Followers

Tuesday, February 16, 2016

ராகுவின் பலம்


ணக்கம்!
          ராகு பலம் என்பதைப்பற்றி இரவு நேரத்தில் பார்த்து வருகிறோம். ராகு கிரகம் செவ்வாய் கிரகம் போல் செயல்படும் என்பதை பலர் சொல்லுவார்கள். இரண்டும் அதிக வேகமாக செயல்படும் கிரகங்கள் தான். அதனால் அந்த கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

செவ்வாய் தோஷத்திற்க்கு ஒரு சில இடத்தில் படு பயங்கரமான உருவத்தை உடைய தெய்வங்களை வணங்க சொல்லுவார்கள். செவ்வாய் தோஷத்திற்க்கு பரிகாரமும் அங்கு நடைபெறும். காளி துர்க்கை போன்ற தெய்வங்களை வைத்து பரிகாரம் செய்வார்கள்.

ராகு தோஷத்திற்க்கு பரிகாரமும் இப்படிப்பட்ட தெய்வங்களை வணங்க சொல்லுவார்கள் ஆக இரண்டும் ஒரே மாதிரி செயல்படும் கிரகங்கள் என்று நாம் வைத்துக்கொள்ளலாம்.

ராகுவும் செவ்வாயும் ஒரே பலம் பெற்ற கிரகம் என்பதால் முருகனை வணங்கினால் கூட ராகுவின் தாக்கம் குறையும் என்று எனது நண்பர் ஒருவர் தற்பொழுது சொன்னார். அதனையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். எதனை வணங்கினாலும் இரண்டும் ஒன்றே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: