Followers

Saturday, January 9, 2016

இராகு கேது பெயர்ச்சி அச்சம்


ணக்கம்!
          நேற்று நடந்த ராகு கேது பெயர்ச்சி தான் உலகம் முழுவதும் ஓடும் பெரிய ஒரு செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பட்டி தொட்டி எல்லாம் பரவலாக பேசப்படும் ஒரு செய்தியாக்கிய மாற்றிய சாதனை சோதிடர்களுக்கு சேரும் என்று நினைக்கிறேன்.

கோச்சாரப்பலன் எல்லாம் அனைவருக்கும் வேலை செய்துவிட்டால் நம்ம மக்களுக்கு கஷ்டம் என்பதே வராது. கெடுதல் பலனை தரும் காலத்தில் கெடுதல் பலனை கொடுத்தாலும் நல்ல நேரத்தில் கொடுத்த பலனை வைத்து நம்ம மக்கள் விடாமல் பிடித்துக்கொள்வார்கள்.

கோச்சாரப்பலன் ஒரு ஜாதகத்தில் ஐந்து சதவீத பலனை தந்தாலே பெரிய புண்ணியம் செய்தவனாக தான் இருக்கவேண்டும். நம்ம மக்களை பயமுறுத்தி வைத்திருப்பதில் சோதிடர்களுக்கு அலாதியான ஒரு விருப்பம் என்று நினைக்கிறேன்.

உங்களின் ராசியை நீங்கள் சோதனை செய்து பார்த்தாலே தெரியும். பல நல்ல நிலையில் உங்களின் ராசி இருக்கின்றது என்று புத்தகத்தில் போட்ட காலத்தில் எல்லாம் நீங்கள் வெளியில் சொல்லமுடியாத துயரத்தில் இருந்து இருப்பீர்கள்.

கோச்சாரப்பலனை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை சும்மா ஒரு முறை பார்த்தால் போதும் அதன் பிறகு உங்களின் ஜாதகத்தில் உள்ள தசாநாதன் எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள். தசாநாதன் கொடுக்காததை வேறு யாரும் அவ்வளவு எளிதில் கொடுத்தவிடமுடியாது. பயப்படாமல் உங்களின் ஜாதகத்தை பார்த்து பலனை தெரிந்துக்கொண்டு அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: