Followers

Wednesday, March 30, 2016

திருவிழா காலம்

ணக்கம்!
          பல ஊர்களில் திருவிழா காலம் இது. திருவிழா காலம் என்பதால் இந்த காலத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்றால் இந்த விழாவில் பங்கேற்பது மூலமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

எந்த காலத்திலும் கடவுளை தரிசனம் செய்தாலும் திருவிழா காலத்தில் நாம் தரிசனம் செய்தால் கூடுதல் சக்தி நமக்கு கிடைக்கும். திருவிழா காலங்களில் நீங்கள் கடவுளின் ஊர்வலம் செல்லும்பொழுது அதனை தூக்குவது அல்லது இழுப்பது போன்ற காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம். தெய்வங்களின் புறப்பாடு இருக்கும் புறப்பாடு சமயத்தில் நீங்கள் கலந்துக்கொண்டு அதில் பங்குக்கொள்ளலாம்.

பாக்கியஸ்தானத்தைப்பற்றி நாம் பார்த்து இருக்கிறோம் அதில் பாக்கியஸ்தானம் பலப்பட்டால் நமக்கு வரும் தடைகள் அனைத்தும் விலகும். பாக்கியஸ்தானத்திற்க்கு திருவிழாவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது கூட பாக்கியஸ்தானம் வலுபெறும். 

திருவிழா காலங்களில் தேர்திருவிழா என்று ஒன்று இருக்கும். பெரும்பாலான பெரிய கோவில்களில் இந்த தேர்திருவிழா நடைபெறும். தேர்திருவிழாவில் கலந்துக்கொண்டு தேரை இழுங்கள். நல்ல புண்ணியம் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: