Followers

Monday, March 28, 2016

குருவின் அருள்


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்திற்க்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக குரு கிரகத்தின் அருள் கொஞ்சமாவது இருக்கும். குரு கிரகத்தின் அருள் இல்லாமல் கண்டிப்பாக ஜாதககதம்பத்தை படிக்கவே முடியாது.

பல நண்பர்கள் தற்பொழுது தான் இந்த பிளாக்கை படிக்க நேர்ந்தது இது நாள் வரை எனக்கு தெரியவில்லை என்று சொல்லியுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் தற்பொழுது தான் குருவின் அருள் கிடைத்து இருக்கின்றது என்று அர்த்தம்.

இதற்கு முன்னால் நெட்டில் உட்கார்ந்துக்கொண்டு எதையோ படித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு தற்பொழுது தான் இந்த தளம் பற்றி தெரிந்தது என்று சொல்லியுள்ளனர். இந்த தளம் ஏற்கனவே எங்களுக்கு தெரிந்து இருந்தால் எப்பொழுதே தன்னை ஒழுங்குபடித்துக்கொண்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.

எப்படியோ வந்துவிட்டீர்கள் இனிமேலாவது உங்களை மேம்படுத்திக்கொள்ளும் வழியில் கவனம் செலுத்துங்கள். ஒரு சிலருக்கு படிக்க மட்டும் அருள் கிடைக்கும் அதன் பிறகு எதையும் செய்யாமல் போய்விடுவார்கள் அப்படி இல்லாமல் குரு கிரகம் எதை எல்லாம் காரகம் காட்டுகிறதோ அதனை எல்லாம் செய்ய தொடங்குங்கள்.

இந்த பிறவியில் கிடைத்த அற்புதவாய்ப்பை தவறவிடாமல் செய்ய தொடங்கினாலே போதும். என்ன கிடைக்கும் என்பதை நான் சொல்லதேவையில்லை அது கண்டிப்பாக உங்களுக்கு கிடைத்தே தீரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: