Followers

Wednesday, August 31, 2016

கட்டண சேவை



ணக்கம்!
          ஜாதககதம்பத்தை நிறைய நண்பர்கள் படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். இந்த ஜாதககதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் இதில் எழுதப்பட்ட ஆன்மீக அனுபவங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் கட்டண சேவைக்கு வந்துவிடுங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்.

ஆன்மீகத்தை படித்துக்கொண்டே இருப்பதில் உங்களுக்கு எதுவும் நடந்துவிடபோவதில்லை. உங்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் ஆன்மீகம் இருந்தால் தான் நன்றாக இருக்கும். உங்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் பல நல்ல பயிற்சிகளை கட்டண சேவையில் கொடுத்து இருக்கிறேன். 

ஆன்மீகத்தில் சாதகம் செய்யவேண்டும் அதே நேரத்தில் வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் உடனே இதில் சேர்ந்துக்கொள்ளுங்கள். தினசரி வாழ்வில் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி இதனை செய்தாலே போதும்.

ஒரு முறை கட்டணத்தை செலுத்தினால் போதும் அதன் பிறகு இதனை விருப்ப சந்தாவாக மாற்றிவிட்டேன்.  அதன் பிறகு உங்களுக்கு இது பிடித்து இருந்தால் பணத்தை செலுத்தலாம். கட்டணத்தை உடனே செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.

கட்டணம் செலுத்துவதில் தவணை முறை உண்டு. இரண்டு தவணையாக பணத்தை செலுத்தலாம். அனைவரும் படிக்கவேண்டும் என்பதற்க்காக இதனை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாழ்க்கையை தீர்மானிக்கும் கிரகம்


ணக்கம்!
          இன்றைய காலத்தில் பல பேருக்கு நல்ல கிரகங்கள் அமைந்தும் அவர்களின் ஜாதகத்தில் சந்திரன் சரியாக அமையாத காரணத்தால் அவர்களின் வாழ்க்கை வீணாக போய்விட்டது. 

ஒரு வேலைக்கு நீங்கள் மனு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலை உங்களுக்கு கிடைக்கும் ஆனால் நீங்கள் அதற்கு போக விருப்பம் இல்லை என்று சொல்லுவீர்கள். இதற்கு காரணம் பித்ருதோஷம் இல்லை உங்களின் ஜாதகத்தில் சந்திரன் அடிவாங்கியுள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

என்னிடம் பல பெற்றோர்கள் அவர்களின் மகன் அல்லது மகளின் ஜாதகத்தை காட்டி இந்த தொழிலுக்கு போவர்களா என்று கேட்பார்கள். நான் தொழிலுக்குரிய காரகத்தை மட்டும் கணித்து பலனை சொல்லி கண்டிப்பாக போவார்கள் என்று சொல்லிவிடுவேன்.

கொஞ்சநாளில் சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் என்னிடம் வந்து சார் அவன் செல்லமாட்டேன் என்று சொல்லுகிறான் என்பார்கள். நானும் என்னடா என்று பார்த்தால் அவர்களின் ஜாதகத்தில் சந்திரன் அடிவாங்கியுள்ளது தெரிகிறது.

மனிதனுக்கு மனசு தானே பெரிய விசயம். எத்தனையோ துறவிகளை உருவாக்கியது மனசு தானே. எத்தனையோ மனிதர்கள் தற்கொலை செய்துக்கொள்வது எல்லாம் மனசால் வந்தது தானே.

உங்களின் ஜாதகத்திலும் சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். சந்திரன் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை சந்திரன் சரியில்லை என்றால் நீங்கள் சந்திரனுக்கு உரிய பரிகாரத்தை மேற்க்கொள்ளுங்கள்.

ஜாதக கதம்பத்தில் வந்த எத்தனையோ பேரை நல்லவழி காட்டியது சந்திரனை வைத்து தான். அதாவது ஒவ்வொருவரின் மனநிலையும் எதையும் தாக்கும் சக்தி வாய்ந்ததாக மாற்றி அவர்களை மேலே கொண்டு வந்து இருக்கிறேன். அதற்கு எல்லாம் எனக்கு பயன்பட்ட கிரகம் சந்திரன் மட்டுமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புத்தியை கொடுக்கும் புதன்


ணக்கம்!
          வேலைக்கு செல்லுபவர்கள் தன்னுடைய வேலையை தவிர வேறு ஏதாவது ஒரு வேலையையும் தேர்ந்தெடுத்து செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். ஒரு வேலையில் இருந்தால் சம்பாதிப்பது போதாது என்பதால் இதனை சொல்லிருந்தேன்.

பல நண்பர்கள் இதற்காக என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள். ஒரு சில பிறமாநிலத்தில இருப்பவர்கள் லாட்டரி வாங்கலாமா என்று கேட்டார்கள். ஒரு சிலர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாமா என்று கேட்டார்கள். பெரும்பாலும் நம்ம ஆட்கள் கேம்பிளிங் சம்பந்தப்பட்டவாறு அவர்களின் எண்ணமும் இருந்தது.

கையில் பணம் போதிய அளவு இல்லை என்றால் மனிதர்களின் குணம் இதனை சம்பந்தப்பட்டவாறு உள்ள விசயத்தில் ஈடுபாடு காட்டும். பொதுவாகவே இப்படிப்பட்ட விசயத்தில் பணத்தை விடுபவர்கள் அதிகம் பேர் யார் என்று பார்த்தால் நடுத்தரவர்க்கத்தில் உள்ளபவர்களாகவே இருப்பார்கள்.

கையில் பணம் நிறைய இருக்கும்பொழுது தான் இது சம்பந்தப்பட்ட விசயம் அதிகளவில் நமக்கு லாபகரமாக அமையும். வறுமையில் இருப்பவர்களுக்கு போதிய பணம் இல்லாதவர்களுக்கு இது சரிபட்டுவராது என்பது தான் என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

என்னை பொறுத்தவரை அனைவரும் நல்லவாழ்க்கை வாழவேண்டும் அதற்கு என்னால் முடிந்தளவு அவர்களுக்கு உதவவேண்டும் என்று தான் நினைப்பேன். மேலே சொன்ன விசயத்தை தவிர வேறு ஏதாவது ஒரு நல்ல தொழில் செய்யமுடியுமா என்பதை யோசித்து செயல்படுங்கள்.

புதன்கிழமை அன்று தான் நான் வழிபாடு நிறைய செய்யுங்கள் என்று சொல்லுவது உண்டு. நிறைய அறிவை நாம் பெறும்பொழுது யாருக்கும் தெரியாத ஒரு தொழிலை நாம் கண்டுபிடித்து அதனை செய்து அந்த வழியில் நாம் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

புதன்கிரகம் நல்ல புத்தியை கொடுக்ககூடிய கிரகம். புதன் கிரகம் நமக்கு நன்றாக இருக்கும்பொழுது நாம் எதையாவது ஒன்றை துருவி கண்டுபிடித்து விடுவோம். அதனை வைத்து நாம் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

புதன்கிரகம் பெரும்பாலும் அனைவருக்கும் சூரியனோடு சேர்ந்து இருக்கும். நல்ல புத்தியை இது கொடுக்கிறது. ஒரு சிலருக்கு இது செயல்படுவதும் இல்லை. புதன்கிரகம் தனக்கு சரியில்லை என்று நினைப்பவர்கள் அருகில் உள்ள சிவ ஸ்தலத்தில் நவகிரகத்தில் உள்ள புதனுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு ஒன்பது வாரத்திற்க்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். புதன் நன்றாக செயல்படும்.

புதன்கிரகத்தை வழிபட்டு வந்த பிறகு உங்களின் மனம் நிறைய செய்திகளை சேகரிக்க தொடங்கும். நல்ல புத்தியை வளர்க தொடங்கும். அனுபவத்தில் நல்ல மாற்றத்தை பலருக்கு இது கொடுக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 30, 2016

செவ்வாய் தோஷம்


ணக்கம்!
          செவ்வாய் கிரகத்தைப்பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம். சோதிடத்தை பார்ப்பதே செவ்வாய் இருக்கின்றனவா என்று தானே ஜாதகத்தை கையில் எடுப்பார்கள். மக்களின் மத்தியில் மிகுந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது செவ்வாய் தோஷம் என்று சொல்லலாம்.

இன்றைய காலத்தில் செவ்வாய் தோஷத்திற்க்கு எல்லாம் அந்தளவுக்கு கவலைப்படுவதில்லை என்று நினைக்கிறேன். மக்களிடம் கொஞ்சம் தெளிவு இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

இந்த காலத்தில் செவ்வாய்தோஷத்திற்க்கு அதிகம் பயப்படுவதில்லை என்று சொல்லுவது எதற்க்கு என்றால் நம்ம ஆளுங்க அதிகம் காதல் திருமணம் செய்கிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு செல்வதும் குறைகிறது.

திருமணம் முடிந்தவுடன் எப்படியும் தனிக்குடித்தனம் போய்விடுவார்கள். தனியாக தானே இருக்கபோகின்றார்கள் நமக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைப்பதால் தான். 

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதினர்களிடம் இந்த செவ்வாய்தோஷம் கடுமையாக வேலை செய்துவிடும். அதாவது இருவருக்குள்ளும் கடுமையான சண்டை சச்சரவுகளை உருவாக்கி அது முற்றிவிடும். விவகாரத்து வரை செல்ல வைப்பது செவ்வாய் தோஷத்தால் நடக்கிறது.

செவ்வாய் தோஷம் இருந்தால் இருவரையும் செவ்வாய்கிழமை விரதம் இருக்க சொல்லுங்கள். பொறுமையாக இருக்கவேண்டும் என்று சொல்லுங்கள். அதோடு அவர்களை தனிக்குடித்தனம் செல்ல சொல்லாதீர்கள்.

காதல் கல்யாணத்தில் இது வேலை செய்யவில்லையா என்று கேட்காதீர்கள். அங்கும் இது நடக்கிறது. காதல் திருமணம் செய்ய வைப்பதே செவ்வாய் தோஷம் தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 29, 2016

திலஹோமம்


ணக்கம்!
          இன்று காலையில் திலஹோமத்தைப்பற்றி ஒருவர் கேட்டார். திலஹோமத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதற்கு சரியான நேரத்தை இறைவன் கொடுத்துள்ளார்.

திலஹோமம் செய்வது ஒன்றும் தவறு இல்லை அதே நேரத்தில் திலஹோமம் செய்வதற்க்கு சரியான காலம் என்று ஒன்று உள்ளது அந்த நேரத்தில் தான் அதனை செய்யவேண்டும்.

ஒருவர் அனைத்தையும் பெற்றுவிட்டு அனைத்தையும் செய்துமுடித்துவிட்டு அதாவது தன்னுடைய கடமை அனைத்தையும் முடித்துவிட்டு கடைசி காலத்தில் திலஹோமம் செய்யவேண்டும்.

இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் இந்த ஹோமத்தை செய்து முடித்து இருக்கின்றனர். அதாவது ஹோமம் செய்யும் காலம் என்பது தன்னுடைய கடைசி காலத்தில் இதனை செய்யவேண்டும். நம்ம ஆட்கள் குறைந்த வயதிலேயே செய்துவிடுகின்றனர்.

காரிய தடை ஏற்படுகிறது. பித்ருதோஷம் இருக்கின்றது அதனால் இதனை சோதிடர்கள் சொன்னதால் இதனை செய்தேன் என்று சொல்லுகின்றார்கள். காரிய தடை இருப்பது இருக்கட்டும் ஆனால் அதற்க்காக திலஹோமம் செய்யவேண்டும் என்பதில்லை அதற்கு போய் இதனை செய்யவேண்டாம்.

நம்முடைய அனைத்து கடமையும் முடிவடைந்துவிட்டது என்ற காலம் வரும்பொழுது இதனை செய்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக அதனை செய்வதற்க்கு உகந்த காலம் இளம் வயது கிடையாது.

இராமேஷ்வரத்தில் திலஹோமம் செய்கின்றனர். தற்பொழுது உள்ள சோதிடர்கள் எல்லாம் எல்லா இடத்திலும் செய்கின்றனர். இராமேஷ்வரத்தில் திலஹோமம் செய்தால் கூட அங்குள்ள புரோகிதர்கள் இதனை ஒழுங்காக செய்வதும் கிடையாது என்பது தான் நடைமுறையில் உள்ள உண்மை.

காலம் கடைசியில் திலஹோமம் செய்துக்கொள்ளலாம். உங்களின் கடமையை முடித்துவிட்டு இதனை செய்யுங்கள். அதுவரை இராமேஷ்வரத்திற்க்கு சென்று நீராடிவிட்டு இறைவனை தரிசனம் செய்துவிட்டு வந்தால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 28, 2016

கிழமை


ணக்கம்!
          என்னிடம் ஏதோ ஒரு ஹோமம் அல்லது பூஜைகள் செய்யவேண்டியதாக இருந்தால் ஒரு சிலர் பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்ய சொல்லுவார்கள். இன்று ஒருத்தர் ஹோமம் செய்வதற்காக இருந்தால் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று எனக்கு பிரம்மமுகூர்த்தத்தில் செய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள்.

பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்வது நல்லது அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை என்று காலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்தால் அது சனிக்கிழமை கணக்காக சென்றுவிடும். சனிக்கிழமை செய்த பலன் கிடைக்கும்.

உலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மமுகூர்த்ததில் நடைபெறும் அனைத்து விஷேசமும் சனிக்கிழமை நடந்துள்ளது. நமது வழக்கப்படி ஒரு கிழமை என்பது ஆறு மணிக்கு மேல் தான் பிறக்கும்.

நமது வழக்கப்படி செய்வது தான் நல்லது. பொதுவாக அன்றேய கிழமையின் ஓரை கூட காலை ஆறு மணிக்கு தான் தொடங்கும் அதனால் காலையில் ஆறு மணிக்கு மேல் நீங்கள் எந்த ஒரு நல்லதையும் செய்யலாம்.

ஆறு மணிக்கு மேல் நல்ல நேரம் பார்த்துக்கூட நீங்கள் செய்துக்கொள்ளலாம். பிரம்மமுகூர்த்தமும் நல்லது தான் அதே நேரத்தில் அந்தந்த கிழமையின் ஓரை முக்கியபங்கு வகிக்கும் என்பதால் இப்படி செய்யுங்கள் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 27, 2016

சனி சந்திரன் சேர்க்கை


ணக்கம்!
          சனிக்கிரகத்தின் பார்வை அல்லது சனிக்கிரகத்தோடு தொடர்புக்கொண்டு சந்திரன் மட்டும் ஒருவரின் ஜாதகத்தில் மட்டும் இருந்தால் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வாழ்வில் ஏற்படும்.

சந்திரன் மனதுக்காரகன் என்பதால் சனியின் பார்வை படும்பொழுது மனது ரீதியாக அதிக பிரச்சினையை சந்திக்கவேண்டும். அதனாலே அவர்களின் வாழ்வில் அர்த்தமற்ற பிரச்சினை எல்லாம் கிளம்பி அவர்களின் வாழ்க்கையை பாழ் ஆக்கிவிடும்.

மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு முக்கால்வாசி அவனின் மனதில் வழியாக தானே ஏற்படுகிறது. மனதை காட்டும் கிரகம் சந்திரன் கொஞ்சம் நன்றாக இருந்தால் தானே நல்லது. சந்திரன் சனியோடு கூட்டு சேரும்பொழுது அதிகபடியாக மணவாழ்வில் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

நிறைய விவகாரத்துக்கள் நடைபெறுவது சந்திரன் மற்றும் சனி சேர்க்கை ஜாதகர்களுக்கு அதிகம் நடைபெறும்.உங்களுக்கு சனி மற்றும் சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் எல்லா விதத்திலும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். கொஞ்சம் பொறுமையாக எல்லாவிதத்திலும் இருங்கள்.

ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அதோடு சனி மற்றும் சந்திரனுக்கு அனுமன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 26, 2016

எட்டில் சனி


ணக்கம்!
          சேலத்தில் நண்பர்கள் சந்தித்தபொழுது இரண்டு பேருக்கு சனி எட்டில் இருந்தது. அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் சோதிடம் பார்க்கும்பொழுது சனி எட்டில் இருந்தால் கெட்டவர்கள் என்று சொல்லிவிட்டார்கள் அதனை வைத்து நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். சனி எட்டில் இருந்தால் கெட்டவர்களா?

முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். நாம் பார்க்கும் சோதிடம் அனைத்தும் இதுபோல இருக்கலாம் என்று தான் சொல்லலாம் இப்படி தான் என்று வரையத்து சொல்லமுடியாது. உலகத்தில் ஒரு மனிதனை படைத்தால் அவனை போல் அடுத்தவர் ஒருத்தரை கடவுள் படைப்பதில்லை என்பது மட்டும் உண்மை. 

இந்த உண்மை எப்பொழுது தெரியவரும் என்றால் குறைந்தது பனிரெண்டு வருடங்களுக்கு சோதிடத்தில் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு புரியவரும். நீங்கள் மட்டும் இந்த உலகத்தில் ஒருவர் உங்களை போல் அடுத்தவர் கிடையாது.

சனி எட்டில் இருந்தால் அவர் கெட்டவர் என்பது கிடையாது. சனி எட்டில் உள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர் அவர்கள் அனைவரும் கெட்டவர் கிடையாது. 

சனி எட்டில் பிறந்தவர்கள் இளைமையில் கடுமையான வறுமையில் சிக்கி அதன் பிறகு கோடிஸ்வரர்களாக இருப்பார்கள். அவர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள்.

சனி எட்டில் இருந்தவர்களுக்கு வறுமை இல்லை என்றால் வேறு எதாவது பிரச்சினையில் இருப்பார்கள். அதுவும் நிரம்தரம் கிடையாது. பொதுவான பலன்கள் அதிகம் வேலை செய்யவில்லை. 

நீங்கள் சோதிடத்தை தொழிலாக செய்தால் கொஞ்ச நாளில் இந்த கலை வந்துவிடும். ஒரு ஜாதகத்தை பார்த்து மிகச்சரியாக சொல்லும் வாக்கு பலிதம் கிடைக்கும். அது அனுபவத்தில் வருவது அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். எட்டில் சனி இருப்பது பல வழிகளிலும் நல்லது உங்களுக்கு நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விசாலமனம் தேவை


ணக்கம்!
          நாம் நிறைய சம்பாதிக்கவேண்டும் சம்பாதித்ததை ஒழுங்காக காலம் காலமாக இருக்கவேண்டும் என்றால் முதலில் கிரகங்கள் எப்படி இருந்தாலும் நமது மனம் கொஞ்சம் விசாலமாக இருக்கவேண்டும்.

விசாலம் என்றால் பரந்த மனமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன். ஒரு சிலர் கையில் பணம் இல்லாமல் இருப்பார்கள் ஆனால் நான் சம்பாதித்தவுடன் ஒருத்தருக்கும் ஒன்றும் தரகூடாது என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிக்கொண்டு இருப்பார்கள்.

குறு குறு என்று தன் மனதை மாற்றி வைத்துக்கொண்டு பெரியதற்க்கு ஆசைபடுவார்கள். மனதை விசாலப்படுத்தாமல் பெரியதற்க்கு ஆசைப்பட்டால் கிடைக்காது.

மனதை விசாலமாக வைத்துக்கொண்டு வாழ்வில் போராடுபவனுக்கு வெற்றி என்பது மிக அருகில் வந்துவிடும் என்பது நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

கிரகநிலையில் இருந்து தான் மனிதர்களின் குணம் அமைந்தாலும் தன்னுடைய பழக்க வழக்கத்தால் நாளடைவில் கொண்டு வந்துவிடலாம். கிரகத்தை மீறி நம் மனதை பழக்கப்படுத்திவிட்டால் அனைத்தையும் வெற்றிபெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இலவசம் சில விளக்கம்


ணக்கம்!
          கடந்த இரண்டு நாட்களாக சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு நேற்று இரவு தான் திரும்பினேன். திடிர் பயணமாக இருந்த காரணத்தால் முறையான அறிவிப்பை தெரிவிக்கமுடியவில்லை. 

நமது நண்பர்கள் உடனே என்னை வந்து சந்தித்துவிட்டு உடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அந்த காரணத்தால் நேற்று பதிவும் எழுதமுடியவில்லை. இனிமேல் தொடர்ந்து பார்க்கலாம்

நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவர்களால் அந்த நிலையில் இருந்து உயரமுடியும் என்பது போல தான் எழுதுவேன். இந்த இலவச சோதிட ஆலோசனை ஆரம்பித்ததில் இருந்து பலர் எனக்கு மெயிலில் அனுப்புவது சார் நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் எனக்கு ஆலோசனை தாருங்கள்  என்று கேட்டு எழுதுவார். தற்கொலை செய்ய போகிறேன் என்றால் சோதிடத்தை ஏன் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.

பொதுவாக இலவச சோதிட ஆலோசனையில் ஏதோ கஷ்டத்தில் இருந்தால் அந்த கஷ்டத்தில் இருந்து வெளிவருவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். சோதிடம் பார்ப்பதால் உடனே எதுவும் நடந்துவிடபோவதில்லை. படிப்படியான வாழ்க்கை பயணத்திற்க்கு தான் சோதிடம் உதவும். உடனே காப்பாற்றும் என்றால் அது முடியாத காரியம்

இலவச சோதிடத்தில் பலர் திருமண வாழ்க்கையை பற்றி கேட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒருவர் திருமணம் செய்ய ஆரம்பித்தால் சோதிடம் பார்ப்பதற்க்கு பணம் கூட இல்லாமலா திருமணம் செய்வார்கள்?

இலவச சோதிட சேவைக்கு வந்தால் கட்டண சோதிடம் பார்க்கும் மெயிலுக்கு மெயில் அனுப்புவது மற்றும் எனக்கு போன் செய்து பலன் கேட்பது எல்லாம் நடக்கிறது. இதனையும் தவிர்க்க பாருங்கள்.

இலவச சோதிடத்தில் மெயில் மட்டும் அனுப்பி உங்களின் கேள்வியை அனுப்புங்கள். கேள்வி பொதுவாக உங்களின் வறுமையை போக்குவதற்க்கு வழி என்னவோ அதன் அடிப்படையில் இருக்கவேண்டும். அதனைவிட்டுவிட்டு வேறு எந்த கேள்வியையும் கேட்டு அனுப்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 24, 2016

ஜாதகம் சாதகமாக


ணக்கம்!
          பல நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது சொல்லும் விசயம் எப்படியும் நான் முன்னேற்றம் அடைந்துவிடவேண்டும் சார் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்பார்கள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று தான் விரும்புகிறேன் அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு அதில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் தான் ஒரு சிக்கல் இருக்கின்றது. 

ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தால் அதில் முன்னேற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும். வருடத்திற்க்கு ஐநூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றுவதே பெரிய விசயம். இதில் எப்படி முன்னேற்றம் இருக்கும்?

உங்களை வேலை பார்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அந்த வேலையில் இருந்துக்கொண்டு பிற வேலையை தேர்ந்தெடுத்து செய்தால் லாபம் வருமா என்று பார்க்கவேண்டும். அப்படி செய்யமுடியாது என்றால் அதே வேலையில் எப்படி கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்று பார்க்கவேண்டும்.

ஒரு வேலையை பார்த்துக்கொண்டே அடுத்த வழியில் ஏதாவது சம்பாதிக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டு அந்த தொழிலை செய்யவேண்டும். இதனை எல்லாம் செய்தால் தான் ஏதாவது முன்னேற்றம் இருக்கும்.

ஜாதகத்தை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் லாட்டரியும் கிடையாது. வருமானத்தை நோக்கிக்கொண்டு அதில் இருந்து முன்னேற்றம் அடையவேண்டும் என்று கேட்டால் அதற்கு வழி கண்டிப்பாக சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 23, 2016

ஆண்கள் மட்டும் படிக்கவும்


ணக்கம்!
          ஒவ்வொருவரும் கடுமையாக கஷ்டப்பட்டு உழைக்கின்றீர்கள். நன்றாக உழைத்து சம்பாதித்து அந்த பணத்தை சேமித்து ஏதாே ஒரு நல்லவழிக்கு பயன்படுத்துகின்றீர்கள். பலர் நிலத்தில் தான் முதலீடு செய்கின்றார்கள்.

இன்றைய காலத்தில் பலர் நிலத்தில் முதலீடு செய்துவிட்டு அந்த நிலத்தை கடைசி வரை காப்பாற்றுவதில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. நிலத்தை விற்கிறார்கள் அல்லது நிலத்தை பிறரிடம் ஏதோ காரணத்திற்க்காக இழக்கின்றார்கள்.

எனக்கு தெரிந்த பலர் தன்னுடைய நிலத்தை தன் மனைவிக்கு எழுதிவைத்து ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றனர். இன்றைய உலகம் கலிகாலம் என்று சொன்னது சரியாக இருக்கின்றது. என்ன தான் மனைவி என்றாலும் அவர்களும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக தன் கணவனிடம் இருந்து பிடிங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களாக இருக்கின்றனர். எல்லாரையும் நான் சொல்லவில்லை ஒரு சிலர் இப்படி இருக்கின்றனர்.

உங்களுக்கு சொல்லுவது எல்லாம் உங்கள் மனைவி எல்லாம் எது கேட்டாலும் வாங்கிக்கொடுங்கள். அவர்களிடம் பாசமாக இருங்கள் ஆனால் ஒரு போதும் உங்களின் சொத்தை உங்களின் மனைவி பேருக்கு மாற்றி மட்டும் வைத்துவிடாதீர்கள்.

உங்களுக்கு பிறகு உங்களின் வாரிசுகளுக்கு சேருவது போல் உயில் எழுதிவையுங்கள். நீங்கள் இருக்கும்பொழுதே உங்களின் சொத்தை எழுதி வைத்தால் உங்களை விட்டு போனபிறகு அதன் பிறகு என்னிடம் வந்து புலம்புவதில் அர்த்தம் இல்லை. 

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு ஏற்படும் இழப்புகளை எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள். ஜாதகத்தை எடுத்து அலசி பார்த்தால் தெரிந்துவிடும். ஜாதகத்திற்க்கு தகுந்தார் போல் நடந்துக்கொள்ளலாம்.

சேலம் வரை சென்று இருக்கிறேன். சேலத்தில் இருப்பவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 22, 2016

பணம் கொடுக்கும் சந்திரன்


ணக்கம்!
       ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லிருக்கிறேன். அனுபவத்தில் நிறைய பார்த்த காரணத்தால் இதனை சொல்லுவது உண்டு.

சந்திரன் மட்டும் நன்றாக ஒருவருக்கு இருந்தால் அவருக்கு பணபற்றாகுறை இருக்காது என்று சொல்லுவார்கள். அதாவது அவருக்கு அடுத்தவர் பணம் கொடுத்து உதவுவார்கள்.

சந்திரன் நன்றாக இருந்தால் அவர் பிறரிடம் இருந்து கடன் கூட எளிதில் வாங்கிவிடுவார்கள். திருப்பிகொடுப்பார்களா என்று கேட்காதீர்கள் சந்திரன் நன்றாக இருக்கும் நபர்கள் கேட்டால் கிடைக்கும்.

சந்திரன் மறைவுஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் பணம் கிடைக்கும் அந்த பணம் நீண்ட நாள்கள் நிற்காது என்று சொல்லலாம். அதாவது கிடைத்த பணம் கொடுத்தவர்களே வாங்கிக்கொள்வார்கள்.

சந்திரன் வீக்காக இருக்கும் நபர்கள் எச்சரிக்கையோடு இருங்கள். நன்றாக இருக்கும் நபர்கள் கவலையை விடுங்கள் உங்களை தேடி எப்படியும் பணம் வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 21, 2016

ஜாதகம் சாதகமா


ணக்கம்!
          இன்று நல்ல சுபமுகூர்த்தநாள் அதாவது தேய்பிறையில் உள்ள முகூர்த்தநாள் இதனால் பல திருமணத்திற்க்கு சென்றுவிட்டு வந்தேன். திருமணம் சம்பந்தமாக ஒரு பதிவை தரவேண்டும் என்று இருந்தேன் அது இன்றைய நாளில் கொடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

சமீபத்தில் வெளியூர் செல்லும்பொழுது ஒரு நபரை சந்தித்தேன். அவர் ஜாலியாக என்னிடம் கேட்டார். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் திருமணம் நடைபெறும் தம்பதினர்கள் ஒழுங்காக இருக்கின்றார்களா நீங்கள் பார்க்கும் பொருத்தம் சரியான ஒன்று தான என்று கேட்டார்.

1985 ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த ஜாதகங்கள் பெரும்பாலும் அதிகபிரச்சினையை கொடுக்க கூடிய ஜாதகங்களாக தான் இருக்கின்றன. ஒவ்வொரு ஆணின் ஜாதகமும் பெண்ணின் ஜாதகமும் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிரகங்கள் செல்லும் நிலை அப்படி இருக்கின்றது. கிரகங்கள் செய்யும் வேலையில் தான் அனைத்தும் இயங்குகின்றன. அப்படி இருக்கும் பொழுது மக்களை குறைகூறுவதற்க்கு ஒன்றும் இல்லை.

ஒரு ஆண் வந்து சோதிடம் பார்த்தால் எனக்கு அமையும் மனைவி நன்றாக அதாவது எல்லாவிதத்திலும் நன்றாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எல்லாம் எதிர்பார்த்தாலும் அந்த பையன் ஒழுங்காக இருப்பதில்லை அவன் பல விசயத்தில் சறுக்கலாக இருக்கிறான்.

ஒரு பெண் வந்து சோதிடம் பார்த்தாலும் எனக்கு அமையும் பையன் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவளும் ஒழுங்காக இருப்பதில்லை. 

நான் அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து சொல்லவில்லை ஜாதகத்தின் நிலையை வைத்து சொல்லுகிறேன். ஜாதகத்தின் கிரகங்கள் நிலை அப்படி இருக்கும்பொழுது நாம் யாரை குறைச்சொல்லமுடியும்.

அதிகப்பட்சம் இருவரும் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளாமல் இருந்து குடும்பத்தை ஓட்டுவதே பெரிய விசயம் தான்.

ஒரு ஜாதகத்தை ஒரு ஜாதகத்தோடு இணைப்பதற்க்கு குறைந்தது ஆயிரம் ஜாதகத்தையாவது பார்த்து இணைக்கவேண்டும். இதனை எல்லாம் பார்பதற்க்கு இந்த காலத்தில் பொறுமை இருக்குமா இதனை எல்லாம் நாங்கள் அனுசரித்து தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

கிரகநிலை எப்படி இருந்தாலும் சரி கடவுளிடம் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அனைவரிடமும் சொல்லுவது உண்டு. கடவுள் துணை மட்டும் தான் தற்பொழுது அனைவருக்கும் தேவை என்று சொல்லிவிடுவது உண்டு.

ஜாதகத்தை முழுமையாக அலசி ஆராய்ந்து சொல்லுவது உண்டு. இதனை பார்த்து நீங்கள் வரனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அதனை தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 20, 2016

நீண்ட ஆயுளுக்கு என்ன செய்ய வேண்டும்?


வணக்கம்!
          இந்த உயிர் இருக்கும்வரை தான் இந்த உலகத்தில் உள்ளது எல்லாம். உயிர் போய்விட்டால் ஒன்றும் இல்லை. உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் நன்றாக இருந்தால் உங்களின் ஆயுள் கெட்டி என்று சொல்லிருக்கிறார்கள்.

ஆயுள்காரகன் என்று வர்ணிக்கப்படும் சனிக்கிரகம் உங்களின் ஜாதகத்தில் பலன் இல்லை என்றால் உங்களுக்கு ஆயுள் குறைவு. உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் பலன் குன்றி காணப்பட்டால் உடனே நீங்கள் பயப்படதேவையில்லை. ஆயுளை அதிகரிக்க அதற்கு என்று நீங்கள் முக்கியமாக செய்யவேண்டியது ஒன்று உள்ளது.

சனிக்கிழமை தோறும் நீங்கள் உடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளி்த்து வந்தால் உங்களின் ஆராேக்கியம் நன்றாக இருக்கும் அதோடு உங்களின் ஆயுளும் நன்றாக இருக்கும்.

இன்றைய காலத்தில் பலர் இதனை எல்லாம் மறந்துவிட்டனர் என்றே சொல்லலாம். ஜாதககதம்பம் படிக்கும் நண்பர்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிடுகிறார்கள். உங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதனை சொல்லுங்கள். 

நம்மால் ஒரு உயிர் பல வருடங்கள் வாழ வழி செய்வோம். வெள்ளிக்கிழமை தைலகுளியல் மற்றும் சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் நீங்கள் மறக்காமல் குளித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 19, 2016

சுக்கிரனின் பலனை பெறுவதற்க்கு வழி


வணக்கம்!
          குரு கிரகத்தின் நன்மையை நாம் பெறவிட்டாலும் சுக்கிரகிரகத்தின் நன்மையாவது நாம் அதிகம் பெறவேண்டும் அப்படி பெற்றால் தான் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும். இரண்டு குருவில் ஒரு குருவின் சக்தியாவது நாம் கட்டாயம் பெறவேண்டும் அப்படி பெற்றுவிட்டால் போதும் நல்லபடியாக அனைத்தையும் பெற்றுவிடலாம்.

சுக்கிரனின் காரத்துவத்தில் நம்மிடம் முதலில் இருப்பது அதாவது சுக்கிரனின் அம்சமாக இருப்பது அவர் அவர்களின் மனைவி தான். உங்களின் மனைவி சுக்கிரனின் அம்சம். பல பேர் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஆனால் உண்மை இது தான்.

சுக்கிரனின் காரத்துவத்தை நீங்கள் பெறுவதற்க்கு உங்களின் மனைவியை சந்தோஷமாக வைத்திருந்தாலே போதும் உங்களுக்கு சுக்கிரபலன் அதிகம் கிடைக்கும்.

உங்களின் மனைவி மனம் நோகாமல் இருந்தாலே போதும் உங்களின் மனைவியின் பார்வை உங்களின் மேல் தான் இருக்கும். உங்களின் மனைவியின் வழியாக சுக்கிரனின் பார்வை உங்களின் மீது படும்.

பழைய காலத்தில் எல்லாம் சும்மா இதனை சொல்லவில்லை நூறு சதவீதம் இது உண்மை என்பது போக போக நீங்களே அனுபவத்தில் உணர்ந்துக்கொள்ளமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கங்கை கொண்ட சோழபுரம்


வணக்கம்!
         புதன் கிழமை நெய்வேலி சென்று இருந்தப்பொழுது செல்லும் வழியில் கங்கை கண்ட சோழபுரம் இருப்பது தெரியவந்தது. நெய்வேலியில் தனக்காக காத்துகொண்டிருப்பவரை முதலில் பார்த்துவிட்டு வரும்பொழுது இதனை பார்த்துவிடலாம் என்று நேராக நெய்வேலி சென்றேன். நெய்வேலி முடித்துவிட்டு கங்கை கொண்ட சோழபுரம் வரும்பொழுது ஒருமணியாகிவிட்டது கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது. கோவிலை வெளியில் இருந்து தான் பார்க்க நேரிட்டது. முடிந்தவரை வெளியில் இருந்து என்ன பார்க்கமுடியுமோ அதனை எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன்.

என்னை பொறுத்தவரை பழங்கால கோவில்களை எல்லாம் பார்த்து அதனை ரசிப்பவன் என்று சொல்லலாம் அந்தளவுக்கு எனக்கு அதில் ஈடுபாடு உண்டு. பள்ளிகாலத்தில் கூட மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோவிலுக்கு செல்லும்பொழுது எல்லாம் அந்த கோவிலை பார்த்து ரசிப்பது உண்டு. கட்டடகலை மற்றும் அதில் உள்ள சிற்பவேலைபாடு இதனை எல்லாம் பார்த்து ரசித்து இருக்கிறேன்.

ஜெயங்கொண்டத்தில் அருகில் கங்கைக்கொண்ட சோழபுரம் இருக்கின்றது. ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் வரும்பொழுது இந்த கோபுரம் தெரிய ஆரம்பிக்கிறது. ஜெயங்கொண்டத்தில் இருந்து செல்லும்பொழுது பெரிய அளவில் ஏரி போல் ஒன்று காட்சி அளிக்கிறது. இதனை தான் சோழகால படைகளில் உள்ள குதிரைகளுக்கும் யானைக்களுக்கு தண்ணீர் சேர்த்து வைத்திருந்தார்கள் என்று சொல்லுகின்றனர். ஜெயங்கொண்டத்திற்க்கு நான் பலமுறை பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறேன். இந்தமுறை காரில் செல்லும்பொழுது அனைத்தையும் நிறுத்தி பார்த்துவிட்டு சென்றேன்.

நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்க்கு சென்று படை எடுத்து அந்த நாட்டை பிடித்த மன்னன் இராசேந்திரசோழன் என்று படித்த காரணத்தால் அந்த மன்னிடம் ஏதோ ஒரு விஷேச குணம் ஒன்று இருக்கின்றது என்ற காரணத்தால் இந்த கோவிலை நிறுத்தி பார்க்கவேண்டும் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது.

இந்த காலத்தில் இவ்வளவு நவீன வசதி இருக்கும்பொழுது அந்த காலத்தில் எந்த வசதியும் இல்லாமல் கடல் கடந்து நாட்டை பிடிக்கின்றார்கள் என்றால் அதனைப்பற்றி நாம் பேசியே ஆகவேண்டும் அல்லவா. அதனால் தான் சொன்னேன்.

இராஜராஜ சோழன் இருக்கும்பொழுதே இராசேந்திர சோழனுக்கு முடிசூட்டப்பட்டு ஆட்சி நடத்தினார்கள் என்று படித்து இருக்கிறேன். பல வருடங்கள் கங்கை கொண்ட சோழபுரம் சோழகர்களின் தலைநகராக விளங்கியது. (வரலாற்றை தேடித்தான் படிக்கவேண்டும்).

இந்த கோவில் முழுமையாக முடிக்கபெறாத கோவில் என்று தான் அனைவரும் சொல்லுகின்றனர். உண்மையில் தஞ்சாவூர் பகுதியில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்கள் அனைத்தும் கற்களால் கட்டப்பெற்ற கோவில். இங்கு மலைகள் இல்லை ஆனால் கல்லால் அனைத்தையும் கட்டியுள்ளனர். அனைத்து கோவில்களும் முழுமையாக முடிக்கப்பட்டு தான் கோவில்இருக்கின்றது. இந்த கோவிலையும் முழுமையாக தான் கட்டி இருப்பார்கள்.

இராசேந்திர சோழனுக்கு பிறகு 250 வருடங்கள் இங்கு சோழர் ஆட்சி நடந்துள்ளது. கண்டிப்பாக சோழர்கள் கோவிலை கட்டாமல் விட்டு வைத்திருக்கமாட்டார்கள். இந்தியா முழுவதும் படை எடுத்த ஒரு மன்னன் இந்தியாவை விட பெரும் பகுதியை ஆண்ட ஒரு மன்னன் கோவிலை கட்டினால் பாதியில் விடுவான என்ற ஒரு சந்தேகம் எனக்குள்ளும் இருக்கின்றது. காலத்தில் ஏற்பட்ட பல மாற்றம் இந்த கோவிலுக்கும் ஏற்பட்டு இருக்கலாம்.

இந்த கோவிலும் சிவன் கோவில் தான். உள்ளே சென்று பார்க்க ஏதோ ஒரு தடை நமக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதாவது நமது கர்மா முழுமையான ஒரு பார்வையை பார்க்க விடவில்லை. அடுத்து ஒரு வாய்ப்பை எனக்கு தரும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு தகவலை நான் சொல்லவேண்டும் அல்லவா. இந்தியா முழுமையாக வென்ற மன்னன் இந்தியாவை விட்டு பல நாடுகளுக்கு சென்று அங்கும் தன் ஆட்சியை நிலைநிறுத்திய மன்னன் கட்டிய கோவிலை பார்க்கும்பொழுது நாம் நாட்டை பிடிக்கவேண்டாம் நமது வீட்டை திறம்பட நடத்த ஒரு ஆவல் ஏற்படும் அல்லவா. அந்த காரணத்தால் தான் இப்படிப்பட்ட விசயங்களை நீங்கள் தேடி செல்லலாம்.

ஒரு மன்னன் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று ஆட்சி பிடித்த மன்னனின் மனதிடத்தை நாம் வரவழைத்தால் நமது வாழ்க்கையில் வரும் இடையூறுகளை எல்லாம் நாம் சமாளித்து நமது வாழ்க்கை ஒரு வெற்றி வாழ்க்கையாக மாற்றமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 18, 2016

குரு


ணக்கம்!
          நமக்கு குரு கிரகம் நன்றாக இருந்தால் பிறரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது. இன்று உலகமே ஒரு எதிர்பார்ப்போடு தானே சென்று கொண்டு இருக்கின்றது. நல்லது செய்தால் கொண்டாடுவோம் நல்லது செய்யாமல் இருந்தால் நமக்கு அடுத்தவரை பிடிக்காது.

ஒருவர்க்கு குரு கிரகம் நன்றாக இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்றால் நம்மை எதிர்த்தால் கூட அவர்கள் நன்றாக வாழவேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு போவோம். 

உங்களுடைய ஜாதகத்தில் குரு எப்படி இருந்தாலும் சரி இப்படிப்பட்ட மனநிலை உங்களுக்கு இருக்கின்றதா என்று பாருங்கள் அப்படி இருந்தால் குரு கிரகத்தின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்கு இருக்கின்றது என்று அர்த்தம்.

உங்களுக்கு குரு கிரகத்தின் நல்ல சக்தி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பிற மனிதர்களை மதிக்கும் குணத்தை ஏற்படுத்திவிட்டால் போதும் உங்களுக்கு கொஞ்ச நாளில் குரு கிரகத்தின் சக்தி கிடைத்துவிடும்.

தீமை செய்பவரையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் என்பது அவ்வளவு எளிதில் எல்லாம் கிடைத்துவிடாது. பழக்கபட்டு அல்லது அடிப்பட்டு உலகத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடைக்கும் அந்த நிலை வந்துவிட்டால் குரு கிரகம் நன்றாக வேலை செய்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியது தான். அதன் பிறகு நீங்கள் தொட்டது துலங்கும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 17, 2016

புதன்


ணக்கம்!
          புதன் என்ற ஒரு கிரகம் மட்டும் ஒருவருக்கு நன்றாக இருந்தால் போதும் ஒரளவு அவர்களை அனைத்தையும் புரிந்துக்கொண்டு வாழ்வதற்க்கு கற்றுக்கொள்வார்கள். என்ன கற்றுக்கொள்வார்கள் என்றால் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவிடுவார்கள்.

புதன் என்ற ஒரு கிரகம் பெரும்பாலும் சோதிடர்களுக்கு மற்றும் உங்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு காரணம் இப்படிப்பட்ட விசயத்தை படிக்கவேண்டும் என்றால் புதன் தேவைப்படுவார்.

பெரும்பாலும் நம்மிடம் சோதிடம் பார்ப்பவர்களுக்கு அனைவருக்கும் புதன் கிரகம் நன்றாக இருக்கும். நீங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள். முன்னேற்றம் அடையவில்லை என்றாலும் பரவாயில்லை கொஞ்ச நாளில் வாழ்க்கையில் சைன் ஆகிவிடலாம். அதற்குள் உங்களுக்கு புதன் கிரகம் நன்றாக வேலை செய்துவிடும்.

புதன் கிரகம் அதிகப்பட்சம் சூரியனோடு இருக்கும் அப்படி இருப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான். கொஞ்சம் அதிக அறிவை கொடுக்கும். நுட்பமான அறிவை கொடுக்கும். 

நமக்கு அறிவு குறைவாக இருந்தால் நாம் செய்யவேண்டியது உங்களின் குலதெய்வத்திற்க்கு புதன் கிரகத்திற்க்கு அன்று வழிபாட்டை மேற்க்கொள்ளவேண்டும்.

இன்று நெய்வேலி செல்கிறேன். நெய்வேலியில் இன்று சந்திக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 16, 2016

செவ்வாய் பலன் & பரிகாரம்


ணக்கம்!
          செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகத்தில் நன்றாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் வாழ்க்கையில் அனைத்திலும் தைரியமாக எதிர்க்கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவார்கள்.

பெரிய அளவில் சம்பாதிப்பவர்கள் மற்றும் பெரிய தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் செவ்வாய் காரகன் ஜாதகத்தில் சாதகமான ஒரு நிலையில் இருப்பார். செவ்வாய்காரகன் நன்றாக இருந்தால் தைரியம் என்பது நிறைய கிடைக்கும். அந்த தைரியத்தை வைத்தே சாதிக்கமுடியும்.

பொதுவாக அனைவருக்கும் செவ்வாய்கிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் பலமுறை சொல்லிருக்கிறேன். செவ்வாய்கிரகம் நன்றாக இருக்கும்பொழுது தான் ஒருவருக்கு வாரிசு என்பது உருவாகும். 

தமிழ்நாட்டில் அனைவரும் பழனி முருகன் கோவில் சென்று வருடம் ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். அதுபோல நீங்களும் ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஒரு சிலருக்கு செவ்வாய் கிரகம் நீசமாக இருக்கும். அதாவது கடகத்தில் இருக்கும்.  நீசமாக இருக்கின்றது என்று நீங்கள் கவலைபடதேவையில்லை செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து வந்தால் நல்லது.

கடகராசியில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு அமையும் நிலம் பெரும்பாலும் தண்ணீர் சம்பந்தப்பட்ட பகுதியில் அமையும். ஏன் வீடு கூட அப்படி தான் அமையும். 

செவ்வாய்காரகன் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. செவ்வாய் கிரகம் உங்களுக்கு நல்லது செய்யவேண்டுமானால் கட்டடம் கட்டுவதற்க்கு உங்களின் பங்களிப்பு இருந்தால் நன்றாக இருக்கும். 

கோவில் மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட இடத்திற்க்கு கட்டடம் கட்டுவதற்க்கு தேவையான பொருட்களை அல்லது பணமாக நீங்கள் கொடுத்தால் போதும் உங்களுக்கு செவ்வாய் கிரகம் நல்லதை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 15, 2016

எட்டில் சந்திரன் திருமணவாழ்க்கை கேள்விகுறி


ணக்கம்!
          சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லுவது உண்டு. அதற்கு காரணம் நிறைய அனுபவங்களாக இதனை நான் பார்த்து இருக்கிறேன்.

சந்திரன் நன்றாக இல்லை என்றால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட ஜாதகர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது. நம்முடைய சோதிடத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் வேலை செய்வதற்க்கு சந்திரன் ஒரு காரணமாக இருக்கிறார். சந்திரன் வழியாக தான் அதிகப்பட்ச பலன்கள் எல்லாம் நடக்கும்.

சந்திரன் ஒருவருடை ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களில் இருக்ககூடாது. அதிலும் சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் வாழ்க்கைஅவ்வளவு தான். திருமண வாழ்க்கையில் பல அடிகளை சம்பந்தப்பட்ட ஜாதகர் வாங்குவார்.

சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பு பரிகாரம் என்ற ஒன்று இருக்கின்றது. அது பூஜை வழியாக தான் செய்யமுடியும். இதுவரை நீங்கள் சந்திரனுக்கு பரிகாரம் செய்து அது பயன் தரவில்லை என்றால் இதற்கு என்று நீங்கள் என்னை அணுகி பரிகாரம் செய்துக்கொள்ளலாம். குறிப்பாக இந்த மாதிரியான அமைப்பு இருக்கின்றவர்கள் மட்டும் அதனை செய்துக்கொள்ளலாம்.

எட்டாவது வீடு திருமணம் என்பதை காட்டுவதால் பரிகாரம் செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வது உண்டு. கொஞ்ச பணம் அதிகம் இந்த பரிகாரத்திற்க்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதனை செய்துக்கொள்ளலாம்.

சந்திரன் எட்டில் இருந்து வாழ்க்கை நன்றாக இருக்கின்றது என்றால் அதற்கு என்று நீங்கள் பரிகாரம் செய்யதேவையில்லை. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இதனை செய்துக்கொள்ளுங்கள்.

விரைவில் நெய்வேலியில் என்னை சந்திக்கலாம்,

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 14, 2016

பிராத்தனை


ணக்கம்!
           ஒரு பதிவு எழுதவேண்டும் என்றாலும் அந்த பதிவு சம்பந்தமாக ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துள்ளதா என்று பார்த்து தான் பதிவை எழுதவே நான் ஆரம்பிப்பேன். முற்றிலும் தன்னுடைய அனுபவத்திற்க்கு வந்து அதனை எழுதினால் உங்களுக்கும் அது பயன்படும் என்பதால் அப்படி எழுதுவது உண்டு. 

உலகத்தில் உள்ளவர்களுக்காக பிராத்தனை செய்வது நல்லதா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். சரி அதனையே சொல்லிவிடலாம் என்று எழுதினேன். அதாவது உலகத்திற்க்காக நாம் உதவி வேண்டுமானால் செய்யலாம் பிராத்தனை செய்யகூடாது.

ஒவ்வொரு வேலையையும் இவன் தான் செய்யவேண்டும் என்று ஒரு விதி இருக்கின்றது. மரவேலை செய்பவன் மரவேலையை தான் செய்யவேண்டும். மண் வேலை செய்பவன் மண் வேலையை தான் செய்யவேண்டும் இது மாறி வேலை செய்தால் வேலை குழப்பம் ஏற்பட்டுவிடும்.

ஆன்மீகவாதிகள் வேண்டுமானால் பிறர்க்காகவும் உலக மக்களுக்காகவும் பிராத்தனை செய்யலாம். ஒரு குடும்பத்தில் இருப்பவர் அடுத்தவர்களுக்கு பிராத்தனை செய்தால் அவனின் குடும்பம் கெட்டுவிடும்.

நீங்கள் வேண்டுமானால் பிறர்க்காக பிராத்தனை செய்து பாருங்கள் உங்களுக்கு அடுக்கடுக்காக பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சைன் ஆக முடியாது. உங்களுக்காக மட்டும் பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 13, 2016

அம்மன் ஹோமம்


ணக்கம்!
          நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை நான் ஹோமம் செய்யும்பொழுது அம்மன் பல தோற்றங்களை கொடுத்தது. அதனை ஆன்மீக அனுபவங்கள் படிக்கும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துக்கொண்டேன். 

அம்மன் ஹோமம் செய்ய பல நண்பர்கள் என்னை அணுகுவார்கள். அவர் அவர்களின் இல்லத்திற்க்கு அல்லது என்னுடைய வீட்டிலேயே இதனை செய்துக்கொடுப்பது உண்டு. 

அம்மனை வைத்து செய்யப்படுகின்ற ஹோமம் என்பது மிகசிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் வாழ்வில் இதனை செய்ய சொல்லுவேன் அதற்கு காரணம் அதன் வழியாக பல மாற்றங்களை உங்களின் வாழ்வில் பெறமுடியும். 

கொஞ்ச கொஞ்சமாக வாழ்வில் பல மாற்றங்களை உங்களின் வாழ்வில் அனுபவபூர்வமாக உணரலாம். ஒவ்வொரு முன்னேற்றம் அடைந்தவர்களின் வாழ்விலும் இப்படிப்பட்ட பூஜைகள் இருக்கின்றன.

இன்றைக்கு பல இலவச சேவைகளை வழங்குவதற்க்கு பல பணக்காரர்கள் எனக்கு உதவுகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வில் எல்லாம் இப்படிப்பட்ட ஹோமம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மையான ஒரு நிகழ்வு.

என்னிடம் சோதிடம் பார்க்கும் நண்பர்கள் அனைவரும் நான் சொல்லும் பலன் உங்களுக்கு நடந்தால் அதன் பிறகு இப்படிப்பட்ட ஹோமம் வேண்டும் என்பதை நீங்கள் கேட்டு என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
                       அம்மனை அலங்காரம் செய்தவர் இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். நேற்று ஆடிவெள்ளி என்பதால் பூக்களின் விலை அதிகமாக இருந்தது நேற்றே பல நண்பர்கள் செய்யவேண்டும் என்று சொன்னதால் முடிந்தளவு செய்து இருக்கிறோம்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 12, 2016

நடுநிலை கிரக பலன்


ணக்கம்!
          வீடுதேடி வரும் அங்காடியை அதட்டகூடாது பிச்சைக்காரன் கால் பின்பக்கம் போககூடாது என்று பழமொழி சொல்லுவார்கள். அதாவது வீடு தேடி வந்து விற்பனை செய்யும் நபர்களை அதட்டி வீண் வம்பு இழுக்ககூடாது. உங்களின் வீட்டுக்கு வந்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனை பார்த்து என்னிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடகூடாது அதாவது இல்லை என்று பின்காலை அவர் வைத்துவிடகூடாது என்பார்கள். இது இரண்டும் கடைபிடித்து வந்தால் அவர்கள் நல்லமுறையில் வாழ்வார்கள்.

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எப்படி வேலை செய்யவேண்டும் என்றால் சமதளத்தில் இருந்து வேலை செய்வது போல் இருக்கவேண்டும். சமதளம் என்றால் நன்மையும் இல்லாமல் தீமையும் இல்லாமல் நடுவில் இருந்து இரண்டையும் கொடுத்துக்கொண்டு இருந்தால் நல்லது. பெரிய அளவில் தீமையை கொடுத்தாலும் பிரச்சினை.பெரிய அளவில் நன்மை செய்தாலும் பிரச்சினை.

சமஅளவில் கொடுக்கும்பொழுது உங்களுக்கு எளிதில் அனைத்தும் புரிந்துவிடும். ஒருவன் இரண்டையும் பார்த்துவிட்டால் அவன் ஞானி போல் செயல்பட்டு ஒவ்வொரு நிகழ்வையும் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுவான்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு கிரகம் தான் இப்படி சமஅளவில் வேலை செய்யும். அந்த கிரகத்தின் காரத்துவம் உடைய வேலையில் மட்டும் ஜாதகன் பொதுவாக வேலை செய்யவான் நிதானம் இருக்கும்.

ஒரு சிலருக்கு புதன் கிரகம் சமஅளவில் இருக்கும். அவர்களை பார்த்தால் புத்தி சரியாக வேலை செய்து சமஅளவில் அனைத்தையும் செய்வார்கள். புத்தியை வைத்து பல நல்ல விசயத்தை செய்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவால் அடுத்தவர்களுக்கு எந்தவித பிரச்சினை ஏற்பாடாது. 

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் ஒரு சில விசயத்தில் நடுநிலையில் இருந்து செய்யும்பொழுது அனைத்தும் நன்மையாக முடியும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

ஒரு சிலருக்கு சனிக்கிரகம் தீமை செய்வதாக இருக்கும் அவர்களால் அடுத்தவர்களுக்கு அதாவது குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு வீண்பழி விழுவது போல் ஆகிவிடும். அந்த நபரால் குடும்பத்தில் உள்ளவர்கள் அவமானம் படகூடும். 

இதனை நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் ஒரு காரியத்தில் நீங்கள் நடுநிலையில் இருந்தீர்கள் என்றால் எப்படி இருக்கும் என்பதை கிரகத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். கண்டிப்பாக இதனை புரிந்துக்கொள்ளலாம்.

இன்று அம்மன் பூஜை. அம்மன் பூஜை என்பதால் நன்றாக அம்மனிடம் பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 11, 2016

கிரகத்தின் நல்ல சக்தி


ணக்கம்!
          ஒன்பது கிரகமும் பூமியில் தன்னுடைய சக்தியை கலந்து கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அப்படி கலந்துக்கொடுத்துக்கொண்டிருக்கும் சக்தி பிறக்கும்பொழுது எப்படி இருந்தது அதன்படி தான் அவர்களின் தலை எழுத்து அமைகிறது.

நமக்கு ஏதோ ஒன்று தேவைப்பட்டால் எப்படியாவது யாரையாவது பிடித்து நாம் அதனை பெற விளைகிறோம் அல்லவா அதுபோல தான் நமக்கு தேவைப்படுகின்ற கிரகத்தின் சக்தியையும் நாம் எப்படியும் பெற்றுவிடவேண்டும்

எப்படி நமக்கு ஒரு தெய்வத்தின் அனுக்கிரகம் தேவைப்பட்டால் அதன் கோவிலுக்கு சென்று வழிபட்டு எடுக்கிறோம் அதுப்போல் நமக்கு நல்ல கிரகத்தின் சக்தி தேவைப்பட்டால் அதனையும் நாம் பெறமுடியும்.

ஒவ்வொரு கிரகத்தின் சக்தி இந்த இடத்தில் அதிகம் இருக்கின்றது என்று தான் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் தனி தனி கோவில் அமைத்து இருக்கின்றனர். அந்த கோவிலுக்கு சென்று நாமும் வழிபட்டு வருகிறோம்.

.ஒரு கிரகத்திற்க்கு இரண்டு பக்கமும் இருக்கின்றது. நல்லது கெட்டது என்று இரண்டு பக்கம் இருக்கின்றது. தீய பக்கம் என்ற சொல்லக்ககூடிய சக்தி அதிகளவு வரும்பொழுது அந்த கிரகத்தால் நாம் கஷ்டப்படுகின்றோம். உண்மையில் அந்த கிரகத்தின் நல்ல சக்தியை தான் நாம் பெறவேண்டும்.

ஒரு கிரகத்தின் நல்ல சக்தியை பெறுவதற்க்கு என்ன வழி எல்லாம் இருக்கின்றதோ அந்த வழியை நாம் பின்பற்றலாம். அதோடு ஒவ்வொரு கிரகத்திற்க்கும் என்று இந்த மாதிரியான உணவு வகை என்று இருக்கும் அதனை சாப்பிட்டும் நமது உடலில் அந்த சக்தியை பெறலாம்.

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் என்று தனித்தனி பூஜை செய்து அந்த கிரகத்தின் நன்மையை எடுக்கலாம். முதலில் நாம் எந்த கிரகத்தின் சக்தியை பெறவிளைகிறோம் என்பதை முதலில் தீர்மானித்துவிடவேண்டும். ஜாதகத்தை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்க்கும்பொழுது தான் இது எல்லாம் தெரியவரும். உங்களின் ஜாதகத்தை எடுத்து கிரகம் எப்படி இருக்கின்றது என்று பார்த்து அதற்கு செய்யுங்கள். நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 10, 2016

அம்மன் பூஜை

ணக்கம்!
          அம்மன் பூஜை வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். ஆடி வெள்ளி என்பதால் அந்த நாளை தேர்வு செய்து வைத்தேன். ஆடி வெள்ளி அன்று பூ விலை அதிகம் என்பதால் இந்த நாளை தேர்வு செய்யலாமா அல்லது வேறு ஒரு நாளில் வைக்கலாமா என்று சிந்தனை செய்துக்கொண்டு இருந்தேன்.

அம்மன் அருளால் வாடிக்கையாக பூ கட்டும் நபர் ஒத்துக்கொண்டார். கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் அன்று தருகிறேன் என்று சொன்னது பெரிய விசயம். ஒரு வழியாக அன்றைய நாள் முடிவாகிவிட்டது.

அம்மன் பூஜைக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவர்கள் அத்தனை பேரும் அனுப்பிவிட்டனர். எனது வேண்டுகோளை ஏற்று புதிய நண்பர்களும் அனுப்பி இருக்கின்றீர்கள் அதற்கு நன்றி மற்றும் அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவரும் பங்குக்கொள்ளவேண்டும் என்று கேட்டுருந்தேன் கொஞ்சம் பேர் தான் பங்குக்கொண்டு இருக்கின்றீர்கள். நிறைய பேர்களின் பொருளாதார நிலை கொஞ்சம் கடினம் என்று நினைக்கிறேன்.

உங்களின் பொருளாதாரத்தை உயர்த்த பல வழிகளை ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். என்னை ஒரு முறை சந்தித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 9, 2016

ஆடி மாதம்

ணக்கம்!
          இந்த வருடம் ஆடி மாதம் முழுவதும் நிறைய ஹோமங்கள் அம்மனுக்கு செய்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த புண்ணியத்திற்க்கு எல்லாம் நமது நண்பர்கள் தான் காரணம் அவர்கள் கொடுத்த பணத்தில் இதனை எல்லாம் செய்யமுடிந்தது.

அம்மன் ஹோமத்தை செய்ய பல நண்பர்கள் ஆர்வம் காட்டினார்கள் ஆனால் அவர்களின் பொருளாதார நிலை தடை செய்தது என்று சொல்லலாம். அவர்களின் கர்மா அப்படி வேலை செய்கிறது என்று விட்டுவிடலாம். 

ஆடி மாதம் ஒவ்வொரு குலதெய்வம் மற்றும் வீட்டுதெய்வத்திற்க்கும் படையல் போடுவார்கள். இது எல்லா ஊர்களிலும் நல்ல விஷேசமாக நடக்கும். இதுவரை ஆடி படையல் உங்களின் வீட்டில் செய்யாமல் இருந்தால் உடனே அதனை செய்துவிடுங்கள். ஆடி படையல் என்பது வெள்ளிக்கிழமை தான் செய்யவேண்டும் என்பது கிடையாது ஆடி மாதத்தில் எந்த நாளிலும் செய்யலாம்.

ஆடி மாதம் அம்மன் பூஜையில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் எனக்கு தெரிந்த நண்பர்கள் தான் இந்த தளத்தில் அதிக நண்பர்கள் படிக்கிறார்கள் என்பது தெரியும் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக பணம் நம்மிடம் இருக்கும்பொழுது தான் ஆன்மீக காரியங்கள் அதிகம் செய்து நாம் பெரிய செல்வந்தர் ஆகலாம். உங்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டு அதிபதி யார் என்று பாருங்கள். அவருக்கு அல்லது அவர் செல்லும் நட்சத்திரத்திற்க்கு நீங்கள் ஒரு பரிகாரம் செய்யலாம். சரி பரிகாரம் எல்லாம் செய்யவேண்டாம் என்றால் அந்த நாளில் அவருக்கு ஒரு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வாருங்கள்.

பொதுவாக செல்வவளத்திற்க்கு நீங்கள் லட்சுமி பூஜை அல்லது ஏதோ ஒரு பொதுவான பரிகாரத்தை தான் இதுவரை செய்து வந்திருப்பீர்கள். உங்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு செய்து இருக்கமாட்டீர்கள் அதனால் உங்களின் ஜாதகத்தை எடுத்து அதற்கு செய்யுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பணம் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 8, 2016

குழந்தையும் தெய்வமும்


வணக்கம்!
          குழந்தையும் தெய்வமும் கொண்டாடினால் தான் உண்டு. கொண்டாடவில்லை என்றால் அது நம்மை கவனிக்காமல் சென்றுவிடும். ஒரு குழந்தையை நீங்கள் கொஞ்சினால் தான் அந்த குழந்தை உங்களை பார்த்து சிரிக்கும் உங்களோடு அன்போடு இருக்கும். 

குழந்தையிடம் அன்பை காட்டவில்லை என்றால் குழந்தை உங்களை கண்டுக்கொள்ளவே மாட்டாது அதுபோல தெய்வமும் அப்படிப்பட்டது தான். நீங்கள் வணங்கும் தெய்வத்தை நீங்கள் கும்பிடவில்லை என்றால் அது உங்களை கண்டுக்கொள்ளவே கண்டுக்கொள்ளாது.

தெய்வமும் குழந்தையும் ஒன்று. தெய்வத்தை எந்தளவுக்கு கொண்டாடுகிறோமோ அந்தளவுக்கு நம்மிடம் பிரியமாக இருக்கும். தெய்வத்தை நாம் கண்டுக்கொள்ளவில்லை என்றால் அது சென்றுவிடும்.

நான் நிறைய பூஜை என்று அடிக்கடி சொல்லுவது கூட இந்த மாதிரி தான் நாம் எந்தளவுக்கு அந்த தெய்வத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு தெய்வம் நமக்கு நல்லதை செய்யும் என்பதற்க்கு தான் இந்தளவுக்கு பூஜைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

நீங்களும் எதனையும் கொண்டாடினால் தான் தெய்வம் உங்களிடம் பிரியம் காட்டும் என்பதை புரிந்துக்கொண்டு அதன் படி நீங்கள் நடந்துக்கொள்ளுங்கள். நல்ல வாழ்க்கையை உங்கள் தெய்வம் உங்களுக்கு கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நுண்ணறிவு சொல்லும் பலன்


வணக்கம்!
          சோதிடம் என்பது நம்மை சுற்றி நடக்கும் ஒரு சில விசயத்தையும் செய்து பலனை சொல்லும்பொழுது அது கண்டிப்பாக நன்றாக பலிக்கும். அதாவது கொஞ்சம் பிரசன்னம் பார்த்தும் சொல்லும்பொழுது கண்டிப்பாக நாம் சொல்லுகின்ற பலன் கண்டிப்பாக நடந்துவிடும்.

கிராமபுறங்களில் இருந்து சொல்லுகின்ற பலனுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் எனது நம்பிக்கை. நகர்புறத்தில் இருந்து சொல்லுவதை விட இது அதிகம் பலிக்கும். இயற்கையான ஒரு விசயத்தை இயற்கையோடு இருந்து சொல்லும்பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

கிராமபுறங்களில் விடியற்காலை எழுவதற்க்கு கோழியை பயன்படுத்திக்கொள்வார்கள். ஒரு வித சேவல் இரவு இரண்டரை மணிக்கு கூவும். இதனை பயன்படுத்தி வெளியூரில் ஏதாவது ஒரு வேலை இருந்தால் அதுவும் தொலைவுதூர வேலை இருந்தால் இந்த நேரத்தில் கிளம்பி செல்வார்கள். இதனை சாமகோழி என்பார்கள். சாமகோழி கூவும்பொழுது எழுந்து சென்றேன் என்பார்கள்.

தலைசேவல் என்ற ஒன்று இருக்கின்றது. விடியற்காலை சரியாக மூன்று மணிக்கு கூவும். அதன் பிறகு நான்கு மணிக்கு சரியாக கூவும். அதன் பிறகு ஐந்து மணிக்கு அதிகமாக கூவ ஆரம்பித்துவிடும். இதனை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு அந்த காலத்தில் மணியை கண்டுபிடித்து சென்று இருக்கின்றார்கள்.

மணிக்கு கூட இயற்கையை பயன்படுத்திக்கொண்டு எழுந்து வேலை செய்து இருக்கின்றார்கள். தற்பொழுது கையில் செல்போனை வைத்து அதில் மணியை வைத்தாலும் எழுந்திருப்பது கிடையாது. தற்பொழுதும் சேவல் இப்படி தான் கூவிக்கொண்டு இருக்கின்றது. அதனை எல்லாம் கவனிப்பது கிடையாது.

எங்களின் வீட்டில் சேவல் இருக்கின்றது. அது சரியாக கூவும் அப்பொழுது செல்போனை மணியை பார்த்தால் நான் சொன்ன மணிக்கு கூவும். சேவலை அடைக்கும் கூடையில் அல்லது அதற்குள்ள கூண்டை பார்த்தால் நான் இதில் இருந்து ஒன்றை கண்டுக்கொள்ளலாம். இதற்க்கு எப்படி மணியை தெரிவிக்க இறைவன் வைத்தான் என்பது புரியும்.

சேவலுக்கு உள்ள மூக்கு தூங்கும்பொழுது கூட அது தரையில் வைத்து தான் தூங்கும். மூக்கு தரையில் வைத்து தூங்கிக்கொண்டு இருக்கும். பூமி இயங்கும் சக்தி அதற்க்கு தெரியும். பூமியின் வழியாக தான் அதற்க்கு மணி தெரிகிறது. 

நான் பூமியில் இருந்தாலும் பூமி சொல்லும் பாடத்தை எல்லாம் விலகி பல தூரம் சென்றுவிட்டோம். அதனால் தான் நமக்கு இதனைப்பற்றி எல்லாம் அறிவு இல்லாமல் சென்றுவிட்டது. என்னை சந்திக்க வரும் நபர்கள் அல்லது நான் செல்லும் இடங்களில் அதாவது வீடுகளில் உள்ள பூமியின் நான் நிற்க்கும்பொழுது எனக்கு பல விசங்கள் வந்தவரைப்பற்றி தெரியும். பூமியை நோக்கி வீசம் கிரகத்தின் தாக்கத்தை நம்மை சந்திக்கும் வரும் நபர்களை பார்க்கும்பொழுது பூமி நமக்கு தெரிவித்துவிடும். 

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் மட்டும் பலன் கூட இதனை அறிந்தும் நாம் பலன் சொன்னால் சரியாக இருக்கும். நம்மை தேடி வரும் நபர்களுக்கு நல்லதை செய்யமுடியும். இது எல்லாம் பையித்தியம் போல் தோன்றாலும் முதலில் சேவல் கூவதை பாருங்கள் அதன் பிறகு பூமியின் இயக்கத்தை நாம் கவனிக்கும்பொழுது நுண்ணறிவு என்ன என்பது தெரியவரும்.

ஆடி மாத அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தாதவர்கள் செலுத்தி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 7, 2016

அனுபவம்


ணக்கம்!
          கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனை வாசம் ஆகிவிட்டது. அதனை முடித்து நேற்று மாலை வந்தால் கடுமையான ஜலதோஷம் வந்தது அதனால் பதிவை தரமுடியவில்லை. ஆன்மீக அனுபவகளிலும் பதிவை தரமுடியவில்லை தொடர்ந்து பதிவை எப்படியும் கொடுத்துவிடுவேன் இந்த சூழ்நிலையால் பதிவை தரமுடியவில்லை. சோதிடபலன் கூட சொல்லமுடியவில்லை நாளையில் இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். 

நோயை காட்டும் ஆறாவது இடத்திற்க்கும் மருத்துவமனையை காட்டும்  பனிரெண்டாவது வீட்டிற்க்கும் எப்படியும் தகுந்த மாற்று ஏற்பாடு செய்துவிடுவேன். கொஞ்ச சொந்த வேலை அதிகம் இருந்த காரணத்தால் இதனை செய்யாமல் விட்டுவிட்டேன். மாதம் தோறும் இதற்கு என்று ஒரு ஏற்பாடு இருக்கும் ஆனால் இதனை விட்டுவிட்டதால் கொஞ்ச செலவு அதிகமாக போய்விட்டது. 

ஆறாவது வீடாக நோயை காட்டுவதால் அந்த இடத்திற்க்கு ஒரு கடுமையான தெய்வத்திற்க்கு அதாவது கோரமாக இருக்கும் தெய்வத்திற்க்கு ஒரு பூஜை அல்லது அந்த பூஜையை செய்ய காணிக்கையை அனுப்பிவிடுவேன்.

பனிரெண்டாவது வீட்டிற்க்கு என்று மருத்துவமனையில் இருக்கும் நபர்களுக்கு ஏதாவது பண உதவி செய்வது உண்டு இதனை விட்டதால் மடக்கி போட்டு படுத்தி எடுத்துவிட்டது. 

நடக்கும் ஒவ்வொரு அனுபவத்திலும் பாடம் கற்கிறோம். மருத்துவமனையில் இருந்த பொழுது அவசரமாக வந்த நோயாளிக்கு அதுவும் குழந்தை நோயாளிக்கு நம்மால் முடிந்த பிராத்தனையை செய்ய முடிந்தது. அதோடு பல பேருக்கு தன்னால் முடிந்த பணஉதவியை செய்ய முடிந்தது. 

நடப்பது நல்லதற்க்கே என்று விட்டுவிட்டு இனி தொடர்ந்து பதிவை தருவதற்க்கு அம்மனை பிராத்திக்கிறேன். வரும் புதன்கிழமை அம்மன் பூஜை வைக்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். உடல்நிலை சரியாவிட்டால் உறுதியாகி அறிவிப்பை வெளியிடுகிறேன்.

மருத்துவமனையில் இருந்தபொழுது அவசர உதவிக்கு என்று மதுரையை சேர்ந்த நண்பர் காேபி அவர்கள் உதவி செய்தார். அவர்க்கு தான் அனைத்து புண்ணியமும் சேரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 5, 2016

செல்வத்தை தரும் சுக்கிரன்


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை என்றாலே அது ஒரு தனித்துவம் உடைய நாளாக தான் இருக்கின்றது அதுவும் ஆடி வெள்ளி சொல்லிக்கொள்ளவே தேவையில்லை மிகுவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கின்றது.

அம்மன் என்பதற்க்கு மட்டும் காரணமில்லை சுக்கிரன் தான் இதற்கு அதிக காரணமாக இருக்கின்றார். அந்தந்த நாளை அந்த கிழமையின் அதிபர் அதிகமாக முடிவு செய்கிறார் அந்த வகையில் வெள்ளிக்கிழமை  சுக்கிரனின் நாளாக வருகின்றது அல்லவா.

சுக்கிரன் என்றாலே அள்ளி அள்ளி கொடுப்பவர் அல்லவா. சுக்கிரனின் காரத்துவம் உடைய அம்மன் வழிபாடு செய்யும்பொழுது சுக்கிர கிரகம் நன்றாக பலம் அடைந்து நமக்கு நிறைய செல்வவளம் கிடைக்கிறது.

செல்வத்திற்க்குரிய மகாலட்சுமி பூஜை எல்லாம் வெள்ளிக்கிழமை தானே செய்கிறார்கள். அந்தளவுக்கு செல்வவளத்தை அள்ளிக்கொடுக்கின்ற ஆற்றல் பெற்ற கிரகம் சுக்கிரன் கிரகம்.

நம்மால் வெள்ளிக்கிழமை அன்று ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நமக்கு எப்படியாவது ஒரு வழியில் செல்வவளம் வந்துக்கொண்டே இருக்கும். இதுவரை செய்யாமல் இருந்தாலும் இனிமேலாவது ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 4, 2016

கட்டண சேவையில் மாற்றம்


ணக்கம்!
          நமது ஆன்மீக அனுபவங்கள் என்ற பதிவைப்பற்றி உங்களுக்கு தெரியும். ஜாதககதம்பம் போல தனிப்பதிவாக அதனை எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஆன்மீக கருத்துக்கள் ஜாதககதம்பத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஆன்மீக அனுபவங்கள் கட்டணத்தை செலுத்தி படிப்பது போல கொண்டு வந்து ஒரு வருடங்கள் ஆகிவிட்டது.

ஆன்மீக அனுபவங்கள் ஒரு வருடத்திற்க்கு பனிரெண்டாயிரம் பணம் என்று சொல்லிருந்தேன். அதனை கட்டி பல நண்பர்கள் படித்து வருகின்றார்கள். வருடம் வருடம் பனிரெண்டாயிரம் பணம் செலுத்தவேண்டும் என்று சொல்லிருந்தேன்.

முழுவதும் அதனை மாற்றி விருப்ப சந்தாவாக மாற்றிக்கொண்டு வந்துவிட்டேன். ஒரு வருடத்திற்க்கு பனிரெண்டாயிரம் ரூபாய் பணம் கட்டிவிட்டால் அதன்பிறகு வரும் வருடத்திற்க்கு விருப்ப சந்தாவாக மாற்றிவிட்டேன். ஒரு வருடத்திற்க்கு நீங்கள் கட்டிவிட்டால் அதன் பிறகு வரும் வருடங்களில் நீங்கள் விருப்பட்டு கட்டலாம் அல்லது கட்டாமலும் படிக்கலாம். இணைப்பு துண்டிக்கபட மாட்டாது.

ஜாதககதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் கட்டணபதிவில் இணைந்துக்கொள்ளுங்கள். நிறைய நல்ல விசங்கள் அதில் இருக்கின்றது. நன்றாக தெரிந்துக்கொள்ளமுடியும் அதோடு பயிற்சியும் செய்துக்கொள்ளலாம்.

என்னால் முடிந்தளவுக்கு அனைத்தையும் பணம் இல்லாமல் செய்துக்கொடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன். ஆன்மீக அனுபவங்கள் பதிவையும் இலவசமாக கொடுக்கலாம் ஆனால் ஏற்கனவே பணம் கட்டி படித்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒரு முறை நீங்கள் பணம் கட்டிய பிறகு தொடர்ந்து படிப்பது போல் செய்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு