Followers

Tuesday, March 22, 2016

திருமண பரிகாரம்


ணக்கம்!
          ஜாதககதம்பம் ஆரம்பித்த நாட்களில் இருந்து இந்த பதிவில் சொல்லுகின்ற நல்லவற்றை எடுத்து நமது நண்பர்கள் அவர்களின் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு இப்படி செய்தால் இந்த பிரச்சினை தீரும் என்று சொல்லுவார்கள். இதுவே எனக்கு பல வருடங்கள் சென்றபிறகு தான் தெரிந்தது. நண்பர்கள் என்னிடம் இதனை சொன்னார்கள்.

சிறந்த சமூக சேவை செய்கிறேன் என்று நான் சொல்லவில்லை என்னிடம் ஒரு சக்தி இருந்துக்கொண்டு இதனை எல்லாம் நீ செய் என்று சொல்லுகிறது அதனை நான் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

நாளை பங்குனி உத்திரம். நமது மக்கள் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பல பரிகாரம் செய்து திருமணம் நடைபெறவில்லை என்று இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நாளை ஒரு வரபிரசாதமான ஒரு நாள். நாளை தினத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாளை முழுவதும் விரதம் இருந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வாருங்கள். ஒரு வேளை விரதசாப்பாடு சாப்பிடலாம். விரதம் என்றாலே முடிக்கும் விதமாக விரத சாப்பாடு செய்து அதனை படைத்து விரதம் இருப்பவர்கள் உண்ணுவார்கள். விரதத்தை முடித்துவிட்டு கூட முருகன் கோவில் செல்லலாம்.

ஏழை பெண்கள் திருமணமாகாமல் இருப்பார்கள் அவர்களிடம் சென்று இதனை சொல்லுங்கள். ஏழைகளுக்கு இது எளிதில் நடக்ககூடிய பரிகாரம் தான். உங்களால் ஒரு ஏழைக்கு திருமணம் நடக்கும்.

இதுவரை திருமணம் நடக்காமல் இருக்கும் நண்பர்கள் இதனை செய்யலாம். பொதுவாக அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களால் பிறர்க்கு திருமணம் நடக்கவும் இந்த பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: