Followers

Sunday, March 27, 2016

ராகு பலம்


வணக்கம்!
          ஒருவருக்கு ராகு தசா நடைபெற்றால் அந்த வீட்டில் உள்ளவர்களின் வயதானவர்கள் மற்றும் வாயில்லா ஜீவராசிகள் எல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் இதனைப்பற்றி நான் ராகு தசா எழுதும்பொழுதே சொல்லிவிட்டாலும் ஒரு சிலர் அலட்சியமாக இருந்துவிடுவார்கள் என்பதால் மீண்டும் மீண்டும் இதனை சொல்லுகிறேன்.

ராகு தசாவில் எப்படியும் உயிரை காவுவாங்காமல் விடாது. நம்மால் பிறரின் உயிர் பிரிவதற்க்கு நாம் ஒரு காரணமாக இருக்ககூடாது என்பதால் சொல்லுகிறேன். ராகு தசா ஒருவருக்கு நடந்தால் அவர்கள் விளிப்புடன் இருங்கள்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் கொஞ்சம் எடுத்து பாருங்கள். அதாவது வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள் யாருக்காவது ஒருவருக்கு ராகு தசா நடந்தால் உங்களின் சோதிடர்களை அணுகி அதற்கு பரிகாரத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்கு பரிகாரத்தை செய்துவிடுங்கள்.

எப்பொழுதுமே நம் ஆட்கள் காரியம் முடிந்தபிறகு தான் சோதிடத்தை எடுத்து ஆராய்வார்கள். சோதிடம் என்ற ஒன்று இருப்பதே முன்கூட்டியே தெரிந்துக்கொள்வதற்க்காக தான். உங்களின் ஜாதகத்தை எடுத்து ஒவ்வொன்றையும் தெரிந்துக்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: