Followers

Sunday, January 24, 2016

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானம் எட்டாவது வீட்டோடு தொடர்புக்கொள்ளும்பொழுது மரணம் ஏற்படுவது ஒரளவு நல்ல முறையில் அமையும். ஞானம் அடைந்தவர்களாக ஜாதகர் இருப்பார்.

மரணத்தை கூட யோகமாக தான் நமது இந்து மதத்தில் பார்க்கிறார்கள். ஒருவருக்கு எப்படி மரணம் ஏற்படும் என்பதையும் ஜாதகத்தில் சொல்லி வைத்துள்ளார்கள். அனைத்தையும் எழுதியுள்ளதால் எப்படிப்பட்ட மறுஜென்மம் அல்லது மோட்சம் கிடைக்கும் என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.

பாக்கியம் மரணவீட்டில் சம்பந்தப்படும்பொழுது மரணம் கூட நல்லவிதத்தில் அமையும். ஒரு சில சாமியார்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். அவர்களின் மரணம் ஒரு ஜெயந்தியாக போற்றப்படுகிறது அல்லவா அவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

சாமியார்களுக்கு இது நல்லது. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அந்தளவுக்கு பயன் தருவதில்லை. நல்ல இறைவழிபாடு இருந்தால் ஒரளவு சமாளிக்கலாம். இப்படிப்பட்ட அமைப்பு உங்களுக்கு இருந்தால் சிவவழிபாடு செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: