Followers

Monday, February 22, 2016

தீர்வு பகுதி 6


ணக்கம்!
          ஒவ்வொரு பிரச்சினையும் நாம் வெளியில் சொல்லி அதற்கு தீர்வை சொல்லுகிறோம். இப்படி சொன்னாலும் அவர் அவர்களுக்கு உள்ளே என்ன பிரச்சினை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒவ்வொரு மனிதனின் உள்பக்கம் மற்றும் வெளிபக்கம் இருக்கும் அதில் வெளிதோற்றத்திற்க்கு நல்லவராக தெரிந்தாலும் உள்ளே இருக்கும் கருப்பு பக்கம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அந்த கருப்பு பக்கத்தில் மனிதன் என்ன செய்தான் என்பதை அவனுக்கு தான் தெரியும். 

ஒவ்வொருரின் கருப்பு பக்கத்திலும் ஒவ்வொருவரும் தாம் இந்த தவறை செய்தோம் என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் பரிகாரம் தேடும்பொழுது தான் அவர்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

கருப்பு பக்கத்தை நாம் சோதிடத்தில் ஒரளவு சொன்னாலும் அதனைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் அதிகம் தெரியும். உள்ளுக்குள் இருக்கும் மிருககுணம் செய்த தவறு என்ன என்பதை பார்த்துக்கொண்டு அதற்கு பரிகாரத்தை தேடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: