Followers

Monday, January 4, 2016

மனவலிமை வெற்றியை தரும்


ணக்கம்!
          நம்மிடம் சோதிட ரீதியாக ஆலோசனை கேட்கும் நபர்களிடம் நான் காண்பது உடனே தீர்வு எனக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு குணம் இருக்கும். ஒவ்வொருவரும் படும் கஷ்டத்தை அனுபவிக்க முடியாமல் இதனை எதிர்பார்க்கின்றனர்.

நானும் எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் அவர்களின் உண்மையான விசயம் கருத்தில் பிடிப்படுவதற்க்கு முன்பாக எதனை செய்தாலும் அது பிரச்சினையை கிளப்பிவிடும் என்பதால் நன்றாக ஆராய்ந்து செய்யவேண்டும் என்று நினைப்பேன்.

ஒவ்வொருவருக்கும் பிரச்சினை என்பது வந்துக்கொண்டே தான் இருக்கும். நமக்கு தான் பிரச்சினை என்று நினைத்து வருந்துவதை விட இதற்கு முன்பு எத்தனையோ பேர் இந்த கிரகங்களால் பாதிக்கப்பட்டு சொல்லமுடியாத துயரத்தை சந்தித்து இருப்பார்கள் என்று நினைத்தாலே போதும் நமது மனம் கொஞ்சம் தயாராகிவிடும்.

ஒரு காலத்தில் சைரன் வைச்ச வண்டியில் சென்றவன் எல்லாம் இன்று சும்மா வீட்டு முற்றத்தை பார்த்துக்கொண்டிருப்பான். இது எல்லாம் கிரகங்களால் தான் நடந்து இருக்கும். மன்னாதி மன்னன் எல்லாம் மண்ணை கவ்வியது இந்த கிரகங்களால் தான் என்று நினைத்துக்கொண்டு நாம் வேலையை பார்த்தாலே போதும். கிரகங்களை எதிர்த்து வெற்றி நடை போட என்ன வழி என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

ஒரு பிரச்சினை உங்களுக்கு வருகிறது என்றாலே கண்டிப்பாக கிரகங்கள் ஏதோ நம்மை தாக்க வருகிறது இதனை முறியடித்து வருவதற்க்கு என்ன வழி இருக்கிறது என்பதை மட்டும் பாருங்கள். கண்டிப்பாக ஒவ்வொரு பிரச்சினையும் நாம் எளிதில் தீர்க்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: