Followers

Tuesday, January 5, 2016

பரிகாரம்


ணக்கம்!
          நம்ம ஆட்கள் ஜாதகத்தை நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி உங்களின் வாரிசுகளுக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதை சொல்லிவிடுங்கள் அல்லது அதற்கு நீங்களே செய்துவிடுங்கள்.

இளம் தலைமுறையினர் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். நீங்கள் செய்யவேண்டியதை செய்துவிடுங்கள். பல பேரை நான் பார்க்கிறேன். அவசரப்பட்டு ஏதாவது ஒன்றை செய்துவிட்டு அதன் பிறகு கஷ்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

தற்பொழுது எல்லாம் நிறைய வாடிக்கையாளர்களை நான் பார்க்கும்பொழுது அவர்களின் கஷ்டம் திருமணத்தின் பொழுது ஒழுங்காக ஜாதகத்தை பார்க்காமல் திருமணத்தை நடத்திவிடுகிறார்கள். அதன் பிறகு பிரிவு என்று வரும்பொழுது ஜாதகத்தை பார்க்கிறார்கள்.

பல பெரிய கம்பெனிகளில் உள்ளவர்கள் நிறைய சம்பளம் வாங்கினாலும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை வந்து அவர்களை படுத்தி எடுத்துவிடுகிறது. கிரகங்கள் அடிக்கும்பொழுது ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்கின்றனர்.

ஒரு சாதாரணமாக சோதிடம் பார்க்கும் நபர்களிடம் சென்றால் கூட ஒவ்வொருவருக்கும் இந்த பிரச்சினை இருக்கின்றது இதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள்.

நம்ம காசு இருக்கின்ற நேரத்தில் கண் தெரியாமல் ஆட்டத்தை போட்டுவிட்டு ஒன்றும் செய்யாமல் பிறகு நீங்கள் பிரச்சினையில் மாட்டும்பொழுது அதற்கு தீர்வு காண வருவது கடினமான ஒன்று.

பிரச்சினையில் நீங்கள் இருக்கும்பொழுது நீங்களே பரிகாரம் செய்யலாம் என்று எதிர்பார்க்கமுடியாது அதற்கு என்று உள்ளவர்களிடம் நீங்கள் சென்றால் மட்டுமே உங்களுக்கு தீர்வு ஏற்படும்.

வேதாரண்யம் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். விரைவில் உங்களை சந்திக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: