Followers

Friday, October 21, 2016

செவ்வாய் பரிகாரம்


ணக்கம்!
          ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பதிவையாவது தந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் எதிரபாராத வேலை காரணமாக பதிவை தொடர்ந்து அதிகமாக கொடுக்கமுடிவதில்லை.

தற்பொழுது செவ்வாய் பரிகாரத்திற்க்கு வரும் ஜாதகங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனிதனியாக அனைத்தையும் பார்த்து அதற்கு பதிலை அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். 

செவ்வாய் பரிகாரத்திற்க்கு இதுவரை எதிர்பார்த்த ஜாதகங்கள் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். இதனைவிட பெரும்பாலும் வந்த ஜாதங்களில் செவ்வாய் கிரகம் நன்றாக இருக்கின்றது.

கோபத்தை மட்டும் கொஞ்சம் செவ்வாய் தரும் அதனை நாம் புரிந்துக்கொண்டு அதற்கு என்று உள்ள வழிமுறையை தேர்ந்தெடுத்தாலே போதும். செவ்வாய் கிரகத்தின் அதிக பாதிப்புகள் பெற்ற ஜாதகங்கள் வரவில்லை அதற்கு காரணம் அந்த கிரகத்தின் தாக்கம் அதாவது கர்மவினை விடவில்லை.

ஒரு ஹோட்டலுக்கு சென்று நாம் சாப்பிட்டால் அதாவது சைவ உணவகத்தில் சாப்பிட்டால் கூட குறைந்தது ஐநூறு ரூபாய் வைக்கவேண்டும் ஆனால் நாம் ஒரு கோவிலுக்கு சென்று இரண்டு ரூபாய் தீபம் ஏற்ற யோசிப்போம். உங்களின் கர்மவினை அப்படிப்பட்டது. 

செவ்வாய்கிரகத்தின் பாதிப்பு நாம் செய்யும் பரிகாரத்தில் கண்டிப்பாக குறையும். அனைவரும் இதில் பங்குக்கொள்ள தங்களை அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: