Followers

Monday, October 24, 2016

சந்திரனுக்கு பரிகாரம்


ணக்கம்!
          இந்த பதிவு ஆன்மீக அனுபவங்களில் வரவேண்டிய ஒன்று இதனை ஜாதககதம்பத்தில் ஏற்றிவிட்டேன். சந்திரனைப்பற்றி ஜாதககதம்பத்தில் நிறைய எழுதிக்கொண்டு இருப்பதால் இதனை இங்கேயே கொடுப்பது நன்றாக இருக்கும்.

சந்திரன் தான் மனக்காரன் இந்த உலகம் இயங்குவது சந்திரனால் தான் சொல்லவேண்டும். ஒவ்வொருவரின் மனதில் உருவாகும் ஆசைகளை தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது.

சந்திரனுக்கு பரிகாரம் பலர் கேட்பார்கள். சந்திரனுக்கு பரிகாரம் என்பது நம்மிடம் இருக்கும் ஒரு நல்ல விசயத்தை செய்தாலே போதுமான ஒன்று தான்.

நாம் வெட்டியாக இருக்கும் சமயத்தில் ஏதாவது நாம் பேசிக்கொண்டே இருப்போம். இந்த பேச்சை நிறுத்தினாலே போதும். சும்மா இருக்கும்பொழுது பேசுவது தான் வேலையாக இருப்போம். யாராவது இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மனதில் ஏதாவது ஒன்றை உருவாக்கி அதனை நாம் பேசிக்கொண்டே இருப்போம் அல்லவா. இதனை நிறுத்த பழகிக்கொள்ளுங்கள்.

இன்றைக்கு இருக்கும் பையித்தத்தை பார்த்தால் அவர்கள் ஏதோ ஒன்றைப்பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஒரு துறையில் இருந்து வேலை பார்த்து அல்லது படித்ததை வைத்து பேசுவார்கள்.

படித்தது அல்லது கற்றது தான் பிரச்சினையே. ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதற்கு என்ன தெரியும் ஒன்றும் தெரியாது. மனது எதனை வைத்து உருவாகிறது. படித்து படித்து இதுவரை பார்த்து பார்த்து வைத்ததை வைத்து உருவாகிறது. 

இன்றைக்கு சந்திரனோடு சேரும் கிரகத்திற்க்கு தகுந்தவாறு உங்களின் புத்தி வேலை செய்வதற்க்கு காரணம் எல்லாம் நீங்கள் கற்ற விசயத்தை வைத்து மனது அப்படியே அசைபோட்டுக்கொண்டு இருக்கின்றது. கற்ற விசயத்தை அசைபோடாமல் இருந்தால் எப்படி மனதிற்க்கு பையித்தியம் பிடிக்கும்.

சும்மா வீட்டில் இருந்தால் செல்போனை எடுத்துக்கொண்டு பேசிக்கொணடே இருப்பது அல்லது ஏதாவது ஒன்றை சிந்தித்துக்கொண்டே இருப்பது இதனை எல்லாம் விட்டாலே போதும். சந்திரனுக்கு என்று தனியாக பரிகாரம் செய்யவேண்டியதில்லை.

தெய்வத்தின் அருகில் தெய்வத்தின் அருளை ஒருவர் பெறவேண்டும் என்றால் இந்த மாதிரியான விசயத்தை கடைபிடித்து வரவேண்டும். மனதை விடும்பொழுது நீங்கள் தெய்வமாகவே மாறிவிடுகின்றீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: