Followers

Wednesday, September 30, 2015

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          ஒரு மனிதன் பிறந்த நாளில் இருந்து வாழ்நாள் முழுவதும் வளர்ச்சி என்ற பாதையை நோக்கி தான் செல்லவேண்டும். மெதுவாக வளர்ச்சி அடைந்தாலும் உயர்வை நோக்கி தான் செல்லவேண்டும். உயர்வு இல்லாமல் கீழே சென்றால் அப்பொழுது அவர்களின் வாழ்க்கை மிகுந்த துயரத்திற்க்கு செல்லும்.

மேல்நாேக்கி சென்றுக்கொண்டிருந்த வாழ்வு கொஞ்சம் கீழ்நோக்கி செல்லுகின்றது மறுபடியும் மேலே வந்துவிடுகிறது என்றால் கவலை இல்லை. அது நல்லபடியாக தான் சென்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். கீழே சென்ற வாழ்வு மேல்நிலையை அடையவே இல்லை என்றால் தான் பிரச்சினை.

நமக்கு கொடுத்த வாழ்வு சரியாக அமைந்திருக்கிறது என்றால் நம்மை விட்டு போகவில்லை என்றால் நாம் செய்த பாக்கியம் என்று சொல்லுகின்றோம். பாக்கிய வீடு மிக சரியாக வேலை செய்தால் நமக்கு கிடைத்தது எதுவும் விரைய வீட்டுக்கு கொடுக்காமல் பாதுகாக்கிறது என்று அர்த்தம்.

பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்ய வைத்துவிட்டாலே போதும் நமக்கு கிடைப்பது அனைத்தும் நம்மிடம் இருக்கும். பாக்கியஸ்தானம் வேலை செய்யவில்லை என்றால் நமக்கு கிடைத்தது எதுவும் நம்மிடம் இருக்காது.

கீழே சென்றவர்கள் அனைவரும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கை நழுவி சென்றுவிடும். அப்படி இருப்பவர்கள் விழித்துக்கொண்டு பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய பரிகாரத்தை செய்துவிடவேண்டும். பரிகாரம் செய்துவிட்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு வாய்ப்பு கைகூடும்.

மதியம் கோயம்புத்தூர் பயணம். நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.

புரட்டாசி மாதம்  அம்மன் பூஜை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 29, 2015

குலதெய்வம்


ணக்கம்!
          குலதெய்வத்தைப்பற்றி ஒரு நண்பர் கேள்வி கேட்டார். குலதெய்வம் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று அதனைப்பற்றி கேட்டார்.

குலதெய்வம் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் நீங்கள் சோதிடர்களிடம் அல்லது பிரசன்னம் பார்ப்பவர்களிடம் சென்று குலதெய்வத்தை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கேட்டால் அவர்களுக்கு தெரிந்த தெய்வத்தை சொல்லுவார்கள். அனைவரும் குத்து மதிப்பாக சொல்லுவார்கள். 

உங்களின் குலதெய்வத்தைப்பற்றி உங்களின் குடும்பத்தில் உள்ள மூத்தோர்களிடம் மட்டும் கேட்டு தெரிந்துக்கொள்ளமுடியும். உங்களின் குடும்பத்தில் உள்ள பங்காளிகள் வழியாகவும் கேட்டுக்கொள்ளலாம்.

உங்களின் அப்பா வழி குலதெய்வம் தெரியவில்லை என்றால் உங்களின் அம்மா வழி குலதெய்வத்தை வணங்கலாம். அம்மா வழியில் உள்ள தெய்வத்தை வைத்து வழிபட்டு வரலாம். பச்சைப்பரப்புதலும் செய்து வழிப்பட்டு வரலாம்.

உங்களின் அப்பா வழி குலதெய்வமும் அம்மா வழி குலதெய்வமும் ஏதாவது தொடர்பு இருப்பது போல் இருக்கும். நமது குலதெய்வத்தின் கோவிலை ஆராய்ந்து பார்த்தாலே அந்த தெய்வமும் இருக்கும். அப்பா வழியின் தெய்வத்தை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்ற பட்சத்தில் அம்மா வழி குலதெய்வத்தை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தொழில் வெற்றி


ணக்கம்!
          நேற்று கூட ஒரு நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்பொழுது சொன்னார் நன்றாக சென்றுக்கொண்டு இருந்த தொழில் சமீபமாக சரிவை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கின்றது. ஒரு சில நாட்களில் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னார்.

ஒரு வேலைக்கு சென்று மாத சம்பளம் பெறுவது எளிது ஆனால் ஒரு தொழில் செய்து அதன் வழியாக வாழ்க்கையை நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கும். 

எல்லாேரும் தொழில் செய்கின்றார்கள் என்று நாமும் அதில் இறங்கி நமது கையிருப்பு பணத்தை இழப்பதும் உண்டு. ஒரு தொழில் செய்வது என்றால் மிகவும் எச்சரிக்கையோடு எந்த நேரமும் செயல்படவேண்டும். வேலைக்கு போகின்றவர்கள் கடவுளை கும்பிடாமல் இருந்தால் கூட தொழில் செய்கின்றவர்கள் தினமும் தெய்வத்தை கும்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

இன்றைக்கு முஸ்லீம் மக்கள் தொழிலில் வெற்றிபெறுவதற்க்கு அவர்களின் தொழுகை தான் காரணமாக இருக்கும். நம்ம ஆட்கள் கோவிலுக்கு செல்வதே ரொம்ப கடினம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்தால் கூட தொழிலில் வெற்றி பெற்றுவிடமுடியும்.

நமது அம்மனை வைத்து தொழில் செய்பவர்களுக்கு பூஜை செய்து கொடுக்கிறேன். குறுந்தொழிலாக இருந்தாலும் பெரிய தொழிலாக இருந்தாலும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இதில் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 28, 2015

தடையை உடைக்கும் பாக்கியம்


வணக்கம்!
          மனிதனுக்கு ஏற்படும் தடைகளைப்பற்றி பாக்கியஸ்தானத்தில் பார்த்துக்கொண்டு வருகிறோம். நாம் எதனைப்பார்த்தாலும் அது சம்பந்தமான நிகழ்வுகள் நடப்பது இயற்கையான ஒன்றாக இருக்கும். 

நாளை முதல் மஹாளயபட்ச நாட்கள் ஆரம்பம் என்று காலண்டரில் போட்டு இருப்பார்கள். இன்றே ஆரம்பித்துவிட்டது. பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்வதற்க்கு இந்த நாட்கள் ஒரு ஏற்ற நாட்களாக இருக்கும். நாம் செய்யும் பரிகாரம் நமக்கு புண்ணியமாக அமையவதற்க்கு இந்த நாட்கள் ஒரு சரியான நாட்களாகவே இருக்கும்.

உங்களுக்கு காரிய தடை அதிகம் ஏற்பட்டால் இந்த நேரத்தில் அதற்கு என்று பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள். திதி கொடுப்பது என்ற வழிமுறை இருக்கும். திதி மட்டும் இல்லாமல் பல வழிகளை நெட்டில் தேடினால் என்ன என்ன செய்யலாம் என்று எழுதியிருப்பார்கள். அதனை பார்த்து செய்துக்கொள்ளுங்கள்.

உங்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. கடுமையான பித்ருதோஷம் இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்யவேண்டும். உங்களின் ஜாதகத்தை என்னிடம் காண்பித்து செய்துக்கொள்ளலாம்.

வருகின்ற அமாவாசை வரை புண்ணியம் சேர்க்கும் நாட்களாகவே உங்களுக்கு அமையும். நல்ல நாட்களை தவறவிடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரிவல அனுபவம்


வணக்கம்!
          திருவண்ணாமலை கிரிவலம் நேற்று காலை நான்கு மணிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். திருவண்ணாமலையில் தங்கும் அறை கிடைப்பதற்க்கு சிரமமாக இருந்தது. நேற்று காலை பத்து மணிக்கு எல்லாம் தங்கும் அறையை விட்டு செல்லவேண்டும் என்ற நிபந்தனையோடு அறையை புக் செய்த காரணத்தால் உடனே கிரிவலம் செல்லும் நேரத்தையும் மாற்ற வேண்டியதாகிவிட்டது.

பல நண்பர்கள் நேற்று தான் என்னை தொடர்புக்கொண்டார்கள். பல நண்பர்கள் திருவண்ணாமலை வந்தவுடன் தான் போன் செய்கிறார்கள். அவர்களை சந்தித்து அவர்களோடு கிரிவலம் செல்லவேண்டும் என்ற ஆசை நடக்கவில்லை. ஒரு நண்பரோடு மட்டும் தான் கிரிவலம் சென்றேன்.

குறைந்தது ஒரு வருடகாலத்திற்க்கு பிறகு தற்பொழுது தான் கிரிவலம் சென்றேன். அடுத்த முறை பெளர்ணமி இல்லாத நேரத்தில் கிரிவலம் சென்று கோவிலையும் தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

கிரிவலம் சென்ற புகைப்படத்தை முகநூலில் நேற்று வெளியிட்டேன். நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இனி முகநூலில் நான் செல்லும் கோவில்களைப்பற்றி புகைப்படமும் அவ்வப்பொழுது வரும் உடனே நீங்கள் அதனைப்பார்த்து தரிசனமும் செய்துக்கொள்ளலாம்.

அடுத்த முறை திருவண்ணாமலை செல்லும் தேதியை அறிவித்தவுடன் உடனே என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் வருவதாக இருந்தால் தெரிவித்துவிடுங்கள்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். இந்த வாரத்தில்  ஒரு நாளில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 26, 2015

பயணம்


ணக்கம்!
          ஒரு நண்பர் என்னிடம் எனக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்று கேட்டுருந்தார். ஒரு சில நாட்கள் சென்றபிறகு அவரிடம் குருவாயூர் கோவில் சென்று வரவேண்டும் வாருங்கள் செல்லலாம் என்று சொல்லிருந்தேன். அவர் நீண்ட தூரம் இருக்கின்றது என்னால் வரமுடியாது சார் என்று சொல்லிவிட்டார்.

வெளிநாட்டிற்க்கு செல்லலாம் குருவாயூர் நீண்டதூரம் என்று சொல்லுகின்றார். இது அவர் சொல்லவில்லை அவரின் கர்மா அப்படி சொல்லவைக்கின்றது. நாம் என்ன செய்யமுடியும் என்று விட்டுவிட்டேன்.

ஒருவருக்கு ஒரு வேலை நடக்கவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்வது உண்டு. இந்த பழக்கத்தை அனைத்து ஆன்மீகவாதிகளும் செய்வார்கள். இதில் என்ன இருக்கின்றது என்று பார்த்தால் அதில் ஒரு உண்மை இருக்கும்.

பாதிபேர் இவனுக்கு வேலை இல்லை. நம் காசில் ஊரை சுத்துகிறான் என்றும் நினைப்பது உண்டு. இதில் இருக்கும் சூட்சமத்தை எல்லாம் அறிந்து இருந்தால் எதற்க்கு நம்மை தேடி வரபோகின்றார்கள்.

பாக்கியஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய வீடு பயணத்தையும் காண்பிக்கும். ஒரு நீண்ட தூர பயணத்தை செய்யவித்து அதன் வழியாக அவர்களுக்கு ஏற்படும் தடையை நிவர்த்தி செய்து அவர்கள் கேட்டதை நிறைவேற்ற வைப்பதற்க்கு இப்படி பயண ஏற்பாட்டை செய்வோம்.

ஒவ்வொரு சோதிடர்களும் அவர்களின் வாடிக்கையாளர்க்கு சொல்லுவது உங்களுக்கு காரியம் நடைபெறவேண்டும் என்றால் பல ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் என்று சொல்லுவார்கள். அதில் உள்ள உண்மை இது தான். பல ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் நீங்கள் நினைப்பது நடக்கும்.

திருவண்ணாமலை செல்லுகிறேன். திரும்பி வந்தபிறகு உங்களுக்கு பதிவை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 25, 2015

கிரிவலம்


ணக்கம்!
          நீண்ட நாள்களாக திருவண்ணாமலை கிரிவலம் சென்று வரவேண்டும் என்று ஒரு எண்ணம் உருவானது. அதற்கு வாய்ப்பை உருவாகவில்லை. தற்சமயம் அதற்கான வாய்ப்பு நெருங்கி வருகின்றது என்று உள்மனம் உறுதியாக சொல்லுகின்றது.

நான் பலதடவை திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்து இருக்கிறேன். ஒவ்வொரு தடவை செல்லும்பொழுதும் எனக்குள் ஒரு நல்ல மாற்றம் நடப்பது உறுதியாக தெரியும். அதே நேரத்தில் பல நல்ல ஆசிகளையும் அந்த தலத்தில் இருந்து எனக்கு கிடைத்தது.

பழைய பதிவில் பல நல்ல தகவல்கள் திருவண்ணாமலையை பற்றி சொல்லிருக்கிறேன். ஜாதககதம்பத்தில் இருந்து பல நண்பர்களை அந்த தலத்தில் வைத்து சந்தித்து இருக்கிறேன்.

எல்லா பெளர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது நல்லது. இன்றைய அவசர உலகத்தில் அது சாத்தியப்படும் என்பது கடினம் இருந்தாலும் வருடத்திற்க்கு ஒரு முறையாவது சென்று வருவது நல்லது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 24, 2015

கலவை


ணக்கம்!
          நேற்று எழுதிய சித்தர்கள் பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் பாராட்டி எழுதினார்கள். ஒரு சிலர் சித்தர்களின் வழியை மேலும் நிறைய தகவலை தாருங்கள் என்று கேட்டார்கள்.

எந்த ஒரு வழியையும் நான் தவறு என்று சொல்லவில்லை. அனைத்து வழியும் நல்லவழிதான் ஆனால் காலத்திற்க்கு தகுந்த மாதிரி அதனை நாம் பயன்படுத்த வேண்டும். காலத்திற்க்கு தகுந்த மாதிரி மாற்றி பயன்படுத்தமுடியவில்லை என்றால் நமக்கு அதுவே பிரச்சினை தருவதாக அமைந்துவிடும்.

மனிதனுக்கு நாடி பார்ப்பது எல்லாம் சித்தர்களின் வழிகாட்டுதல் படி தான் நான் கற்றேன். சித்தர்கள் சொன்னதில் பல நல்லவை இருக்கின்றது அதனை நாம் சரியான முறையில் கற்கவேண்டும். சித்தர்கள் சொன்ன பல நல்ல சிந்தனைகளை அவ்வப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்.


முகநூல் பக்கம் நீங்கள் வருவதில்லை என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பிருந்தார். நான் பிளாக் மட்டும் தான் எழுதுவது உண்டு. முகநூலில் பக்கம் வருவது கிடையாது. பிளாக்கை அதில் இணைக்க மட்டும் தான் அந்த பக்கம் வருகிறேன்.


பாக்கிஸ்தானம்
               தந்தை நல்லது செய்தால் இந்த ஸ்தானம் நமக்கு நல்லது கொடுக்கும். தந்தை சரியில்லை அதாவது ஊரில் உள்ள பிரச்சினை எல்லாவற்றையும் செய்து வைத்திருந்தால் உங்களுக்கு பாக்கியஸ்தானம் தடையை தான் ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு தந்தை சரியில்லாமல் இருப்பார்கள். அதாவது சம்பாதிக்காமல் அவர் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்பார் ஆனால் அவரின் பையன் நன்றாக வாழுவான். எப்படி என்றால் சம்பாதிக்காமல் இருந்தால் கூட அடுத்தவர்களுக்கு பிரச்சினை கொடுக்காமல் இருந்திருப்பார் அதனால் அவரின் பையன் நன்றாக வாழ்வார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 23, 2015

சித்தர்கள்


ணக்கம்!
          சித்தர்களைப்பற்றி அதிகம் எழுதுங்கள் என்று ஒரு நண்பர் பரிந்துரை செய்தார். சித்தர்களை பற்றி நான் எழுதியிருக்கிறேன். அதிகம் எழுதாமல் இருப்பதற்க்கு பல பிளாக்கில் சித்தர்களை பற்றி பிறர் எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். நாம் தனியாக சித்தர்களைப்பற்றி சொல்லவேண்டாம் இருக்கின்றேன்.

சித்தர்களை பற்றி நானும் பெருமையாக கருதுகிறேன். தமிழர்களுக்கு சித்தர்களின் மேல் உள்ள ஈடுபாடு அதிகம் என்பதும் எனக்கு நன்றாக புரிகிறது. சித்தர்கள் சொன்னது அனைத்தும் உண்மை என்ற மாற்றுக்கருத்து எனக்கு கிடையாது. 

சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள மனிதர்களை கணக்கில் கொண்டு அவர்கள் புத்தகங்களை எழுதினார்கள். இன்றைய மனிதன் அதுபோலவா இருக்கின்றான் என்பது சந்தேகமே. நமது உணவு முறையே மாறிவிட்டது. மனிதனின் குணம் அனைத்தும் மாறிவிட்டது. அவர்கள் சொன்னதற்க்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் வருகின்றது அதனால் நான் சித்தர்கள் சொன்னதை சொல்வதில்லை.

உதாரணத்திற்க்கு ஒன்றை பார்க்கலாம். சித்தர்கள் சொன்னது விந்து விட்டவன் நொந்து சாவான். சித்தர்களின் தாரகமந்திரமாகவே இது இருந்து இருக்கின்றது. பழைய காலத்தில் உள்ள மனிதனின் உடல் அதிக சக்தி வாய்ந்தது. அவர்கள் நாட்கள் முழுவதும் வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள். நாள் முழுவதும் வேலை செய்த உடல் காமத்தில் ஈடுபட்டால் இருக்கின்ற சக்தி எல்லாம் தீர்ந்து அவன் செத்துவிடுவான் என்று கருதி இந்த பழமொழியை உருவாக்கியுள்ளார்கள்.

இன்றைய மனிதன் காலையில் எழுந்து அலுவலகம் செல்ல வீட்டு படியை காலை எடுத்து வைத்தால் கேப் வந்து அழைத்து செல்லுகின்றது. அலுவலக வாசற்படியை இறங்கினால் அங்கிருந்து செல்ல லிப்டை உபயோகப்படுத்துகிறார்கள். நாள் முழுவதும் கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு அரைமணி நேரத்திற்க்கு ஒரு முறை விதவிதமான உணவுகளையும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்க்கு வருகின்றார்கள். நாள் முழுவதும் சக்தி உடலில் தேங்கி உடலை கெடுகிறது. இந்த சக்தியை இவர்கள் வெளியேற்றுவது காமத்தில் மட்டுமே. அதனை தேக்கி வைத்தால் அவன் பைத்தியம் ஆகிவிடுவான். 

விந்து விட்டுவான் நொந்து சாவான் என்ற சித்தர்களின் வாக்கை மாற்றி விந்து விடவில்லை என்றால் பையித்தியம் பிடித்து சாவான் என்று தான் இந்த காலத்தில் எழுதவேண்டும்.இப்படி பல கருத்துக்களை இன்றைய காலத்திற்க்கு தகுந்தமாதிரி மாற்றவேண்டும். 

சித்தர்களின் வழியை பின்பற்றுகிறேன் என்று உடலில் சக்தியை தேக்கி வைக்காதீர்கள். சித்தர்களை புரிந்துக்கொண்டு இந்த காலத்திற்க்கு தகுந்த மாதிரி வாழுங்கள்.

நண்பர்களே முகநூலில் அதிகம் ஷேர் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வீடு


ணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் புதிய வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம். வீடு வாங்கும்பொழுதும் இருந்தாலும் கட்டும்பொழுதும் அதனை நன்றாக பார்த்து செய்யவேண்டும். 

வாஸ்துவை பற்றி பிறந்த குழந்தைக்கு கூட தெரியும் அந்தளவுக்கு வாஸ்து பரப்பிவிட்டுவிட்டார்கள். உங்களுக்கு முடிந்தவரை வாஸ்து பார்த்து செய்துக்கொள்ளுங்கள். உங்களின் வீடு சக்தி மிகுந்த வீடாக மாற்ற பல வழிகள் இருக்கின்றன அதனை தான் நான் பார்த்து செய்யவேண்டும் என்று சொன்னேன்.

உங்களின் வீட்டிற்க்குள் சென்றால் நிம்மதியாக இருக்கவேண்டும். உங்களின் வீடு உங்களுக்கு சக்தியை தரும் ஒரு இடமாக இருக்கவேண்டும்.

கோவில்களுக்கு நீங்கள் செல்லும்பொழுது கோவிலின் அமைப்பை நன்றாக கவனித்து பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும். கட்டக்கலை எப்படி அமைத்தால் அது நமக்கு சக்தியை தரும் என்பது நாம் கோவிலை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும்.

ஏதோ ஒரு வீடு இருந்தால் போதும் என்று நினைக்காமல் அந்த வீட்டை எப்படி நல்ல சக்தி மிகுந்த வீடாக மாற்றமுடியுமாே அந்தளவுக்கு மாற்றிக்கொண்டு நன்றாக வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 22, 2015

பாக்கியஸ்தானம் பரிகாரம்


வணக்கம்!
         பல நண்பர்களுக்கு இது அனுபவமாக இருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அனுபவம் ஏற்படலாம். வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும். அந்த நல்ல வாய்ப்பை நமது மனது செய்த தந்திரத்தால் அதனை இழந்து இருப்போம். உனக்கு நீ தான் எஜமான் என்று உங்களின் மனம் சொல்லும். அப்படி சொல்லும் மனம் எல்லாம் இடத்திலும் சரியான முடிவை எடுக்காது என்பது நமக்கு தெரியாது. அது சொல்லுவது போல் நாம் செய்துக்கொண்டு நமது வாய்ப்பை தவறவிட்டு இருப்போம்.

ஒரு மனிதன் ஒரு வாய்ப்பை நமக்கு கொடுத்திருப்பான் அந்த வாய்ப்பு ஏதோ ஒரு காரணத்தால் அதனை இழந்து இருப்போம். அவர் வழியாக நமது வாழ்க்கையே மாறி போயிருக்கும் ஆனால் அதனை நாம் தவிர்த்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்போம்.

ஒவ்வொருவருக்கும் இப்படி நடக்கும் அதற்கு காரணம் யாரும் இல்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பை உருவாக்கியது ஐந்தாம் வீடு என்ற பூர்வபுண்ணிய ஸ்தானம் அதனை கிடைக்கவிடாமல் செய்தது ஒன்பதாவது வீடு என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானம்.

ஐந்தாவது வீடும் ஒன்பதாவது வீடும் இரண்டும் சரியாக வேலை செய்யும்பொழுது மட்டுமே ஒருவன் வாய்ப்பை பெற்று நல்ல நிலைக்கு செல்வான். 

கிரகங்கள் பிரச்சினை செய்தாலும் மனிதனால் ஒரு வேலை மட்டும் செய்யமுடியும் அதாவது அனைத்தையும் பொறுமையாக கையாளவது இதற்கு சரியான வழியாக இருக்கும். பொறுமையாக செயல்பட்டால் கண்டிப்பாக வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பொதுவானவை


ணக்கம்!
          நேற்று காலையில் தான் திருப்பூரில் இருந்து புறப்பட்டு வந்தேன். வீடு வந்து சேருவதற்க்கு இரவு ஆகிவிட்டது. பயண களைப்பால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. 

என்னை கூப்பிட்ட பாதி நண்பர்களை சந்திக்கமுடியவில்லை. நேரமின்மை தான் அதற்கு காரணம் விரைவில் அடுத்த சந்திப்பிற்க்கான அறிவிப்பை அறிவிக்கிறேன். ஒவ்வொருவரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவேண்டும் என்று எண்ணம் இருக்கின்றது.

படிப்பு சம்பந்தமாக ஒரு சில நண்பர்களின் குழந்தைகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன். படிப்பு சொல்லிக்கொடுக்க பள்ளிகூடம் கட்டமுடியவில்லை என்றாலும் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தான் ஆன்மீகவழியில் உதவி செய்துக்கொண்டு இருக்கின்றேன். இது முற்றிலும் இலவச சேவை.

முகநூலில் ஜாதககதம்பத்தை லைக் செய்ய சொல்லிருந்தேன். பல நண்பர்கள் அதனை செய்கின்றார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொடர்ந்து செய்யுங்கள். இதுவரை செய்யாத நண்பர்களுக்கும் இதனை செய்யுங்கள்.


ஒருவருக்கு அஷ்டமசனி நடைபெற்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு பரிகாரம் செய்வது கிடையாது. அதற்கு காரணம் அஷ்டமசனி காலத்தில் ஒருவருக்கு பரிகாரம் அந்தளவுக்கு வேலை செய்வதில்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வாருங்கள் என்று மட்டும் அறிவுறுத்தபடுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 19, 2015

பாக்கியஸ்தானமும் களத்திரஸ்தானமும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வந்தோம். ஏழாவது வீடு நன்றாக இருந்து ஒரு நல்ல மனைவி அமைந்தாலும் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும்பட்சத்தில் தான் அந்த மனைவி நீண்ட காலம் வாழ்வார்.

ஒருவருக்கு ஏழாவது வீடு நன்றாக இருந்தது. ஏழாவது வீட்டிற்க்கு எந்த வித தீயகிரகங்களின் பார்வை இல்லாமல் நன்றாக இருந்தது ஆனால் அவரின் ஒன்பதாவது வீட்டிற்க்கு செவ்வாய் கிரகத்தின் பார்வை இருந்தது. 

அவருக்கு திருமணம் நடைபெற்று நல்லபடியாக வாழ்க்கை அமைந்தது. செவ்வாய் கிரகத்தின் தசா ஆரம்பித்த நாட்களில் இருந்து அவரரின் மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கொஞ்ச நாளில் அவரின் மனைவி இறந்துவிட்டாள். 

திருமணம் முடிந்து மூன்று வருடங்களுக்குள் அவரின் மனைவி இறந்தார். அவருக்கு கொடுத்த பாக்கியம் அவ்வளவு தான். ஒருவர் திருமணம் நடைபெற்று அவரின மனைவி குறுகிய காலத்தில் இறந்தால் மிகுந்த துயரத்திற்க்கு ஆளாக நேரிட்டது. நாம் என்ன கிடைத்தாலும் கிடைக்கும் வாழ்க்கை நீண்ட நாளாக அது அமையவேண்டும். அதற்கு பாக்கியஸ்தானம் நன்றாக அமையவேண்டும்.

ஒரு சிலருக்கு நல்ல மனைவி அமையமாட்டாள் ஆனால் அவரின் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும். அப்படியே சண்டை சச்சரவு இருந்துக்கொண்டு இருந்தாலும் வாழ்க்கை அப்படியே ஓடிக்கொண்டிருக்கும். அதற்கும் பாக்கியஸ்தானம் தான் முக்கியம்.

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். நாளை உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 18, 2015

அன்பான வேண்டுகோள்


ணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் என்னுடைய முகநூலில் இணைகின்றீர்கள். அப்படி இணையும் நண்பர்கள் தங்களுடைய முகநூல் பக்கம் செல்லும்பொழுது நமது பதிவுகளை லைக் செய்யுங்கள். 

நீங்கள் லைக் செய்தால் உங்களின் நண்பர்களுக்கும் நமது பதிவைப்பற்றி தெரியவரும். அப்படி தெரியவரும்பொழுது ஜாதககதம்பத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை அவர்கள் பின்பற்றினால் அவர்களின் குடும்பத்திற்க்கும் நல்வாழ்க்கை அமையும்.

நமக்கு தெரிந்த ஆன்மீக கருத்துக்களை வெளியில் சொல்லும்பொழுது நம்மால் அடுத்தவர்களுக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தமுடியும். ஜாதககதம்பத்தில் சொல்லப்படும் கருத்துக்களும் ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு முன்னேற்றப்பாதையை கொடுக்கும். அது உங்களால் நடைபெறும்பொழுது உங்களுக்கும் ஒரு நல்ல செயல் செய்த புண்ணியம் கிடைக்கும். 

20.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



புரட்டாசி சனிக்கிழமை


வணக்கம்!
          நாளை முதல் புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஆரம்பமாகிறது. பெருமாளுக்கு உகந்த விரதமாக இது இருக்கும். பெரும்பாலான கிராமங்களிலும் கூட இந்த விரதம் இருப்பார்கள். பெருமாள் என்றாலே சுத்தமாக இருந்து விரதத்தை அனுசரிப்பார்கள்.

பெருமாளுக்கு விரதம் இருந்து நல்ல முறையில் வாழ்க்கை அமைந்தவர்கள் உண்டு. அதே நேரத்தில் இந்த விரதத்தில் சுத்தம் இல்லை என்றால் பெருமாள் அதிக சோதனையை தருவார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

பெருமாளோடு அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் இந்த மாதத்தில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருப்பவர்கள் ஒரு முறை திருப்பதி அல்லது அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வரவேண்டும்.

நான் விரதம் இருப்பது கிடையாது ஆனால் புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவேன். நீங்களும் விரதம் இருந்தால் இருங்கள் அப்படி இல்லை என்றால் சனிக்கிழமை அன்று ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 17, 2015

மஹாலட்சுமி விரதம்


வணக்கம்!
          நாளை மஹாலட்சுமி விரதம். மஹாலட்சுமி விரதம் இருந்தால் நல்ல செல்வவளம் கிடைக்கும். மஹாலட்சுமி விரதம் வருடந்தோறும் இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வரலாம். புதிதாக விரதம் இருப்பவர்களும் இந்த விரதத்தை தொடங்கலாம்.

நாளை மஹாலட்சுமி பூஜை வீட்டில் செய்ய உகந்த நாளாகும். இந்த பூஜை செய்ய தெரியாதவர்கள் நெட்டில் தேடிப்பார்த்தால் இந்த பூஜை எப்படி செய்வது என்பது உங்களுக்கு கிடைக்கும். அதனை வைத்துக்கொண்டு பூஜையை செய்துக்கொள்ளுங்கள். 

உங்களின் வீடு சுத்தமா வைத்திருந்தாலே மஹாலட்சுமி உங்களின் வீட்டில் குடிக்கொள்வாள். ஒவ்வொரு பணக்காரர்களின் வீடுகளுக்கும் சென்று பார்த்தால் அவர்களின் வீடு அவ்வளவு சுத்தமாக இருக்கும். நல்ல வாசனையோடு வீடு அமைந்திருக்கும். இப்படிப்பட்ட வீடுகளில் மஹாலட்சுமி வாசம் இருக்கும்.

உங்களின் மனையியும் நல்ல சுத்தமாக இருந்தாள் அதாவது மங்கலகரமாக இருந்தால் உங்களின் வீடுகளுக்கு தனியாக மஹாலட்சுமி தேவையில்லை. அந்த பெண் வழியாக உங்களுக்கு மஹாலட்சுமியின் அருள் கிடைக்கும். 

நாளை அனைவரும் இந்த விரதத்தை கடைபிடியுங்கள். விரதம் செய்யமுடியாதவர்கள் மஹாலட்சுமிக்கு பூஜையாவது செய்யுங்கள். எதுவும் செய்யமுடியாதவர்கள் அருகில் இருக்கும் லட்சுமி கோவிலுக்கு சென்று வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!
          அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு




Wednesday, September 16, 2015

விநாயகர் சதுர்த்தி


வணக்கம்!
          விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை நமது அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.விநாயகர் சதுர்த்தியை பற்றி எழுங்கள் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பிருந்தார். 

இன்றைக்கு நடக்கும் விழாக்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்ம ஊரில் இல்லை. நமது வசதி வாய்ப்பு மற்றும் இன்று வளர்ந்திருக்கும் தகவல் தொடர்புவசதிகளால் இந்த விழாக்கள் எல்லாம் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி நன்றாக கொண்டாடுங்கள் ஆனால் பிறர்க்கு தொந்தரவு கொடுக்காதவாறு கொண்டாடுங்கள்.ஒவ்வொரு சிறிய கிராமத்திலும் குறைந்தது மூன்று பிள்ளையார்கள் கூட வைத்திருக்கிறார்கள். ஐம்பது வீட்டிற்க்கு மூன்று பிள்ளையார்கள். நமது மக்களுக்கு அவ்வளவு பக்தி. 

விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் விநாயகரை வணங்கிவிட்டு அத்தோடு விட்டுவிடகூடாது. தொடர்ச்சியாக விநாயகரை வணங்கி வாருங்கள். நல்ல நிலையை அடையலாம். குறிப்பாக செல்வவளத்தில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 15, 2015

நிலம்


வணக்கம்!
         நிலத்தைப்பற்றி ஏற்கனவே நான் சொல்லிருக்கிறேன். மறுமுறையும் இந்த கருத்தை சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது நான் பார்க்கும் விசயத்தில் இருந்து பதிவை தருவேன்.

அண்ணன் தம்பி இருவர் ஒரு குடும்பத்தில் இருந்தால் அதில் ஒருவர் ஒருவரை ஏமாற்றி நிலத்தை புடுங்குவது பல இடத்திலும் நடக்கிறது. இது அடிக்கடி எனது கவனத்திற்க்கு வரும்பொழுது அதனைப்பற்றி பதிவில் சொல்லுகிறேன்.

உங்களுக்கு உள்ள நிலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பிறர்க்கு தேவையான நிலத்தை கொடுத்துவிடுங்கள். தேவையில்லாமல் ஒருவரை நிலம் வழியாக ஏமாற்றும்பொழுது உங்களின் சந்ததினர்க்கு மிகப்பெரிய பாவத்தை சேர்த்து வைத்துவிடுகிறீர்கள்.

குறிப்பாக கிராமபுறங்களில் இது அதிகம் நடக்கிறது. உங்களுக்கு தேவையான சொத்து கண்டிப்பாக உங்களால் சேர்க்க முடியும். உங்களின் உழைப்பால் சொத்துக்கள் சேர்க்கும்பொழுது நீங்களும் உங்களின் வாரிசும் நன்றாக வாழலாம். 

நமது திறமையை வைத்து பிறரின் நிலத்தை பிடிங்கினால் செவ்வாய்கிரகம் உங்களின் உடலில் இருந்து ஏதாவது ஒரு பாகத்தை பிடிங்கி எடுக்கவைக்கும். உங்களின் குடும்பம் சிதைந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பணம் சேருவதற்க்கு என்ன செய்யவேண்டும்?


ணக்கம்!
          ஆன்மீகம் என்று வந்தாலே அதில் முதலில் இடம் பெறுவது அன்னதானமாக தான் இருக்கும். அன்னதானம் செய்வது ஒருவிதத்தில் நல்லது என்றாலும் நமக்கு செல்வவளம் வரவேண்டும் என்றால் அதற்கு என்று ஒரு சில விசயங்களை செய்யவேண்டும்.

பணம் நம்மிடம் சேரவேண்டும் என்றால் பணத்தை கொஞ்சம் வெளியில் விடவேண்டும். அதாவது பணத்தை பிறர்க்கு கொடுக்கவேண்டும். அப்படி கொடுத்தால் பணம் நம்மிடம் சேரும்.

பணம் வெளியில் கொடுத்தால் நம்மிடம் பணம் வரும். பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும். அதே நேரத்தில் இருக்கின்ற அனைத்து பணத்தையும் கொடுத்துவிடகூடாது. பத்து சதவீதத்திற்க்கு தர்மம் என்று கொடுத்தால் போதும்.

இது எல்லாம் ஒரு வித விதி. நாம் எந்தளவுக்கு கொடுக்கிறோமோ அந்தளவுக்கு பணம் நம்மிடம் வருவது உண்மை. இதனை நான் பல பேருக்கு சோதனை வழியாக செய்து பார்த்து சொல்லுகிறேன்.

பணம் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்றால் இதனை எல்லாம் செய்யவேண்டும். அதே நேரத்தில் நமது குழந்தைகள் நன்றாக வாழவேண்டும் என்றாலும் இந்த மாதிரியான பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 14, 2015

துணைவரின் குணம்


ணக்கம்!
          நமக்கு வரும் மனைவி அதாவது துணைவரைப்பற்றி அறிய ஏழாவது வீட்டை பார்ப்பார்கள். அந்த துணைவர் எப்படிப்பட்ட குணத்தோடு வருவார் என்பதை பாக்கியஸ்தானத்தை கொண்டு தான் ஒரு சில நல்ல விசயத்தை அறியமுடியும்.

அவன் பாக்கியம் செய்து இருக்கிறான் நல்ல குணத்தோடு அவனின் மனைவி அமைந்திருக்கிறாள் என்று பேச்சு வாக்கில் சொல்லுவார்கள். அதற்கு எல்லாம் ஒன்பதாவது வீடு தான் வழி செய்யவேண்டும்.

எப்படிப்பட்ட கணவனையும் நல்ல வழியில் முன்னேற்றம் அடைய செய்த பெண்களும் இருக்கின்றார்கள். கணவனின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட பாக்கியம் அமைந்திருக்கும்.

ஒரு சிலருக்கு திருமணம் ஆவதற்க்கு முன்பு நன்றாக இருப்பார்கள். திருமணம் முடிந்தபிறகு அவனின் வாழ்க்கை சீரழிந்துவிடும். அவனுக்கு கொடுத்த பாக்கியம் அவ்வளவு தான். ஒரு சிலருக்கு திருமணம் செய்த பிறகு கொஞ்ச நாளில் மனைவி இறந்துவிடுவாள். அது அவன் செய்த பாக்கியம்.

ஒன்பதாவது வீடு கெட்டால் ஒருவனுக்கு அமையும் வாழ்க்கை துணை அவனுக்கு எதிராக கிளம்பிவிடுவார். இவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இருப்பான். அவனின் வாழ்க்கை துணை ஒன்றை அவனுக்கு எதிராக செய்துக்கொண்டு இருப்பாள்.

பாக்கியம் நன்றாக அமைந்தால் அனைத்தும் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் நமது ஜாதகத்தை ஒரு கை பார்க்கவேண்டும். அதாவது சரிசெய்யவேண்டும். அதற்கும் பாக்கியம் இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள் தொடர்ச்சி. அம்மன் அலங்காரம் செய்தவர் திரு இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு





அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்களின் தொடர்ச்சி







அன்புடன்
ராஜேஷ்சுப்பு


அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு





Sunday, September 13, 2015

காயத்ரி மந்திரப்பயிற்சி


ணக்கம்!
          பதிவுக்கு வரும் நண்பர்கள் படிப்பதோடு இருந்துவிடாமல் இதில் சொல்லிய கருத்துக்களை எடுத்து அதனை பின்பற்றி வந்தால் ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை சொல்லிருக்கிறேன். அதனையும் நீங்கள் மறக்காமல் செய்துக்கொண்டு வாருங்கள். உங்களின் குலம் தழைக்கும்.

ஆன்மீகப்பயிற்சிக்கு என்று தனியாக ஒரு பிளாக் நடத்திக்கொண்டு வருகிறேன். கட்டண சம்பந்தப்பட்ட பிளாக்காக அது இருக்கின்றது. உங்களுக்கு ஆன்மீகப்பயிற்சி செய்யவேண்டும் என்று முடிவு எடுத்தால் பனிரெண்டாயிரம் பணத்தை செலுத்திவிட்டு அதில் இணைந்துக்கொள்ளுங்கள். பணம் இல்லை என்பவர்கள் காயத்ரி மந்திரப்பயிற்சியில் இணைந்து பயிற்சி செய்யலாம்.

வளர்பிறை வரப்போகின்றது காயத்ரி மந்திரப்பயிற்சி செய்பவர்கள் வளர்பிறையில் தொடங்கலாம். புதிதாக செய்யவிருப்பவர்கள் காயத்ரி மந்திரப்பயிற்சி எப்படி என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். 

இன்று அம்மன் பூஜை. மாலை நேரத்தில் அம்மன் பூஜை செய்யவிருப்பதால் மாலை நேரத்தில் அம்மனிடம் புதிய வேண்டுதலை வைக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 12, 2015

தர்ம சிந்தனை


வணக்கம்!
           பாக்கியஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய ஒன்பதாவது வீட்டை பற்றி பார்த்து வருகிறோம். ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய தர்மசிந்தனையும் இந்த வீட்டை வைத்து தான் கணிக்கப்படுகிறது.

தர்மத்தைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது கஷ்டத்தை கூட தர்மம் செய்து தான் வெற்றிபெற்றேன். கஷ்ட காலத்தில் கூட இருக்கின்ற காசை வைத்து தர்மம் செய்து இருக்கிறேன். 

திருநங்கைகளுக்கு முடிந்தளவு தர்மம் செய்து இருக்கிறேன். எனது கஷ்டத்தை போக்கியது திருநங்கைகள் என்று சொன்னால் அது தான் உண்மை.  அவர்களின் ஆசியை பெற்றதால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து மீள முடிந்தது.

நான் ஒரு சில முருகன் கோவிலுக்கு செல்வது உண்டு. அங்கு யாசகம் கேட்பவர்கள் உண்மையில் முருகனின் மீது பற்றுக்கொண்டு சந்நியாசியாக இருப்பவர்கள். அவர்களுக்கு என்று நிறைய தர்மம் செய்து இருக்கின்றேன்.

சேட்டுகளைப்பற்றி நான் சொல்லிருக்கிறேன். ஒரு ஆன்மீகவாதி என்று அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் முடிந்தளவுக்கு அவர்கள் உதவி செய்வார்கள். என்ன காரணம் என்றால் அவர்களுக்கு காரியம் நடைபெறவேண்டும் என்பதால் தடை இல்லாமல் நடக்க ஆன்மீகவாதிகளுக்கு உதவி செய்வார்கள். போலி ஆன்மீகவாதிகள் என்று தெரிந்து கூட அவர்கள் எதையும் பார்க்காமல் உதவி செய்வார்கள். 

ஆன்மீகவாதி என்ற அடையாளத்தில் இருந்துக்கொண்டு உதவி கேட்கிறான் என்று எதையும் பார்க்காமல் செய்வார்கள். அவர்களின் வெற்றிக்கு இது தான் முக்கியமாக இருக்கின்றன. நம் ஆட்கள் ஆன்மீகவாதியை அடித்து பிடிங்கிவிடுவான் அல்லது ஏமாற்றுவான்.

தர்மம் செய்யதாய என்பது தான் கணக்கு. யாருக்கு செய்தாய் என்பது கிடையாது. தர்ம சிந்தனை இருந்தால் ஒன்பதாவது வீடு உங்களுக்கு வழிவிட்டு நல்ல வாழ்க்கையை உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 11, 2015

பாக்கியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். பாக்கியஸ்தானம் என்பது கெடும்பொழுது தான் ஒருவன் அதிகமாக அலைக்கழிக்கபடுவான். அதனைப்பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

பித்ருதோஷம் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அதனை படித்து தான் பார்த்திருப்போம். அதனை அனுபவிக்கிறவன் அல்லது அனுபவித்துவிட்டு வந்தவனுக்கு தான் அதனைப்பற்றி உண்மையில் தெரியவரும்.

இளம்வயதில் இவர்கள் அலையாத இடம் இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் அந்த வேலையில் இருந்து இவர்களுக்கு ஒரு பைசா கூட ஆதாயம் என்பது இருக்காது. இவர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு அடுத்தவர்கள் சம்பாதித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

எனக்கு கூட இப்படிப்பட்ட தோஷம் இருந்தது நான் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு ஒரு ஆதாயமும் இருக்காது. என்னை வைத்து அவர்கள் முடிந்தளவுக்கு சம்பாதித்துவிடுவார்கள். பல பேர்களின் வாழ்விற்க்கு அடித்தளம் அமைத்தது என்னுடைய உழைப்பாக இருந்தது. அதில் இருந்து ஒரு பைசா நான் சம்பாதித்தது கிடையாது.

பல இடங்களில் நான் சும்மா சாப்பாட்டிற்க்கு வேலை செய்தேன் என்று தான் சொல்லவேண்டும். என்னுடைய பாக்கியஸ்தானம் அந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்பு இப்படி என்னை படுத்தி எடுத்தது.

ஒரு சில காலங்களுக்கு பிறகு தான் நமது கர்மா எல்லாம் தொலைந்து நல்ல நிலைக்கு வரமுடிந்தது. நாம் வேலை செய்து கொடுத்தது எல்லாம் பின்னால் நமக்கு புண்ணியமாக சேர்ந்தது.உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருந்தால் பிறர்க்கு ஏன் உழைக்கிறோம் எதற்கு உழைக்கிறோம் என்று தெரியாது ஆனால் பிற்காலத்தில் அது மிகப்பெரிய யோகமாக மாறிவிடுகிறது என்பது மட்டும் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 9, 2015

அம்மன் பூஜை


வணக்கம் !
          அம்மன் பூஜை வரும் 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
தூத்துகுடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
ஆம்பூரை சேர்ந்த திரு பிரசன்னகுமார் அவர்கள்
திரு சத்திய சீத்தாராமன் அவர்கள்.
திரு வீரேஷ் சந்தானம் அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்

வழக்கம் போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வையுங்கள். அம்மன் உங்களுக்கு நடத்திக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 8, 2015

கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும்


வணக்கம்!
          இன்று காலை திருச்சிக்கு அருகில் இருக்கும் வயலூர் முருகனை தரிசனம் செல்ல சென்றுருந்தேன். காலையில் தரிசனத்தை முடித்துவிட்டு தற்பொழுது தான் வந்தேன்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி இருக்கின்றது. குறைந்தது அரை மணி நேர பயணத்தில் கோவிலை அடைந்துவிடலாம். 

கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும் என்று இந்த திருகோவிலைப்பற்றி சொல்லுகிறார்கள். கோவிலைப்பற்றி பல சிறப்புகள் சொல்லுகிறார்கள். மிக பழமையான கோவில் தான் இது. இந்த ஊரை பார்ப்பதற்க்கும் மிகவும் நன்றாக உள்ளது.

மழைக்காலம் ஆரம்பித்தால் நிறைய கோவில்களை தரிசனம் செய்ய செல்வேன். எனக்கு வெயில் காலம் சரிப்பட்டு வராது என்பதால் மழை காலமாக பார்த்து கோவில் தரிசனம் செய்வது உண்டு. 

ஏனோ திடீர் என்று இந்த கோவிலைப்பற்றி எனது வாயாலே சொல்ல வைத்தது. இந்த கோவில் எங்கு இருக்கின்றது என்பதை பிறகு நெட்டில் தேடிப்பார்த்தேன். அதன் பிறகு தான் இந்த கோவிலுக்கு சென்றேன். கடந்த வாரம் வரை இப்படிப்பட்ட ஒரு கோவில் இருக்கின்றதா என்று கூட எனக்கு தெரியாது. இன்று சென்று வந்துவிட்டேன். 

திருச்சி பக்கம் செல்வதாக இருந்தால் அப்படியே இந்த கோவிலையையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். முருகனின் அருள் கிடைக்கபெறுவீர்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!

ஐயா

இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன். ஏனெனில் அனைவரும் விவசாயத்தை விட்டால் சோத்துக்கு எங்கே போவது?
அப்போ யார்தான் விவசாயம் செய்வது?
நீங்கள் சொன்ன நஷ்ட தொழில் என்பது உண்மைதான்.இருந்தாலும் விவசாயத்தை கைவிட சொல்வது சரியல்ல.
மாற்று வழி கூறவும்.

எம்.திருமால்

நண்பர் தன்னுடைய நிலையை சொல்லியுள்ளார். ஒவ்வொரு தொழில் செய்யும் தொழிலாளி அவர்களின் பையனை எப்படியும் அவர்கள் தொழிலில் அமருவது போல் செய்வார்கள் ஆனால் விவசாய தொழில் செய்யும் விவசாயி மட்டும் அவர்களின் பையனை விவசாய தொழிலில் ஈடுபட நினைப்பதில்லை. இதிலேயே நாம் அந்த தொழிலைப்பற்றி புரிந்துக்கொள்ளலாம்.

விவசாயம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை. கடன் வாங்கி அந்த தொழிலை செய்யவேண்டிய நிலை ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும். அப்பொழுது அவர்களுக்கு பெரும் தோல்வி வரும்பொழுது அதனை தாங்கமுடியாது அல்லவா. அதனால் அந்த நேரத்தில் மட்டும் கொஞ்சம் ஒதுங்கி இருங்கள் என்று சொன்னேன்.

ஒரு விவசாயிக்கு ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்து தான் அதனை சொன்னேன். மறுபடியும் சொல்லுகிறேன் உங்களுக்கு கெடுதல் வரும் நேரத்தில் அடுத்த வேலையை பார்க்கலாம்.

என்னுடைய நிலத்தை அப்படியே தரிசாக தான் போட்டுள்ளேன். எப்பொழுதாவது நல்ல நிலைமை விவசாயத்திற்க்கு ஏற்படும்பொழுது முதல் விவசாயியாக நானே அந்த தொழிலை செய்யவேண்டும் என்பதற்க்காக அந்த நிலத்தை அப்படியே விற்காமல் வைத்திருக்கிறேன். 

எனக்கு பெரிய கஷ்டம் வந்தபொழுது எல்லாம் அந்த நிலத்தை விற்காமல் கடன் வாங்கி தான் சமாளித்தேன். விவசாய புரட்சி ஏற்பட்டு நான் கஷ்டப்பட்டு விளைகிற அனைத்து பொருட்களுக்கும் நானே விலையை நிர்ணிக்கும் உரிமை எனக்கு வரும் என்று காத்துஇருக்கிறேன்.  அப்பொழுது அந்த நிலம் தேவைப்படும் என்று வைத்திருக்கிறேன்.


அம்மன் பூஜையை வரும் ஞாயிற்றுகிழமை வைக்கலாம் என்று இருக்கிறேன். பூஜைக்கு பங்களிப்பை அளிக்கும் நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 7, 2015

விவசாய தொழில்


வணக்கம்!
          தற்பொழுது தஞ்சாவூர் பகுதி எல்லாம் பயிர் நடவு செய்யும் நாட்களாக இருக்கின்றன. இந்தியாவில் முதுகெலும்பு என்று சொல்லும் விவசாய தொழில் தான் எனது குடும்ப தொழிலாகவும் இருந்து வந்தது. தற்பொழுது அதில் நான் அதிக அக்கறை காட்டுவதில்லை. விவசாய தொழிலை செய்யவில்லை.

விவசாய தொழிலை எனது தந்தை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட நஷ்டம் மிகப்பெரிய அளவு. அதனை செய்ய வேண்டாம் என்று நான் ஒதுங்கிவிட்டேன். நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை செய்யவேண்டும் என்று தந்தை சொன்னார். எனக்கு நன்றாக சோதிடம் தெரிந்த பிறகு அதில் ஈடுபட்டால் என்றும் அதில் முன்னேற்றம் அடையமுடியாது என்பது தெரிந்த பிறகு இனி மேல் அதில் ஈடுபடகூடாது என்று முடிவு செய்து நிறுத்திவிட்டோம். 

சோதிடத்தில் ராகு தசா மற்றும் அஷ்டமசனி ஏழரை சனி போன்ற கெடுதல் தரும் நேரத்தில் எந்த தொழில் செய்தாலும் விவசாயதொழில் மட்டும் செய்யவே செய்யகூடாது.  ஒரு வேலை உங்களுக்கு அடுத்த தொழில் ஒன்று இருந்தால் உங்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைப்பதற்க்கு விவசாயதொழிலை செய்யலாம்.

விவசாய தொழில் ஒரு நஷ்டதொழில் என்பது விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிக்கும் புரியும். உங்களுக்கு விவசாய தொழில் நன்றாக வந்துக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட சோதிடத்தில் கெடுதல் செய்யும் நிலையில் கிரகங்கள் இருக்கும்பொழுது விவசாயதொழில் செய்யவேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 6, 2015

பித்ருதோஷமும் வறுமையும்


ணக்கம்!
          இளம்வயதில் உள்ள நண்பர்களை சந்திக்கும்பொழுது ஒரு சிலர் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி புலம்புவார்கள். ஒரு சிலருக்கு கஷ்டங்களை சொல்லுவதற்க்கு கூட அவர்களுக்கு என்று அக்கறை காட்ட குடும்பத்திலும் சரி நண்பர்கள் வட்டத்திலும் சரி ஆட்கள் இல்லை.

இவர்களின் கஷ்டத்தை சொல்லுவதற்க்கு என்று என்னிடம் வந்து பல மணி நேரம் புலம்புவார்கள். நானும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைப்பது உண்டு.

இளம் வயதில் கஷ்டம் என்பது ஒரு கடுமையான தண்டனை தான். சொல்லபோனால் மிகப்பெரிய பாவமும் அது தான். அந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையின் பின் பகுதி மிகுந்த வசதி படைத்தவர்களாக இருப்பதற்க்கு சோதிடத்தில் வழி உண்டு.

இளம் வயதில் அதிக கஷ்டத்திற்க்கு உள்ளாவதற்க்கு சோதிடத்தில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பித்ரு தோஷம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். இளம் வயதில் கடுமையான வறுமையை தந்து பின் பகுதியில் அதிக செல்வாக்கை கொடுக்கும்.

இளம்வயதில் வறுமையை கொடுக்கும் நேரத்தில் நீங்கள் மதுபழக்கத்திற்க்கு மற்றும் தீயபழக்கத்திற்க்கு ஆளாக கூடும். அந்த இடத்தில் மட்டும் கவனம் தேவை. உங்களின் முழுசக்தியும் ஒருங்கிணைக்கும்பொழுது மட்டுமே பின்னாளில் வெற்றி பெறமுடியும். நினைத்து பார்க்க முடியாத அளவிற்க்கு வளர்ச்சி இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 4, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          இரண்டு நாட்களாக பதிவை தரமுடியவில்லை.  வெளியூரில் இருப்பதால் பதிவு எழுதுவதற்க்கு நேரம் இல்லை. இன்று முதல் தினமும் பார்த்துவிடலாம்.

அடுத்த வாரத்தின் இறுதிற்க்குள் அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தும் நண்பர்கள் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 1, 2015

முதல் தொடக்கம்


வணக்கம்!
          எத்தனையோ ஜென்மங்கள் கடந்து வந்து இருப்பீர்கள். இந்த ஜென்மங்களில் எல்லாம் நல்லதும் தீயதும் செய்து வந்திருப்பீரகள். நாம் செய்தவைக்கு பரிகாரமாய் இந்த ஜென்மத்தை எடுத்து இருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் நமக்கு ஏற்படும் தீயவைகளை எடுத்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்து அதோடு சேர்ந்து கடவுளின் நிலைக்கு செல்வதற்க்கு ஒரு நல்ல வாய்ப்பு நமது புதிய பதிவில் சொல்லப்பட்டு வருகிறது.

ஒன்றை நீங்கள் அடைவதற்க்கு நீண்ட காலம் தேவையில்லை குறைந்தது ஒரு மூன்று மாத காலம் நீங்கள் பயிற்சி செய்தால் போதும் அதனை நீங்கள் கண்டிப்பாக பெற்றுவிடமுடியும்.

உங்களுக்கு கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு இருக்கும். அந்த குறையை போக்கி அதனை பெறுவதற்க்கும் ஒரு வழியை புதிய பிளாக்கில் உள்ள பயிற்சி உங்களுக்கு உதவி செய்யும். உதாரணத்திற்க்கு நீங்கள் நீண்ட நாட்கள் வறுமையிலேயே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பயிற்சியை நீங்கள் எடுத்து வரும்பொழுது கண்டிப்பாக உங்களின் பொருளாதார வளம் மேம்படும்.

ஒவ்வொரு பரிகாரமாக செய்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. இதனை செய்தாலே போதும் அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். நான் பயிற்சி செய்ததை நீங்கள் செய்யபோகின்றீர்கள்.

அஷ்டமசனி நடக்கும் நேரத்தில் நாம் எப்படிப்பட்ட பரிகாரங்கள் செய்தாலும் அந்தளவுக்கு எடுபடாது ஆனால் இந்த பயிற்சியை செய்தால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது.

எல்லாேரும் இதனை செய்யவேண்டும் என்பது எனது விருப்பம். உங்களின் வீடுகளில் இருந்தே அனைத்து பயிற்சியையும் செய்துக்கொள்வது போல் வடிமைத்து இருக்கிறேன். உடனே இணைந்து பயிற்சியை தொடங்குங்கள்.

சென்னையில் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு