Followers

Thursday, March 31, 2016

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          நீங்கள் உங்களில் ஊரில் தொழிலில் நசிந்த வியாபாரிகள் தொழில் அதிபர்களை பார்த்தால் அவர்கள் தொழில் நடத்திய காலக்கட்டத்தில் அவர்களின் வேலையாட்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுத்து இருக்கமாட்டார்கள்.

சம்பளம் கொடுக்காதற்க்கும் அவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்ததற்க்கும் என்ன காரணம் என்று கேட்கிறீர்களாக இருக்கின்றது. ஒருவர் தனக்கு வேலை பார்த்தால் அவர்களுக்கு சம்பளம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும்.

சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினால் சனிக்கிரகம் உங்களுக்கு பெரிய சரிவை கொடுத்துவிடுவார். தொழிலாளி மற்றும் தொழில்களுக்கு எல்லாம் காரத்துவம் சனிக்கிரகத்தின் கையில் தான் இருக்கின்றது.

நீங்கள் தொழிலாளியை ஏமாற்றினால் சனி கிரகம் உங்களின் தொழிலில் கைவைத்துவிடுவார். நஷ்டத்தை சந்திக்க இந்த ஒரு காரியம் போதுமான ஒன்று அதனால் நீங்கள் தொழிலில் உங்களின் தொழிலாளிக்கு ஒழுங்காக சம்பளம் கொடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: