Followers

Sunday, January 31, 2016

குடும்ப பாக்கியம்


ணக்கம்!
          ஒரு குடும்பத்தில் ஒருத்தர் மடடுமே சிந்தனை செய்யவேண்டும் அனைவரும் சிந்தனை செய்தால் குடும்பம் பிரச்சினையில் தான் இருக்கும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும் மீதி உள்ளவர்களுக்கு அனைவருக்கும் நன்றாக இருக்காது.

ஒரு குடும்பத்தில் அனைவரும் அறிவாளியாக இருந்தால் அந்த குடும்பம் பைத்தியமாக தான் இருக்கும். ஒருத்தர் மட்டும் சிந்தித்து குடும்பத்தை நடத்தவேண்டும். தற்காலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சம்பாதிக்கலாம் ஆனால் சம்பாதிக்கும் அனைவரும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கட்டுபட்டு நடக்கும்பொழுது மட்டுமே குடும்பம் சிறக்கும்.

ஒரு சில நடிகர்களின் குடும்பத்தை பார்த்தால் அனைவரும் நடிக்க வந்துவிடுவார்கள். அனைவரும் ஒருவர் பேச்சைக்கேட்டு இருக்கமாட்டார்கள் நான் சம்பாதிக்கிறேன் என் இஷ்டம் போல் தான் வாழ்வேன் என்று இஷ்டத்திற்க்கு இருப்பார்கள். கடைசியில் அந்த குடும்பம் வீணாக போய்விடும்.

பெரிய நடிகரை பாருங்கள் அவர் ஒருவரே போதும் ஆனால் அவரின் மகள்களையும் சினிமாவில் இறக்கிவிட்டு நடிக்க வைத்து அவர்களுக்கு ஒரு நல்ல குடும்பம் அமையாமல் போய்விடும். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் வாரிசு வரவேண்டும் அதே நேரத்தில் அந்த குடும்பத்திற்க்கு உரிய கடமையை செய்துவிடவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: