Followers

Saturday, February 27, 2016

பரிகாரம் செய்யும்பொழுது கவனிக்கவும்


ணக்கம்!
          ஒரு சில ஜாதகங்களுக்கு பரிகாரத்தை பரிந்துரைப்பது உண்டு அவர்களே செய்யக்கூடிய பரிகாரங்களையும் பரிந்துரைப்பது உண்டு. அதிகப்பட்சமாக தீபம் போடசெல்லுவது உண்டு அல்லது தீபம் ஏற்றி அவர்களின் பெயரில் ஒரு அர்ச்சனை செய்ய சொல்லுவேன்.

இதனை நமது நண்பர்கள் செய்யும்பொழுது ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது கோச்சாரப்படி சந்திரன் நல்ல நிலையில் இருக்கும்பொழுது இதனை செய்யுங்கள்.

சந்திரன் உங்களுக்கு நன்றாக இல்லாத நிலையில் இருக்கும்பொழுது உங்களின் பரிகாரம் எடுபடாது. ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் மனதுக்காரகன் உங்களுக்கு நல்ல மனதை உருவாக்கும்பொழுது மட்டுமே நீங்களும் நல்ல மனதோடு பரிகாரம் செய்வீர்கள்.

சந்திரன் பிரச்சினையை தரக்கூடிய நிலையில் இருந்து நீங்கள் பரிகாரம் செய்தால் அந்த பரிகாரம் கண்டிப்பாக எடுப்படாது. பரிகாரம் செய்பவர்களுக்கு தேவையான விசயம் நடக்காது. அதனால் உங்களின் ராசிக்கு எப்படி சந்திரன் இருக்கிறார் என்பதை பார்த்து செய்யவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: