Followers

Friday, January 8, 2016

அனுமன் ஜெயந்தி


ணக்கம்!
          நாளை அனுமன் ஜெயந்தி. சிவ சொருபமான அனுமனை வணங்கவேண்டிய நாள். பல நண்பர்களுக்கு அனுமனுக்கு வெண்ணைக்காப்பை செய்ய சொல்லிருப்பேன். பல நண்பர்கள் இதனை செய்திருக்கிறார்கள்.

இராவணன் கிரகங்களை எல்லாம் கட்டி வைத்து இராமனுக்கு மரணயோகத்தை தருவதற்க்கு ஏற்பாடு செய்யும்பொழுது அனுமன் தான் அத்தனை கிரகங்களையும் அவிழ்த்து விடுவான். அதனால் அனுமனை வணங்கினால் கிரகங்களின் தாக்கம் இருக்காது.

அனுமனுக்கு பல இடங்களில் சிமெண்ட் சிலை வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிலைகளை வணங்க வேண்டாம். நம்ம ஆளுங்க உயரமாக இருக்கவேண்டும் என்று சிமெண்ட்சிலையை வைத்து அவர்களின் பெயரை பறைசாற்றுவார்கள். இதில் எல்லாம் அந்தளவுக்கு சக்தி இருக்காது. சக்தி சிமெண்டில் என்றும் தங்காது.

சின்ன சிலையாக இருந்தாலும் கரும்கற்களால் செய்யப்பட்ட அனுமனை வணங்குங்கள். உங்களுக்கு அனைத்து பாக்கியத்தையும் கொடுக்கும்.நாளை முழுவதும் அனுமன் நினைப்பில் இருந்தால் போதும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: