Followers

Thursday, March 24, 2016

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          தமிழ்நாட்டில் உள்ள டவுன் என்ற சொல்லக்கூடிய பேராருட்சிகள் நிறைய இருக்கின்றன என்பது நீங்கள் அறிந்த ஒன்று. அந்த டவுன்களில் ஒரு சில மருத்துவர்கள் இருப்பார்கள். அதாவது ஒரு வில்லங்க வேலை செய்வதற்க்கு என்றே மருத்துவர்கள் இருக்கின்றனர்.

இந்த மருத்துவர்களைப்பற்றி தான் இந்த பதிவு. இந்த மருத்துவர்கள் செய்யும் செயல் என்ன என்றால் பணத்திற்க்காக கருகலைப்பு செய்வது. கருகலைப்பிற்க்கு பின்னால் ஏதோ காரணம் இருந்தாலும் அழிப்பது ஒரு உயிர் என்பதை யாரும் நினைப்பதில்லை.

எனது ஊருக்கு அருகில் ஒரு மருத்துவர் இதனை செய்துக்கொண்டிருந்தார் அவருக்கு திருமணம் ஆனவுடன் பார்த்தால் அவருக்கு குழந்தை இல்லை. அவரின் மனைவியும் மருத்துவர். மருத்துவத்தில் பிரச்சினை இல்லை என்று அவர்கள் சொல்லாமலே தெரிகிறது.

இதனைப்போல் எல்லாம் ஊர்களிலும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது. காலம் கடந்து தான் இது தவறு என்பது அனைவருக்கும் புரிகிறது. இதனைப்போல் தனிமனிதர்களும் செய்துக்கொண்டு இருப்பீர்கள். அது தவறு என்பதை உணர்ந்துக்கொண்டு அதற்கு பரிகாரத்தை தேடுங்கள்.

வாழ்க்கையில் ஒருமுறை தான் கருவை அழித்து இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் அதற்கும் நீங்கள் பரிகாரம் தேடவேண்டும் இல்லை என்றால் அந்த பாவம் உங்களை பின்தொடர்ந்து வரும்.

அடுத்த பதிவு 1 மணிக்கு

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: