நான் தனியாக உங்களை போட்டு கொல்ல வேண்டியதில்லை.

ராசி என்று பார்க்காமல் ஒரு சில நட்சத்திரக்காரர்களுக்கு அதிக பாதிப்பை தரும். சுக்கிரனின் நட்சத்திரக்காரர்களை விட ராகுவின் நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதிக பாதிப்பதை குரு கிரகம் உங்களுக்கு தரும்.

குரு கிரகம் உங்களுக்கு பாதிப்பை தரும் நிலையில் வருவதாக நீங்கள் கருதினால் நவகிரகத்திற்க்கு உள்ள குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வாருங்கள். 

உங்களிடம் நல்ல வசதி வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு குருவாக இருக்கும் நபருக்கு பணஉதவியை செய்யுங்கள். ஏதோ ஒரு வழியில் உங்களுக்கு நல்லதை கற்று தரும் நபர்களுக்கு கூட நீங்கள் குருவாக நினைத்து உதவி செய்யலாம்.

மாதந்தோறும் அம்மன் பூஜைக்கு என்று பணம் அனுப்புவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு குரு கிரகம் பாதிப்பை தரும் நிலையில் இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 24, 2015

அனுபவம்


ணக்கம்!
          ஒவ்வொருவரையும் நான் பயணத்தில் சந்திக்கும்பொழுது அவர்கள் ஆன்மீகம் பற்றி தான் அதிகமான கேள்விகள் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு மணி நேரத்தில் என்னால் பதில் அளிக்கமுடியாது. அதற்க்காக மீண்டும் புதிய பொழிவுடன் ஆன்மீக அனுபவங்களை எழுது ஆரம்பிக்கிறேன். அதில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். அது உங்களை மாற்றும் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்.

சக்தியைபற்றி நான் எழுதினாலும் அந்த காரணத்திற்க்காக என்னை சந்திப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதிலும் முழுவதும் பிராமணர்கள் மட்டுமே சந்தித்து அதனை பெறுகின்றனர். அவர்கள் அதிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சக்தியை பெறுகின்றனர். நம்ம ஆட்கள் ஏதாவது சம்பாதிக்க முடியுமா என்று தான் வருகின்றனர். சம்பாதிப்பதும் ஒழுங்காக சம்பாதிக்கிறார்களா என்றால் அதிலும் திருட்டு புத்தியை பயன்படுத்துவதால் பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.

சக்தியை பயன்படுத்தி தன்னுடைய ஆன்மீக வாழ்விலும் சரி சொந்த வாழ்க்கையிலும் பெரிய அளவில் பிராமண நண்பர்கள் சாதிக்கின்றனர். எனக்கு யார் என்பதில் முக்கியம் கிடையாது. சரியான முறையில் வருபவர்களுக்கு நல்ல வழி காட்டப்படும்.

இனிமேல் ஆன்மீக சம்பந்தமான நிகழ்வுகள் அதிகமாக நடத்த திட்டமிட்டுள்ளேன். இதில் விருப்பம் இருப்பவர்கள் என்னிடம் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்.

இன்று ஒரு வேலையாக கோயம்புத்தூர் செல்லுகிறேன். ஒரு நாளில் திரும்பிவிடுவேன். பதிவுகள் வரும் தொடர்ந்து வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 23, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
         கடந்த மூன்று நாட்களாக சென்னையில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு தற்சமயம் இந்த பதிவை அளித்துவிட்டு தஞ்சாவூர் கிளம்பிவிட்டேன். ஒவ்வொரு நண்பர்களையும் சந்திக்கும்பொழுது புதிய அனுபவத்தையும் நான் பெறமுடிகிறது.

ஆன்மீகம் சம்பந்தப்பமாக நிறைய நண்பர்கள் என்னை சந்தித்தார். அதில் அவர்கள் ஒன்று சொல்வது மட்டும் எனக்கு முரணாக தெரிந்தது. ஆன்மீகத்தை கற்பதற்க்கு பல குருநாதர்களை அவர்கள் நாடி போவது தெரியவந்தது. பல பேர்களை நாடினால் ஆன்மீகத்தை கற்கமுடியாது. 

பல குருவை நாடும்பொழுது குரு எல்லாம் இப்படி இருப்பார்கள் என்று புத்தகம் எழுதுவதற்க்கு உதவும். ஒரு குருவிடம் சென்று அவர் தருவதை பெற்றுக்கொண்டு அதனை வளர்க்க ஆரம்பித்தால் கரை சேரலாம். பல பேர்களை நாடினால் ஆன்மீகம் வளராது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு இடத்தில் யோகா தியானம் எல்லாம் கற்றுக்கொண்டு அதில் முன்னேற்றம் அடைவது நல்லது. நீங்கள் கற்ற யோகம் தியானம் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதை நாம் சக்தியை பெறும்பொழுது தான் தெரியவரும். என்னிடம் வரும்பொழுது நீங்கள் அதனை உணரமுடியும். நீங்கள் சரியானபடி தான் கற்றுக்கொண்டீர்கள் என்றால் என்னை சந்திக்கும்பொழுது உங்களுக்குள் சக்தி என்றால் என்ன என்று தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 22, 2015

அம்மன் அருள்


வணக்கம்!
          கடந்த காலத்தில் ஒருவர் ஏமாற்றினால் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவது உண்டு. தற்பொழுது அவ்வாறு விடுவது கிடையாது. அம்மனே அதற்கு வழி வகுத்துக்கொடுத்துவிடுகிறது.

என்னை ஒருவர் ஏமாற்றுனார் என்று பதிவில் சொன்ன நாளில் அன்று இரவு அவரின் குலதெய்வத்தை அம்மன் என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அவர் இனி எவ்வளவு பெரிய ஆளை வைத்து செய்தாலும் அவரிடம் இனி குலதெய்வம் செல்லாது. நான் எதுவும் செய்யாமல் அவரின் குலதெய்வத்தை என்னிடம் அம்மன் கொண்டு வந்து கொடுத்துவிட்டது.

இனி ஒவ்வொரு தடை கல்லாக அவருக்கு விழவைக்க ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு நாளும் ரண வேதனையை கொடுக்க மேலிடம் செய்ய ஆரம்பிக்க போகின்றது. சும்மா இருக்கின்ற ஆளை நல்லபடியான ஒரு வாழ்வை அமைத்துக்கொடுத்தால் என்னிடமே வில்லகத்தை காட்டினால் நான் என்ன செய்வேன் என்று பாடம் கற்பித்துக்கொடுத்தால் தான் உண்டு.

உங்களின் பிரச்சினையை தீர்க்க வழி செய்துக்கொடுக்கிறேன். பிரச்சினை தீர்ந்துவிட்டது. இனி இவரின் தயவு தேவையில்லை என்று மட்டும் நீங்கள் நினைக்காதீர்கள். அம்மன் என்றால் என்ன என்று இந்த ஆள் இனிமேல் உணரஆரம்பிப்பார். அதுபோல் நீங்கள் தவறு செய்யாதீர்கள். உண்மையோடு வாருங்கள் நல்லது செய்கிறேன். அதனைவிட்டுவிட்டு ஏமாற்றலாம் என்றால் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டிய நிலையை அம்மன் ஏற்படுத்திக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 20, 2015

அனுபவம்


ணக்கம்!
          ஒவ்வொரு ஊர்களிலும் என்னை சந்திக்கும்பொழுது கேட்கபடும் முதல் கேள்வியாக இருப்பது. எனக்கு கடன் இருக்கிறது அதனை தீர்ப்பதற்க்கு வழி சொல்லுங்கள் என்று கேட்பார்கள். 

ஒவ்வொருவருக்கும் கடன் ஏற்படுவது இயற்கை. பணக்காரர்கள் என்று சொல்லப்படும் நபர்களுக்கும் கடன் இருக்கிறது. ஜாதகத்தில் ஆறாவது வீடு என்று ஒன்று இருக்கும் வரை மனிதனுக்கு கடன் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். கொஞ்ச காலம் விட்டுவைக்கும் அதன் பிறகு மறுபடி கடன் ஏற்படும். இது இயற்கை என்று எடுத்துக்கொள்வது நல்லது.

ஒவ்வொருவருக்கும் நல்ல குடும்பம் அமைந்துவிட்டால் அதுவே மிகப்பெரிய புண்ணியம் நாம் செய்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். குடும்பம் அமையவில்லை என்றால் தான் பிரச்சினையை தவிர கடன் இருப்பது பிரச்சினை இல்லை.

சம்பாதிக்கவே இல்லை என்று மனம் தளரவேண்டாம். இன்னும் பத்து வருடங்கள் சம்பாதிக்காமல் இருந்தால் கூட அதன் பிறகு சம்பாதித்துக்கொள்ளலாம். நல்ல குடும்பம் இருந்தால் போதும். கடனைப்பற்றி கவலைக்கொள்ள வேண்டாம். கடனை அடைக்க கடவுள் ஒரு வழி செய்துக்கொடுப்பார்.

நல்ல குடும்பங்களை சந்திக்கும்பொழுது நான் அம்மனிடம் இவர்களின் குடும்பத்தில் என்றும் சந்தோஷத்தை அளிக்கவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டு வருவேன். நல்ல குடும்பம் அமைந்துவிட்டால் போதும்.

சென்னையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 19, 2015

போட்டுக்கொடுத்த அம்மன்


வணக்கம்!
          அம்மன் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்க்கு இது நல்ல உதாரணமாக உங்களுக்கு இருக்கும். என்னை தேடி வரும் நண்பர்களிடம் சொல்லும் வார்த்தை நேர்மையாக இருங்கள் என்பது மட்டுமே. என்னை ஏமாற்ற பார்க்காதீர்கள் என்று அடிக்கடி சொல்லுவேன்.

ஒருவருக்கு அம்மனை வைத்து வேலை செய்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன். மாதம் மாதம் தவறாது ஹோமம் எல்லாம் செய்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன். அவரின் வளர்ச்சிக்கு ஒரு காரியம் ஒன்றை செய்துக்கொடுத்தேன். அதன் வழியாக ஒரு பெரிய வளர்ச்சிக்கு அது வித்திட்டது. அதில் இருந்து வந்த பணத்தில் இருந்து ஒரு பைசா கூட அவர் கொடுக்கவில்லை. 

நேற்று காலை எனக்கு மேலிடத்தில் இருந்து போன் வந்தது. நீ செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கும் நபரிடம் இருந்து பணம் வரவில்லை. அம்மன் என்னிடம் சொல்லிவிட்டது. மறுபடி மறுபடி அம்மனை அவருக்கு வேலை செய்ய சொல்லி தொந்தரவு செய்கிறாய் உடனே நிறுத்து என்று சொல்லிவிட்டார். 

மேலிட உத்தரவை நான் மதிக்கவேண்டும் அல்லவா. அதனால் சம்பந்தப்பட்ட நபரின் போனை நேற்று மதியத்தில் இருந்து எடுக்கவில்லை. நான் எதார்த்தமாக எல்லாேரிடமும் பழகுவேன். எனது மேலிடம் அப்படில்லை ஒழுங்காக இருந்தால் மட்டுமே செய்ய சொல்லுவார். 

எங்களை ஆன்மீக வேலைக்கு கூப்பிடும்பொழுதே சொல்லுவது பத்து சதவீதம் எங்களுக்கு தந்துவிடவேண்டும். பூஜைக்கு தனியாக செலவு செய்யவேண்டும் என்று சொல்லிவிடுவது உண்டு. அதனை மறந்துவிட்டு என்னை சாமார்த்தியமாக பேசி ஏமாற்றினால் அம்மனின் கோபத்திற்க்கு ஆளாகவேண்டியது தான். 

உங்களின் கர்மாவை எல்லாம் எடுத்து தான் உங்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறேன். நீங்கள் அதனை மறந்துவிட்டு வாழ்ந்துவிடலாம் என்றால் உலகத்தின் கர்மாவை எல்லாம் சுமக்கவேண்டிய நிலை ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 18, 2015

சனி தசா பலன்கள்


வணக்கம்!
          சனி தசாவைப்பற்றி பார்த்து நீண்ட நாட்களாவிட்டது. இன்று அதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். மிதுனத்தில் ஒருவருக்கு சனி இருந்து தசாவை நடத்தினால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்க்கலாம். 

என்னுடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு மேஷ லக்கினம் அவருக்கு மிதுனத்தில் சனி இருந்து தசா நடத்தும்பொழுது வாழ்வு மிகச்சிறப்பாக அமைந்த காலகட்டமாக அது அமைந்திருந்து. அவர் பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வந்தார். 

தற்பொழுது அவருக்கு சனி தசா நடந்து வருகிறது. நிறைய ஆர்டர்களை அவர் பெற்று செய்து தொழில் செய்து வருகிறார். நல்ல வாழ்க்கை அவருக்கு மிதுனத்தில் இருந்த சனி செய்துக்கொடுத்து வருகிறது.

கடக லக்கனத்தை கொண்ட நண்பர் ஒருவருக்கு சனி தசா நடந்து வருகிறது. அவர் தொழில் செய்து வருகிறார். பொதுவாக எனக்கு தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர் அதிகமாக இருப்பதால் அவர்களின் ஜாதகத்தை வைத்து பலனை சொல்லுகிறேன். 

கடக லக்கினத்தை உடையவர்க்கு பனிரெண்டாம் வீடாக மிதுனத்தில் சனி இருந்து தசாவை நடத்தி வருகிறது. இவர் காப்பீடு தொழிலில் உள்ளார். இவர்க்கு பனிரெண்டில் உள்ள சனி நிறைய காப்பீடுகளை பெற்று தந்து தொழில் நன்றாக உள்ளது.

மிதுனத்தில் இருந்து சனிதசாவை நடத்தினால் ஒரு சில லக்கினத்தை பொறுத்து பலனை தருகிறது. அதே நேரத்தில் பொதுவான பலன் என்றால் ஒருவருக்கு நல்ல செல்வ செழிப்பை வியாபாரம் செய்வதால் வருகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கணவன் மனைவியிடம் சண்டை சச்சரவுகளை உருவாக்கி வருகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 17, 2015

சக்தி


வணக்கம்!
          இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு ஆன்மீக பயிற்சி இடம் இருக்கின்றது. அப்படி இருந்தும் பல நண்பர்கள் நல்ல ஆன்மீகப்பயிற்சி எடுக்க எது சிறந்த இடம் என்று என்னிடம் கேட்டுள்ளனர்.

ஆன்மீகத்தை கற்று தரும் இடம் அனைத்திலும் ஒரே மாதிரியான யோகம் தியானத்தைதான் சொல்லி தருவார்கள். கற்று தரும் குருவின் சக்தியை பொறுத்து தான் நாம் சக்தியை பெறுவது அமையும். குருவிடம் நல்ல சக்தி இருந்தால் நாம் எந்த யோகம் தியானம் கற்காமல் கூட நம்மை நல்ல சக்தி படைத்தவர்களாக மாற்றிவிடுவார்கள்.

நல்ல சக்தி படைத்தவர்களின் பார்வை நம்மீது பட்டாலே போதும் அதுவே நமக்கு பெரிய புண்ணியமாக போய்விடும். அப்படிப்பட்ட சக்தி படைத்தவர்கள் வெளியில் அதிகம் வருவது கிடையாது. நாம் தான் அவர்களை தேடிச்செல்வ வேண்டும்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் யோக தியானம் பழகுங்கள். அதனை கற்கும்பொழுது சக்தி படைத்தவர்களிடம் சென்று கொஞ்சம் நேரம் அமர்ந்துவிட்டு வாருங்கள். உங்களின் சக்தியை மேம்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 16, 2015

சக்தியும் நாளும்


ணக்கம்!
          ஒவ்வொரு அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களை நாம் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாம் ஆன்மீகப்பயிற்சி செய்தாலும் அல்லது ஆன்மீக வழிபாடு செய்தாலும் இந்த நாட்களில் செய்யும்பொழுது நாம் செய்யும் சிறிய வழிபாடு கூட அதிக நன்மையை நமக்கு கொடுத்துவிட்டு செல்லும்.

ஆன்மீக சாதனை செய்வதற்க்கு ஏன் மலையை தேர்ந்தெடுத்து நம் ஆட்கள் செய்தார்கள் என்றால் மலையில் இருந்து வெளிப்படும் சக்தியின் அளவு அதிகம் என்பதால் அந்த இடத்தை தேர்வு செய்தார்கள்.

மலையை தேடி நாம் செல்லுவது கடினமாக இருந்தால் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். மலையின் சக்தியை விட பன்மடங்கு நமக்கு அந்த நாட்களில் கிடைக்கும்.

மாதசிவராத்திரி என்று ஒன்று வரும் அந்த நாளில் நாம் சிவன் அல்லது அம்மனை வணங்குவதற்க்கு மிகவும் ஏற்ற நாள். அதிகப்படியான சக்தியை நாம் பெறுவதற்க்கு இந்த நாளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நல்ல நாளை பயன்படுத்திக்கொண்டு சக்தியை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சக்தியை எடுக்க இதுவரை நீங்கள் தவறினாலும் இனிமேலாவது இந்த நாட்களை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 15, 2015

சந்திரனும் நோயும்


வணக்கம்!
          ஒருவருக்கு சந்திரன் ஆறாவது வீடாக அல்லது சந்திரன் ஆறாவது வீட்டில் அமர்ந்து இருந்தால் அவரின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்பு அதிகம் ஏற்படும்.

ஆறாவது வீடு நோயை காட்டும் வீடாக இருப்பதால் அதில் சந்திரன் அமரும்பொழுது நீர் சம்பந்தப்பட்ட நோய் அதிகம் வருவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.

என்னுடைய அனுபவத்தில் ஆறாவது வீட்டில் சந்திரன் இருப்பவர்களுக்கு அதிகம் மூச்சு விடுவதில் பிரச்சினை இருக்கிறது. நுரையீரல் பிரச்சினையால் இது ஏற்படுகிறது. இதற்கு மருத்துவர்களிடம் செல்லும்பொழுது அதற்கு தீர்வு என்பது அவ்வளவு எளிதில் கொடுத்துவிடமுடியாது. இப்படிப்பட்டவர்கள் பல மருத்துவர்களிடம் சென்று தீர்வு ஏற்படவில்லை என்று நொந்து போனவர்களும் இருக்கின்றார்கள்.

மனநிலையில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு சந்திரனுக்கு உரிய பரிகாரங்களை செய்யுங்கள். அதிகம் மனஅழுத்தம் உள்ள துறையில் பணிபுரிவதை தவிருங்கள்.

மூச்சு பிரச்சினைக்கு சித்தர்கள் வழியில் குணப்படுத்தினால் ஒரளவு தீர்வு ஏற்படும். கண்டக்கத்தரி என்ற காயை வாங்கி குழம்பு வைத்து சாப்பிட்டால் இந்த பிரச்சினை தீரும்.

கிராமபுறங்களில் முரட்டு வைத்தியம் என்ற ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால் டாஸ்மாக்கில் பிராந்தி வாங்கி வாரம் ஒரு முறை சாப்பிட்டால் இந்த பிரச்சினைக்கு நிரந்தரவு தீர்வு ஏற்படும்.

இன்று மதியம் கோயம்புத்தூர் பயணம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கோயம்புத்தூரில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 14, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள் தொடர்ச்சி





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 13, 2015

ஆன்மீகப்பயிற்சி எதற்கு?


வணக்கம்!
                        வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைக்கு நமது கர்மாவை நாம் கை காட்டினாலும் அதில் இருந்து விடுபடுவதற்க்கு நாம் முயற்சி செய்வதில்லை அல்லது அதற்க்கான சரியான வழியை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. விதி நம்மை துரத்துகிறது என்று சொல்லிக்கொண்டு இருப்பதும் சரியான பதில் இல்லை.

ஒவ்வொரு ஜென்மத்திலும் கர்மா துரத்திக்கொண்டும் நாம் சேர்த்துக்கொண்டும் தான் இருப்போம். ஒவ்வொரு நாளும் கர்மா சேர்ந்துக்கொண்டு தான் இருக்கும். அந்த கர்மாவைப்பற்றி கவலைக்கொள்ளாமல் சரியான ஆன்மீகபாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் அதில் இருந்து நீங்கள் மீழ்வது எளிது.

நாம் செய்யும் ஆன்மீக முயற்சி எளிதில் நம்மை கர்மாவில் இருந்து மீட்டு நல்வாழ்வையும் அதே நேரத்தில் அனைத்து ஜென்மத்தில் இருந்தும் விடுதலை செய்ய வைக்கும்.

தற்பொழுது நமது இளைஞர்களுக்கு பெரிய பிரச்சினை குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது. பத்து திருமணம் நடைபெற்றால் ஐந்து திருமண தம்பதிகள் மருத்துவமனைக்கு அலைந்து குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். இப்படி ஏகாப்பட்ட விசயத்தை சொல்லலாம். ஏன் பல பேர்க்கு திருமணம் கூட நடைபெறமாட்டேன்கிறது.

இளைஞர்களாக இருக்கும்பொழுதே நீங்கள் சரியான ஒரு ஆன்மீகப்பயிற்சியை மேற்க்கொண்டு வந்தீர்கள் என்றால் இப்படிப்பட்ட பிரச்சினையை எல்லாம் எளிதில் சமாளித்து வந்துவிடலாம்.

ஒருவரது மனது பண்பட்டாலே அவனுக்குள் தெய்வீகதன்மை வந்துவிடும் என்று பல மகான்கள் சொல்லியுள்ளனர். மனதை சரியான வழியில் கொண்டு செல்வதற்க்கு ஆன்மீகம் உங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்யும். மனதை சரிப்படுத்தினாலே உங்களின் ஆத்மா புனிதம் அடைந்துவிடும். ஏதாவது ஒரு ஆன்மீக வழியை நீங்கள் உடனே துவங்குங்கள்.

வயதான காலத்தில் ஆன்மீகப்பயிற்சி செய்தால் உங்களின் உடல் ஒத்துழைப்பதில்லை. இளைஞர்களாக இருக்கும்பொழுது உங்களின் ஆன்மீக பயணத்தை தொடங்குங்கள்.

நாளை அம்மன் பூஜை நடைபெறுகிறது.

விரைவில் கோயம்புத்தூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் உடனே தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 12, 2015

கிரக மாற்றம்


வணக்கம்!
          கிரகத்தை வைத்து தான் நமது வாழ்வு அமைகிறது. நான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கிரகத்தை கணித்துவிட்டு செய்கிறேன். திக்கற்ற நிற்பவனுக்கு அவனது ஜாதகம் ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும்.

முதன் முதலில் நமது வாடிக்கையாளர்க்கு ஜாதகத்தை வைத்து வேலை செய்துவிடமுடியாது. அதற்கு கால அவகாசம் வேண்டும்.  இயற்கையாகவே நடைபெறும் கிரகப்பெயர்ச்சியை பயன்படுத்திக்கொள்வது எனது வழி.

இன்று இரவு சனி வக்கிரப்பெயர்ச்சியாகிறார் என்று சொல்லிருந்தேன். மீன ராசியினர் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. மீன ராசியினர்க்கு அஷ்டமசனியாக வேலை செய்யபோகிறார். செப்டம்பர் மாதம் வரை அவர் அப்படி வேலை செய்யப்போகிறார்.

மீன ராசியினர்க்கு குருவும் ஜீலை மாதத்தில் இருந்து சரியில்லாத நிலைக்கு செல்லபோகிறார். அஷ்டமசனி மற்றும் குருவின் நிலையும் சரியில்லை என்பதால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

சனிக்கிரகம் துலாத்திற்க்கு வரப்போவதால் இது இருக்க போவது குறைந்த காலம் தான். குறைந்த காலமாக இருந்தாலும் கெடுதல் கிரகம் என்பதால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. யார்க்கு பிரச்சினை என்று நினைப்பவர்கள் திருநள்ளார் சென்று தீர்த்தம் ஆடிவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 11, 2015

நேர்மையான வழி


வணக்கம்!
          என்னுடைய வழி நேர்மையான வழி என்று பல தடவை இந்த பதிவில் சொல்லியுள்ளேன். என்னை சந்திக்கவேண்டும் என்று பல நண்பர்கள் தொந்தரவு செய்து என்னை வந்து சந்திக்கும்பொழுது அவர்கள் கேட்கும் கேள்வி எப்படியாவது எதிர்மறையான செயல்களை செய்ய கற்றுதாருங்கள் என்பது போல் இருக்கும்.

சித்தர்களின் வழி கூட பார்த்தால் நல்ல நிலைக்கு இட்டு செல்லும் வழியாகவே இருக்கும் ஆனால் நம்ம ஆட்கள் அதனை தவறாக பார்த்து அவர்களை பற்றி சொன்னாலே ஏதோ மாந்தீரிகம் செய்யும் ஆட்கள் போலவே காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜாதககதம்பத்தில் இருந்து வரும் ஆட்கள் எல்லாம் நல்லமுறையில் ஆன்மீகத்தை நாடவேண்டும் என்பதற்க்காக தான் பல நல்ல விசயங்களை எழுதிவருகிறேன். நேர்மையான வழியில் செல்லுவதற்க்கு தயாராக வரும் ஆட்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்.

ஆன்மீக தாகம் இருப்பவர்களை என்னால் எளிதில் அடையாளம் காணமுடியும் அவர்களுக்கு என்னால் வழிகாட்டமுடியும். நேர்மையான வழியில் நாம் செல்லவேண்டும் என்று முடிவு செய்து ஆன்மீகத்தை நாடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி வக்கிர பெயர்ச்சி


வணக்கம்!
          நாளை சனிக்கிரகம் வக்கிரம் அடைகிறார். இதுவரை சனியால் தொந்தரவை அடைந்தவர்கள் எல்லாம் கொஞ்ச காலத்திற்க்கு பிரச்சினை ஒய்ந்தது என்று இருக்கலாம்.

கிரகங்களின் பெயர்ச்சி நல்லதை தரும்பொழுது அதனை நாம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். ஒரு கிரகம் நல்லதை தரும் நிலையில் நமக்கு இருக்கிறது என்றால் அந்த நேரத்தில் வேகமாக ஒடவேண்டும்.

நம்மிடம் தொழில் செய்பவர்களுக்கு சொல்லும் அறிவுரை இப்படிப்பட்ட கிரக நிகழ்வுகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் என்னிடம் பணம் கட்டுபவர்கள் எதற்க்கும் பயப்படதேவையில்லை நான் பார்த்துக்கொள்கிறேன்.

கெடுதல் பலன் தருகிறார் என்றால் அந்த காலத்தில் நீங்கள் ஆன்மீக விசயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். குரு கிரகமும் பெயர்ச்சியாக தயாராகிவிட்டார். தற்பொழுது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு சில மாற்றங்கள் வரும். மாற்றத்திற்க்கு தயாராக இருங்கள். ஒரு சிலருக்கு தற்பொழுதே அந்த பலனை எல்லாம் தரஆரம்பித்துவிட்டார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

எந்த வழி நல்ல வழி


வணக்கம்!
          ஆன்மீகத்திற்க்கு எந்த வழி சரியான வழி என்று ஒரு கேள்வி வந்தது. அதாவது எந்த வழிமுறையை பின்பற்றி செல்லலாம் என்று கேட்டார்.

ஒவ்வொருவருக்கும் எந்த வழி சரியான வழி என்று தோன்றுகிறதோ அந்த வழியில் செல்லுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொருவரின் குடும்ப பாரம்பரித்தை ஒட்டி அவர்களின் வழிமுறையில் சென்றால் கொஞ்சம் எளிதில் வெற்றிபெறமுடியும்.

ஒரு சில குடும்பங்களில் சித்தர் வழியில் யோகம் செய்வார்கள். அவர்களின் வழிதோன்றல்கள் யோகம் வழியில் முயற்சி செய்தால் எளிதில் கரை சேரமுடியும்.

ஒரு பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அவர்களின் வழி மந்திரங்களை வாய்விட்டு சொல்லுவது. அந்த வழியில் அவர்களின் வழிதோன்றல்கள் முயற்சி செய்தால் அவர்கள் எளிதில் வெற்றி பெறமுடியும்

ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பத்தின் வழியில் முயற்சி செய்தால் அதில் அவர்கள் எளிதில் வெற்றி பெறலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 10, 2015

சித்தர்கள் பற்றி தெரிந்த சேதி


வணக்கம்!
          சித்தர்கள் பற்றி தெரிந்த சேதி என்ற பதிவை எழுதியிருந்தேன். அதனைப்படித்துவிட்டு நண்பர்கள் பல இடங்களில் முயற்சி செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த பதிவு எழுதும் பொழுது கூட நெருங்கிய நண்பர் ஒருவர் மெயில் செய்து இருந்தார்.

சித்தர்கள் என்று நாம் தேடினாலே நமது மனது அதனை நோக்கி அதுவாகவே இழுத்து சென்றுவிடும். சாதாரணமானவர்களுக்கு கூட இது நடக்க வாய்ப்பு இருக்கின்றது. சித்தர்கள் நமக்கு நல்வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு தேடுங்கள் விடை கிடைக்கும்.

சித்தர்கள் என்றாலே சிவனின் அம்சமாகவே பல பேர் சொல்லிருப்பார்கள். சிவனின் அடியவர்கள் சிவனின் வேலையை செய்பவர்கள் என்று பல புத்தங்களில் நீங்கள் படித்து இருக்கலாம் அல்லது நண்பர்கள் வழியாக கேட்டுருக்கலாம். சித்தர்கள் என்றாலே சிவனின் அம்சம்போலவே பல இடங்களில் பார்த்து இருக்கலாம்.

பெருமாள் வழிபாட்டு முறையிலும் சித்தர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களும் பல வித்தைகளை செய்து இருக்கிறார்கள். பல நல்ல சித்தர்கள் பெருமாள் வழிபாட்டு முறையில் இருக்கின்றனர் என்று செவிவழி செய்து எனக்கு கிடைத்தது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நண்பர்களுக்கு


வணக்கம்!
          நமது நண்பர்கள் எல்லாம் என்னை தொடர்புக்கொள்ளுவதற்க்கு வழி செய்தால் ஒவ்வொருவரும் வந்து புலம்புகிறார்கள். என்னிடம் பணமே இல்லை நான் என்ன செய்வது என்று சொல்லுகிறார்கள். என்னிடமும் பணம் இல்லை நான் என்ன செய்வது என்று திருப்பி தான் சொல்லமுடியும்.

நிறைய வழிபாட்டுமுறைகளை ஜாதககதம்பத்தில் சொல்லியுள்ளேன் அதனை பின்பற்றி வாருங்கள் அதில் இருந்து விடுபடலாம் என்று பல முறை சொல்லி இருக்கிறேன். அதனையும் செய்வதில்லை பிரச்சினை பிரச்சினை என்று சொன்னால் மட்டும் உடனே எப்படி விலகும்.

என்னிடம் ஒவ்வொரு பூஜைக்கும் குறைந்தது பத்தாயிரம் செலவு ஆகும். அதற்கு தான் நான் தொழில் செய்பவர்களை நாடி செல்லுகிறேன். நீங்கள் எந்த பிரச்சினைக்கும் குறைந்தது பத்தாயிரம் செலவு செய்யமுடியும் என்றால் தொடர்புக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவர் அவர்களே விடுபட பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். ஏதாவது ஒன்றை தொடர்ந்து விடாமல் செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.

நமது தொழில் செய்பவர்களிடம் CCTV கேமிரா வழியாக மொபைலில் கண்காணிக்க வழி செய்துக்கொடுங்கள் என்று சொல்லிருந்தேன். இதுவரை யாரும் அதற்கு ஏற்பாடு செய்த மாதிரி எனக்கு தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          நமது அம்மன் பூஜை வரும் 14-06-2015 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும். அம்மனின் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
ராசிபுரத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
திரு சத்தியசீத்தராமன் அவர்கள்
மற்றும்
கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்

மற்றும் பலர் காணிக்கை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை அன்று அம்மனிடம் புதிய வேண்டுதலை வைத்துக்கொள்ளலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 8, 2015

பூஜை


வணக்கம்!
          இன்று அம்மனுக்கு வருடம்தோறும் நடைபெறும் பொதுவான பூஜை நடைபெறுகிறது. மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து நாளை காலை ஆறு மணி வரைக்கும் பூஜை நடைபெறும்.

அம்மன் கோவிலுக்கு உள்ள உரியவர்களால் இந்த பூஜை நடத்தப்படுகிறது. கடந்த ஒரு வாரக்காலமாக இந்த வேலையில் தான் அதிகமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்.

நமது அம்மன் கோவில் என்றாலே வித்தியாமாக தான் அனைத்தும் நடைபெறும். வழிபாட்டு முறை மற்றும் பூஜை முறை எல்லாம் இதர கோவிலில் இருந்து வித்தியாசம் இருக்கும். விடிய விடிய பூஜை நடைபெறும். விதவிதமான பூஜை முறைகள் கையாண்டு பூஜை நடைபெறும்.

ஒரு வருடத்திற்க்கு தேவையான முக்கிய பூஜைகள் இன்று நடைபெறும். இந்த பூஜை அம்மனுக்கு ஒரு வருடத்திற்க்கு தேவையான அனைத்து சக்தியும் உருவேற்ற நடைபெறுகின்ற பூஜை. மிக பயபக்தியோடு இதனை நடத்துவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 5, 2015

ஆலய தரிசனம்


வணக்கம்!
          ஒரு நண்பர் என்னை சந்திக்கும்பொழுது கேட்டார் நீங்கள் ஏன் கோவிலுக்கு செல்லுகின்றீர்கள். என்ன காரணத்தால் அப்படி செல்லுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

என்னிடம் அம்மன் இருக்கும்பொழுது எதற்க்காக கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் கேள்வி இருந்தது. சின்ன வயதில் இருந்தே எனக்கு கோவிலுக்கு செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று. நான் வளர்ந்த பிறகு அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது. முதல் காரணம் இது தான். 

ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது கோவிலுக்கு உள்ளே செல்லகூடாது கோபுர தரிசனம் மட்டும் போதும் என்பது எங்களின் வழிமுறை. இந்த வழிமுறை இருந்தாலும் நான் மட்டும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

உள்ளே கோவிலுக்குள் செல்லும்பொழுது அந்த கோவிலின் ஒவ்வொரு விசயத்திலும் நான் கவனம் செலுத்துவது வழக்கம். ஏதாவது ஒரு இடத்தில் தவறுகள் அதாவது சக்தியின் நிலை குறைபாட்டோடு தெரிந்தால் குருவை நினைத்து அதனை சரி செய்யவேண்டும் என்றும் நினைப்பேன். 

ஒரு சில கோவிலுக்களுக்கு என்னுடைய தேவைக்காக கோவிலுக்கு செல்வதும் உண்டு. அதிகப்பட்சம் அந்த கோவிலை தரிசனம் செய்யவேண்டும் என்று ஒரு சில சூட்சமநிலை இருக்கின்றது. அந்த காரணத்திற்க்காகவும் கோவிலுக்கு செல்வது உண்டு. முதல் நிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஆலயதரிசனம் செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சித்தர்கள் பற்றி தெரிந்த சேதி


வணக்கம்!
          சித்தர்களை பற்றி நாம் படித்து தெரிவதைவிட ஒரு குருவின் வழிகாட்டுதலில் அவர்களைப்பற்றி நாம் அறிந்துக்கொண்டால் நன்றாக நமக்கு புரியவரும். புத்தகங்களில் உள்ள படிப்பைப்பற்றி நான் குறைச்சொல்லவில்லை அதுவும் படித்துக்கொண்டு ஒரு குருவின் வழிகாட்டுதலோடு செய்தால் நல்லது.

தற்பொழுது எல்லாம் குழந்தை இல்லை என்று பல பேர் கஷ்டப்படுகின்றனர். இதற்கு எல்லாம் சித்தர்களின் வழிகொண்டு அந்த பிரச்சினையை சரிசெய்யமுடியும். இன்றைக்கும் நாம் அலைந்து திரிந்தால் ஏதாவது ஒரு நல்ல சித்தர் நமக்கு கிடைப்பார். அவரின் அறிவுரையின் பேரில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ஒரு சித்தர் நமக்கு குருவாக வந்தால் மிகப்பெரிய புண்ணியத்தை நாம் செய்து இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். அவர் கற்று தரும் ஒவ்வொரு விசயமும் நமக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகவே இருக்கும்.

சித்தர்கள் கண்டுபிடித்து கொடுத்த அனைத்தும் அற்புத விசயம் என்றாலும் அவர்களின் மிகப்பெரிய ஒன்று. சாகாகலை என்ற வி்த்தை தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சாகவேண்டும் என்று நிலை இருக்கும்பொழுது சாககூடாது என்று நினைத்து அதற்கு பயிற்சி செய்தார்கள் என்றால் அது தான் மிகப்பெரிய செயல்.

சித்தர்கள் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்தாலும் அவர்களைப்பற்றி எழுதியவர்கள் எல்லாம் தற்பொழுது இருந்த இடம் இல்லாமல் போய்விட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் இத்தோடு இதனை முடித்துக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 4, 2015

உணவு முறை


வணக்கம்!
          காலையில் உணவு முறைப்பற்றி சொன்னேன். ஒருவர் ஆன்மீகப்பயிற்சி எடுக்கிறார் என்றால் முதலில் அவருக்கு குரு உணவு முறையில் தான் கட்டுப்பாடு வைப்பார். 

நான் ஆன்மீகப்பயிற்சி எடுக்கும்பொழுது முதலில் எனது குரு சொன்ன விசயம் சாப்பாட்டிற்க்கு முக்கியத்துவம் கொடுக்ககூடாது என்று சொன்னார். நீ எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் ஆனால் சாப்பாடு சாப்பாடு என்று அலையகூடாது என்றார். சாப்பாடு மட்டும் தன் கையால் சமைத்து போடுவார். அடுத்தவர்களின் வீடுகளில் சாப்பிட அனுமதிக்கமாட்டார். 

பொதுவாக எந்த ஒரு ஆன்மீகவாதியிடமும் நீங்கள் ஆன்மீகப்பயிற்சி எடுத்தாலும் அவர்கள் முதலில் கை வைப்பது உங்களின் உணவு முறையில் தான் இருக்கும். உணவு முறையில் கட்டுபாடு வைத்துவிடுவார்கள். நீங்கள் விரும்பியதை உண்ண விடமாட்டார்கள். அவர்கள் பட்டியல் கொடுத்து இதனை தான் உண்ண வேண்டும் என்பார்கள்.

வயிறு வெறுமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். உடலுக்கு தேவையான சக்தி பிரபஞ்ச சக்தி வழியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். நான் பயின்ற பனிரெண்டு வருட காலங்கள் உடல் மெலிந்து தான் காணப்பட்டேன். உடல் தெரியகூடாது ஆத்மா தான் தெரியவேண்டும்.

ஆன்மீகப்பயிற்சி நீங்கள் எடுத்தாலும் சரி இல்லறத்தில் இருந்தாலும் சரி முடிந்தளவு உணவு முறையில் பாதுகாப்பாக இருங்கள். உடலுக்கும் நல்லது உங்களின் வாழ்விற்க்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு