Followers

Tuesday, January 19, 2016

மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி ஏழாவது வீட்டோடு தொடர்புக்கொள்ளும்பொழுது என்ன பலனை தரும் என்பதை பார்க்கலாம். ஏழாவது வீடு களத்திரஸ்தானம். களத்திரஸ்தானத்தோடு தொடர்புக்கொள்ளும்பொழுது திருமணம் ஆனவுடன் சிறப்பான வாழ்வை வாழ்வார்கள்.

பல பேர்களுக்கு திருமணம் ஆனவுடன் தான் செட்டில் ஆவார்கள். திருமணம் முடிந்தபிறகு சம்பாதிக்க ஆரம்பிக்கும் ஆட்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

ஒரு சிலருக்கு திருமணம் ஆனவுடன் பிரச்சினை அதிகம் வந்துவிடும் அவர்களுக்கு இந்த மாதிரியான அமைப்பு இல்லாத காரணமாக கூட இருக்கலாம். மனைவி அமைவது கூட பாக்கியம் தான். நல்ல பாக்கியம் செய்து இருக்கிறான் அதனால் தான் நல்ல குணத்தோடு கூடிய மனைவி அமைந்தால் என்று சொல்லவார்கள் அல்லவா அவர்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இருப்பதால் தான் நடக்கிறது.

பாக்கியமும் களத்திரமும் சம்பந்தபடும்பொழுது திருமணம் கூட இளமையில் நடைபெறும் பாக்கியம் கிடைக்கும். எல்லாம் இருக்கும்பொழுது தான் சின்ன வயதில் திருமணம் நடக்கும். பொதுவாக இப்படி அமைவது சிறப்பான ஒரு யோகம் என்றே சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: