Followers

Saturday, February 27, 2016

தானாக வேலை செய்யும் பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி இதுவரை பார்த்து வந்து இருக்கிறோம். பாக்கியஸ்தானத்தைப்பற்றி நாம் சொல்லும்பொழுது ஒரு விசயத்தைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அதாவது நாம் சொல்லி தான் இதனை எல்லாம் செய்யவேண்டும் என்பதை மீறி இயற்கையே நம்ம இப்படி செய்ய தூண்டுகிறது.

நம்மிடம் வரும் நண்பர்களிடம் கடைசியில் நான் சொல்லுவது ஏதாவது குழந்தைகளை படிக்க வைக்க உதவுங்கள். அதாவது நீங்களே நேரிடையாக உதவுங்கள் என்று சொல்லுவது உண்டு.

நான் இப்படி சொன்னவுடன் அவர்கள் சார் நாங்கள் இதனை செய்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள். அவர்களே இப்படி செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.  அவர்களுக்குள் இருக்கும் ஏதாே நல்ல விசயம் இப்படி நல்லதை செய்யவேண்டும் என்று அவர்களே செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது எல்லாம் ஏதாவது செய்யுங்கள் என்று நான் சொல்லுவதை விட்டுவிட்டேன். அவர்களே செய்யும்பொழுது நாம் ஏன் இதனை கேட்கவேண்டும் என்பதால் விட்டுவிட்டேன். இதனை விட அனைவருக்கும் பாக்கியஸ்தானம் ஏதாவது விதத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.

கூடுதலாக சம்பாதித்து நிறைய செய்யும்பொழுது நிறைய பாக்கியம் பெற்று நமது குடும்பத்தை நன்றாக வாழ வைக்கும். நமது வாரிசுகளும் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: