Followers

Sunday, January 10, 2016

தொழில் வெற்றி


ணக்கம்!
          நேற்று மாலை பதிவில் இறால் பண்ணையை பற்றி இட்ட கருத்திற்க்கு ஒரு சில நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஒருவர் அதில் நஷ்டம் ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துக்கொண்டார்.

என்னுடைய பதிவுகள் அனைத்தும் அனுபவத்தில் எழுதும் பதிவுகள். அந்தந்த துறையில் இருப்பவர்கள் அவர்களின் துறையைப்பற்றி எழுதும்பொழுது அவர்களுக்கு இது பொருந்திவரும். இறால் பண்ணையில் சம்பாதித்வர்களும் அதிகம் உண்டு. அவர்களின் ஜாதகம் அப்படி வேலை செய்யும் கூடுதலாக அவர்களின் குலதெய்வ அருளும் அவர்களுக்கு நன்றாக இருக்கும்.

பொதுவாகவே ஒரு தொழில் செய்வதற்க்கு ஆன்மீகவாதியின் துணை தேவைப்படும். அதுவும் இப்படிப்பட்ட அதிகமான பணத்தை போட்டு அது வெற்றி பெறுவதற்க்கு ஆன்மீகவாதியின் துணை கண்டிப்பாக தேவைப்படும்.

பொதுவாகவே மனிதனுக்கு உள்ள பலகீனம் அடிப்பட்டவுடன் தான் ஞானம் பிறக்கும். நம்ம ஆட்கள் இருக்கின்ற பணத்தை எல்லாம் விட்டுவிட்டு அதன் பிறகு தான் ஆன்மீகவாதியை தேடி அலைவார்கள். நீங்கள் அப்படி எல்லாம் இருக்காமல் எந்த தொழில் செய்தாலும் ஒரு ஆன்மீகவாதியிடம் ஆலோசனை கேட்டுவிட்டு பிறகு அந்த தொழிலை செய்யுங்கள். 

ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்க்கும்பொழுது தான் ஒரு சில சூட்சமவிசயங்கள் எல்லாம் தெரியவரும். ஜாதகத்தை பார்த்து நாம் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொண்டு ஆன்மீகபலம் கொண்டு செயல்படும்பொழுது கண்டிப்பாக வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: