Followers

Tuesday, February 23, 2016

தீர்வு பகுதி 7


ணக்கம்!
          நான் இந்த பதிவை எழுதும் முன்பு பல கிராமங்களுக்கு சென்று சோதிடம் பார்த்து இருக்கிறேன். அப்படி பார்க்கும் ஊர்களில் பல தகவல் நமக்கு கிடைக்கும் அதனை தான் நான் அனுபவமாக உங்களுக்கு சொல்லி வருகிறேன்.

ஒரு சில கிராமங்களில் அந்த கிராமத்தில் உள்ள அதிகபடியான நிலத்தை வைத்திருந்தது அந்த ஊரில் இருந்த பிராமணர்களின் குடும்பமாக இருக்கும். பிராமணர்கள் அந்த ஊரை விட்டு சென்று நகரத்தில் வசிக்க தொடக்கிவிட்டனர். அவர்களின் நிலத்தை அங்குள்ள மக்கள் ஆட்டைப்போட்டு அதாவது அவர்களுக்கு தெரியாமல் அந்த நிலத்தை பயன்படுத்துவது உண்டு.

ஒரு சில இடத்தில் அவர்களை மிரட்டி கூட வாங்கி இருக்கிறார்கள். நம்ம ஆட்கள் தான் வயலுக்கு ஒரு வருடம் சொந்தகாரன் செல்லவில்லை என்றால் அந்த வயலை தன் வயல் என்று சொல்லுவார்களே. அப்படி பல இடத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இவர்களின் குடும்பங்கள் எல்லாம் தற்சமயம் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பல பேர் அதனால் இறந்துகூட இருக்கிறார்கள். பல இடங்களில் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

இது எல்லாம் நடக்குமா என்று கேட்காதீர்கள் கண்டிப்பாக நடந்து இருக்கிறது. நடந்துக்கொண்டும் இருக்கின்றது. பிராமணர்கள் எல்லாம் சத்தியவான் என்று நான் சொல்லவில்லை அவர்கள் சொன்ன மந்திரம் அவர்களை காக்கிறது. 

இதனை நீங்கள் நம்பவில்லை என்றாலும் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபராவது இதனை நம்புவார்கள். அவர்களுக்கு பயன்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிலத்தில் எதுவும் செய்யாமல் விட்டுவிடுங்கள். நிறைய பிராமணர்களுக்கு உதவுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: