Followers

Saturday, October 22, 2016

சனி செவ்வாய் மற்றும் சந்திரன்


ணக்கம்!
          சனிக்கிரகம் மற்றும் செவ்வாய் கிரகம் இணைந்தால் அவர்களின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசப்படும் என்று உங்களுக்கு தெரியும். இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து இருப்பதை விட இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து சந்திரனை பார்ப்பது என்பது கொஞ்சம் அதிபயங்கரமான விளைவு ஏற்படுத்திக்கொடுக்கும்.

சந்திரனுக்கு எப்பொழுது பாவக்கிரகங்களின் பார்வை விழக்கூடாது. அதே நேரத்தில் செவ்வாயும் சனியும் எதிரி கிரமாக இருக்கின்றது. இது இரண்டும் இணைந்து சந்திரனை பார்க்கும்பொழுது தான் பிரச்சினை.

இவர்களின் வாழ்க்கையில் எந்தநாளும் ஏதாவது ஒரு தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கும். ஒரு சில காலங்களில் இவர்கள் சும்மா இருந்தால் கூட இவர்களை சுற்றி யாராவது தொந்தரவு கொடுத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

இது பெரிய பிரச்சினை எல்லாம் கிடையாது. அதாவது எளிதாக எடுத்துக்கொண்டால் ஒன்றும் பிரச்சினை கிடையாது. இதனை பெரிதாக நினைக்கும்பொழுது தான் அதிக பிரச்சினை இருக்கின்றது.

மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருப்பதால் தான் பிரச்சினை. கொஞ்சம் இதனை கவனிக்காமல் விட்டால் கூட இது பெரிய அளவில் கொண்டு சென்று விட்டுவிடும்.

சனி செவ்வாய் என்றவுடன் சண்டை தான் வரும் என்பார்கள். ஒவ்வொருவரும் அரிவாள் எடுத்து வெட்டிக்கொண்டா இருக்கின்றார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது கொஞ்சம் வம்பு வருமே தவிர பெரிய அளவில் வராது.

சந்திரனுக்கு பிரச்சினை என்று வரும்பொழுது அடுத்தவர் ஒன்றை பேசினால் கூட அது நம்மை பற்றி தான் பேசுவார்களா என்று நினைக்க தோன்றும். அடுத்தவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று இருந்துவிட்டால் இது பிரச்சினை இல்லை.

இதற்கும் தற்சமயம் செவ்வாய் பரிகாரத்திற்க்கு பரிகாரம் செய்யப்படும். உங்களின் ஜாதகத்தை அனுப்பி கட்டணத்தை செலுத்துங்கள். ஆன்மீக அனுபவங்கள் படிப்பவர்களுக்கு செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று ஒரு சலுகை அளித்து இருக்கிறேன் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று அனுப்புவர்கள் தங்களின் கோரிக்கையை தெளிவாக விளக்கி சொல்லிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: