Followers

Friday, February 26, 2016

வெயிலை சமாளிக்க தத்துவம்


ணக்கம்!
          அக்னி வெயில் ஆரம்பித்துவிட்டது. பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது. வெயில் ஆரம்பித்தாலே எனக்கு அந்தளவுக்கு ஒத்துக்கொள்ளாது. நமக்கு இருக்கும் வேலை பளு அதிகம்.

இதனையே தொழிலாக செய்வதால் நமக்கு நிறைய வாடிக்கையாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கட்டாயம் இருக்கின்றது. இதனை எல்லாம் வெயில் என்று பாராமல் பல ஊர்களுக்கு சென்று செய்துக்கொண்டு இருக்கிறேன்.

தொழில் என்று வரும்பொழுது வெயில் என்ன மழை என்ன தொழிலை செய்தால் போதும். அவ்வளவு மழை இந்த வருடத்தில் பெய்யும்பொழுது கூட நாம் பல இடங்களுக்கு சென்று தொழிலை கவனித்துக்கொண்டு தான் இருந்தோம்.

நேற்று வெயிலில் வெளியில் செல்லும்பொழுது ஒருவரிடம் என்ன வெயில் என்று அலுத்துக்கொண்டேன். அவர் என்னிடம் வந்து சொன்னார் நெருப்பு தின்னும் உடல் தானே தம்பி. வெயில் என்ன செய்துவிடபோகின்றது என்று சொன்னார். 

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதன் வழியாக ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு தத்துவத்தை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். கடும்வெயிலில் செல்லும்பொழுது இதனை நாம் நினைத்துக்கொண்டு தான் இந்த கோடையை சமாளிக்கவேண்டும்.  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: